India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை (ஏப்ரல் 10) சேலம் மாவட்டத்தில் உள்ள மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை மூட சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம் மாவட்டம் குமரகிரியில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. மேலும், இங்கு தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திர பாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மாவட்டம், மேச்சேரி மல்லிகுந்தம் பகுதியை சேர்ந்த கோகுல் சக்தி (21) இந்திய ராணுவத்தில் அக்னி பார் திட்டத்தின் கீழ் சேர்ந்து கடந்த 11 மாதமாக ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென இறந்ததாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்புக்கான காரணம் தெரியவில்லை எனவும், உடல் வந்த பிறகு தான் காரணம் தெரியும் என குடும்பத்தினர் தகவல்!
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக சேலம் மாவட்டம், ஆத்தூரில் இருந்து வடசென்னிமலை, ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் திருக்கோயில்களுக்கு வரும் ஏப்ரல் 11-ம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல், பங்குனி பௌர்ணமியை முன்னிட்டு, ஏப்.11, 12 தேதிகளில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிப்பு
சேலம், நாமக்கல் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இந்த சிறப்பு முகாம் வாடிக்கையாளர் சேவை மையங்களில் வரும் ஏப்ரல் 30-ம் தேதி நடைபெறுகிறது. மேலும் வாடிக்கையாளர்கள் இணையதளம் மூலம் தங்களின் கருத்துக்கள், பரிந்துரைகள், ஆலோசனைகள், புகார்கள் மற்றும் சேவை கோரிக்கைகளை பதிவு செய்யலாம். என சேலம் பிஎஸ்என்எல் இணை பொதுச்செயலாளர் சுபா தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள குவாரிகளுக்கு உரிமம் பெற விரும்புபவர்கள் இனிமேல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 2025-26 ஆம் ஆண்டுக்கான குவாரி உரிமம் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், ஏப்ரல் 15, 2025 முதல் https://www.mimas.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் நேற்று வரை எல்.கே.ஜி. முதல் 8-ம் வரை தமிழ், ஆங்கில வழி வகுப்புகளில் மொத்தமாக 7 ஆயிரத்து 487 மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளனர். இதில் சேலம் கல்வி மாவட்டத்தில் 3,653 பேரும், தாரமங்கலம் கல்வி மாவட்டத்தில் 3,834 பேரும் அடங்குவர். அதிகப்பட்சமாக 1-ம் வகுப்பு தமிழ்வழியில் 4,858 பேரும், ஆங்கில கல்வி வழியில் 1,745 பேரும் சேர்ந்துள்ளனர்.
மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் வரும் நாளை, (வியாழக்கிழமை) மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடம் உள்ளிட்ட இறைச்சி விற்பனை நிலையங்கள் செயல்படாது எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எடுக்கப்படும், விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கை.
சேலம் மாவட்டத்தில் Swiggy, Zomato போன்ற ஆன்லைன் தொழிலாளர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ உதவித் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் மூலம் உடல்நலக் குறைவு ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை எடுத்து கொள்ளலாம். இதற்கான சிறப்பு முகாம் வரும் 17-ம் தேதி வரை கோரிமேடு தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.(ஷேர் செய்யவும்)
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி ஏரியில் இன்று (ஏப்.8) தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற சிறுவன் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தார். சிறுவனின் நண்பர்கள் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.