India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் சூரமங்கலம் பகுதியில் நடைபெற்று வரும் பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், வீரபாண்டி ஆறுமுகம் இருந்திருந்தால் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கண்டிப்பாக கிடைத்திருக்கும் என்றும் அவர் இருந்திருந்தால் திமுக தலைமையிடம் சண்டையிட்டாவது பெற்று தந்திருப்பார் என்றும் மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திற்கு புகழாரம் சூட்டினார்.

“வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 33 பேரை இலங்கை கடற்படை கைது செய்ததுடன், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மத்திய அரசும் காலம் தாழ்த்தாது உடனடியாக இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சேலம் அரிசிபாளையத்தை சேர்ந்தவர் வெள்ளி தொழிலாளி பால்ராஜ். இவரது மனைவி ரேகா. இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். இவர்கள் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீடு கட்டியதாக தெரிகிறது. இந்நிலையில் வெள்ளித் தொழில் நலிவடைந்து வங்கிக் கடனை முறையாக திரும்ப செலுத்தவில்லை என்பதால், வங்கியாளர்கள் தொடர்ந்து பணம் கட்ட கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த பால்ராஜ் குடும்பத்துடன் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

“மாணவர்கள் வகுப்பறை பாடங்களை தாண்டி அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். தொலைத்தொடர்பு, விண்வெளித்துறைகளில் அதிக வேலைவாய்ப்பு உருவாகி கொண்டுள்ளது; வரும் காலத்தில் நிலவில் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்கும் வாய்ப்பு உருவாகிக் கொண்டு உள்ளது. இது உலக அமைதிக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்” என சேலத்தில் இஸ்ரோ Ex விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேட்டிளித்தார்.

சேலம் மாவட்டத்தில் (ஜனவரி 28) இன்றைய முக்கிய நிகழ்வுகள். 1) காலை 10 மணி பாட்டாளி மக்கள் கட்சி கலந்தாலோசனை கூட்டம். டாக்டர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு – இரும்பாலை ரோடு .2) காலை 10 மணி சாலை பாதுகாப்பு வார விழா விழிப்புணர்வு நிகழ்ச்சி – கொண்டலாம்பட்டி 3) மாலை 5 மணி விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுக்கூட்டம் – கோட்டை மைதானம்.

சேலம் கோட்டம் சார்பில் முக்கிய பண்டிகை மற்றும் வார விடுமுறை நாட்களில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை (ஜன.29) தை அமாவாசையை முன்னிட்டு சேலம் மற்றும் தர்மபுரி பகுதிகளில் இருந்து மேட்டூர், மாதேஸ்வரன் மலை ஆகிய பகுதிகளுக்கும், சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை மற்றும் சித்தர் கோவில் ஆகிய ஊர்களுக்கு 35 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இந்திய அஞ்சல் துறையில், தமிழ்நாட்டில் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலத்தில் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்காக https://www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தும், The Senior Manager, Mail Motor Service, No.37, Greams Road, Chennai 600006 முகவரிக்கு தபால் வழியாகவும் அனுப்பலாம். கடைசி தேதி 08.02.2025 ஆகும்.

சின்னசீரகாபாடி, மதுரையான் காடு பகுதியை சேர்ந்த கந்தசாமி மனைவி சின்னத்தாயி (88). இவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் காலை நீண்ட நேரம் ஆகியும் சின்னதாயி வெளியே வராததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் பார்த்த பொழுது வீட்டில் ரத்த காயத்துடன் சின்னத்தாயி இறந்து கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்ட போலீசார் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில்,”தொலைதூர அல்லது இரவு நேர பயணங்களின் போது, போதுமான அளவு ஓய்வுக்கு பின் பயணததை மேற்கொள்ளுங்கள். அசதியில் வாகனத்தை இயக்கி ஆபத்திற்கு ஆளாக வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 27-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்
Sorry, no posts matched your criteria.