India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலின் பாதிப்பு பெரிய அளவில் இல்லை. சீதோஷன நிலை மாற்றம் காரணமாக சிலருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், குழந்தைகளுக்கு காய்ச்சல் வந்தால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
108 ஆம்புலன்ஸ், தமிழ்நாடு 102,155377 வாகனங்களில் ஓட்டுநர்கள் வேலை மற்றும் 108 ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 7ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை பி எம் எஸ் எஸ் ஒய் ஹால், (PMSSY HALL) சேலம் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. மேலும் விவரங்கள் அறிய 8925941586, 8925941578 எண்களை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.
இந்தியாவில் முதல் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த நாள் செப்டம்பர் 5ஆம் தேதி ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல ஆசிரியர் விருது வழங்கப்படுகிறது. அதன்படி சேலம் மாவட்டத்தை சேர்ந்த 15 நல்லாசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விருதுகள் வழங்க உள்ளார்.
சேலம் மாவட்ட காவல்துறையினர் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மட்டுமின்றி பொதுமக்கள் சமுதாய முன்னேற்றத்திலும் கவனம் செலுத்தி வருகின்றனர். அதன்படி குழந்தை தொழிலாளர் முறையை முற்றிலுமாக ஒழித்து குழந்தை கல்வி கற்கும் திறமையை வளர்க்க வேண்டும், என வலியுறுத்தியுள்ளனர். குழந்தை தொழிலாளர் வைத்திருந்தால் 1098 புகார் தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுத்து குழந்தையை கல்விப் பயில வைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.
சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மரவள்ளிக் கிழங்கு அதிகளவில் பயிரிடப்படுகிறது. இருப்பினும் ஜவ்வரிசியின் விலை குறைவதால், இதன் மூலப்பொருளான மரவள்ளிக் கிழங்கின் விலையும் குறைந்து விடுகிறது. இதனால் மரவள்ளிக் கிழங்கிற்கு உரிய விலையின்றி விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் ரேஷன் கடைகளின் மூலம் ஜவ்வரிசியை வழங்க அரசு முன்வர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.
சேலம் மாநகர எல்லைக்குள் அரசியல் கட்சிகள் மற்றும் சங்கங்கள் பொதுக்கூட்டங்கள் நடத்தவோ, பேரணி மேற்கொள்ளவோ, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டங்கள் நடத்தவோ, குறிப்பிட்ட நாட்களுக்கு ஐந்து தினங்களுக்கு முன்னதாகவே சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் அனுமதி பெற வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
சேலம் மாநகராட்சியில் 3.09.2025-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று (செப்டம்பர்.03) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தமிழக காவல்துறை இயக்குனர் உத்தரவுப்படி, பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் கலந்து கொண்டு, பொதுமக்கள் அளித்த மனு மீதான விசாரணை நடத்தினார். இந்த முகாமில் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.