Salem

News June 23, 2024

பாமக எம்எல்ஏ தந்தை மறைவு- முதல்வர் இரங்கல்

image

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாமக மாநகர் செயலாருமான இரா.அருளின் தந்தை இராமதாஸ் இன்று உயிரிழந்தார். இதனை அறிந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், பாமக நிறுவனர் இராமதாஸ் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்தனர்.‌ மேலும் ஏராளமான பாமக நிர்வாகிகளும், பொதுமக்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

News June 23, 2024

ஆத்தூரில் சாராயம் பதுக்கியவர் கைது

image

சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் டிஎஸ்பி சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் நேற்று (ஜூன் 22) ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது கல்லாநத்தம் பகுதியில் உள்ள மலைகளில் சாராயம் பதுக்கி வைத்த சுரேஷ் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 40 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து ஆத்தூர் ஊரக காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News June 22, 2024

பீகார் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

image

கடந்த 2023-ஆம் ஆண்டு சேலம் பள்ளப்பட்டியில் உள்ள பருப்பு மில் சுற்றுச்சுவர் மீது ஏறி குதித்து அங்கிருந்த காவலாளியை கொலை செய்ததுடன், ரூபாய் 1,42,000 பணத்தைத் திருடிச் சென்ற வழக்கில், பீகாரைச் சேர்ந்த தொழிலாளி அமர்ஜித் குமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சேலம் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று (ஜூன் 22) தீர்ப்பளித்துள்ளது.

News June 21, 2024

சாலைப் பாதுகாப்பு குறித்த கலந்தாய்வு கூட்டம்

image

சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலும் தவிர்த்திட தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இதில் காவல்துறையினர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News June 21, 2024

சேலத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்

image

சேலம் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 21) நடைபெற்றது. முகாமில் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு திருநங்கைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்கிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.

News June 21, 2024

கள்ளச்சாராயம் – பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சங்கர் (38) என்பவர் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் சேலத்தில் மட்டும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

News June 21, 2024

சேலம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

image

சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அதிகாரிகளுடன் நடந்த இந்த ஆய்வு கூட்டத்தில், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல் மற்றும் பதுக்கி வைத்தல் போன்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால், அவர்கள் மீது காவல்துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News June 21, 2024

BREAKING: சேலத்தில் மேலும் 4 பேர் பலி

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில், தற்போது மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாகப்பிள்ளை, பாலு, வீரமுத்து, ராஜேந்திரன் ஆகிய 4 பேர் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்துள்ளனர். இதனால், சேலம் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 15 ஆகவும், மொத்த பலி எண்ணிக்கை 47ஆகவும் அதிகரித்துள்ளது. இதனால், கள்ளக்குறிச்சி கண்ணீரில் மூழ்கியுள்ளனர்.

News June 20, 2024

கள்ளச்சாராயம் தொடர்பான புகார் – ஆட்சியர் தகவல்

image

கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு 0427 2452202, 0427 1077, என்ற தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். மேலும் 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

கள்ளச்சாராய விவகாரம் – சிபிசிஐடி போலீசார் நேரில் விசாரணை

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி விசாரணை அதிகாரி குமார் தலைமையிலான போலீசார் தற்போது சேலம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!