India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் நேற்றிரவு உயிரிழந்தநிலையில், இன்று (ஜூன் 20) காலை 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்தநிலையில், தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து இதுவரை 38 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள பேக்கரி கடையில் வேலை பார்த்து வந்த சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அய்யாவு என்ற செங்கோடன் (வயது 60) கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது உடல் அவரது சொந்த ஊரான இளம்பிள்ளையில் இன்று அடக்கம் செய்யப்பட்டது.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நாளை (ஜூன் 21) நடைபெறுகிறது. முகாமில் திருநங்கைகள் தங்களது அடையாள அட்டை, ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதலமைச்சர் காப்பீட்டு அட்டை, சுயதொழில் மானியம், திறன் பயிற்சி உள்ளிட்ட சேவைகளை நேரடியாக பெரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு ஆட்சியர் பிருந்தா தேவி கேட்டுக் கொண்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில், சேலம் அரசு மருத்துவமனையில் தற்போது வரை 42 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாராயணசாமி, ராமு, சுப்பிரமணி ஆகிய 3 பேர் நேற்று நேற்றிரவும், ஆனந்தன், ரவி, மனோஜ்குமார், ஆனந்த், விஜயன் ஆகிய 5 பேர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்நிலையில், நாகபிள்ளை என்பவரும் தற்போது உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.
சேலம் மாநகராட்சியில் மாதந்தோறும் இயல்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். கடந்த பிப்ரவரி மாத கூட்டத்துக்கு பிறகு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்ததால், மார்ச், ஏப்ரல், மே மாத கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்நிலையில், ஜூன் மாதத்திற்கான கூட்டம் நாளை காலை 11 மணிக்கு மாநகராட்சி அலுவலக கூடத்தில் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடக்க உள்ளதாக கமிஷனர் பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலிருந்து கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வருவோரி எண்ணிக்கை 31 ஆக உள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி சேலம், கள்ளக்குறிச்சியில் சிகிச்சையில் இருந்த 33 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
நடைபெற்று முடிந்த சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிட்ட டி.எம்.செல்வகணபதி வெற்றி பெற்றார். இதையடுத்து, இந்தியா கூட்டணி செயல் வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் சேலம் ஐந்து ரோடு தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. நிகழ்வில், செல்வகணபதி கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார். உடன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அரசின் நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் தடையின்றி விரைவாக மக்களை சென்றடையும் வகையில், மாவட்ட ஆட்சியர்கள், உயர் அதிகாரிகள் தலைமையில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டம் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று காலை 9 மணிக்கு சேலம் மாவட்டம் தலைவாசலில், மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில், இத்திட்டம் நடைபெற உள்ளது. இதில், பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஒகேனக்கல் முதல் பூம்புகாா் வரை காவிரி ஆற்றின் கரையில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணிக்கான முதல் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் இன்று (ஜூன் 18) நடைபெற்றது. அமைச்சர் மெய்யநாதன், கிரீன் நீடா சுற்றுச் சூழல் அமைப்பு மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து முன்னெடுக்கும் இப்பணியை வரும் செப்டம்பரில் தொடங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் இன்று (ஜூன் 18) ஜமாபந்தி முகாம் தொடங்கியுள்ளது. அதன்படி, அஸ்தம்பட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற முகாமை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி நேரில் பார்வையிட்டு, பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும், மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.