Salem

News January 29, 2025

அதிமுக மாவட்டச் செயலாளர் விடுவிப்பு

image

அதிமுகவின் சேலம் மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாஜலம் இன்று (ஜன.29) முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் செல்வராஜ், சூரமங்கலம் பகுதிச் செயலாளர் பாலு ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

News January 29, 2025

வாகனம் ஓட்டிய 187 பேரின் லைசென்ஸ் ரத்து

image

சேலம், தர்மபுரியில் சிக்னலை மீறி இயக்கிய 41 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 44 பேர், சாலை விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்திய 45 பேர் உள்பட 187 பேர்களின் ஓட்டுநர் உரிமத்தை 3 மாதத்திற்கு தற்காலிகமாக ரத்துசெய்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பர்மிட், தகுதிச் சான்று இல்லாமல் வாகனங்களை இயக்கினால் அந்த வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

News January 29, 2025

குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி 

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அரசின் அனுமதியின்றி தனியாக பவுண்டேசன் தொடங்கியதாக துணைவேந்தர் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

News January 29, 2025

இளம் வல்லுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்ட கண்காணிப்பு அலகின் தற்காலிக பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் இளம் வல்லுநராக பணிபுரிய விண்ணப்பங்களை https://salem.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து, புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்டப் புள்ளியியல் அலுவலகம், 310, 3வது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சேலம் – 636 0OI என்ற முகவரிக்கு வரும் பிப்.07- க்குள் அனுப்ப வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 28, 2025

சேலம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில்குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும்அசம்பாவிதங்களை தவிர்க்கவும்சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.காவல்துறைஉட்கோட்டத்திற்குட்பட்டசேலம் ஊரகம்,சங்ககிரி,ஆத்தூர்,ஓமலூர்,மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில்காவல் அதிகாரிகள்ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இன்று 28-1-2025 இரவுரோந்து அதிகாரிகளின் விவரம்.

News January 28, 2025

நாதகவிலிருந்து மேலும் 500 பேர் விலகல்

image

நாம் தமிழர் கட்சியின் சேலம் மாவட்டம், மேட்டூர் சட்டமன்றத் தொகுதியின் துணைத் தலைவர் ரகு உள்பட 500 பேர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். பணம் கொடுத்து பொறுப்பு வாங்குபவர்களுக்கு தான் நாம் தமிழர் கட்சியில் முன்னுரிமை வழங்கப்படுவதாக ரகு குற்றம் சாட்டியுள்ளார்.

News January 28, 2025

பாமக ஒரு சமுதாயத்துக்கானது அல்ல: மருத்துவர் ராமதாஸ்

image

“பாமக ஒரு சமுதாயத்துக்கானது அல்ல; அனைத்து சமுதாய மக்களுக்கானது; பாமக அனைவருக்காகவும் பாடுபடும்; அதில் வஞ்சனையோ, ஏற்றத்தாழ்வோ இருக்காது. பெண்களே மெஜாரிட்டி வாக்காளர்கள்; அவர்கள் நினைத்தால் மாற்றம் கொண்டு வர முடியும்” என சேலத்தில் நடந்த பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசினார்.

News January 28, 2025

ஜன 31 எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

சேலம் ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், வருகின்ற 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஆட்சித் தலைவர் அலுவலகம் கூட்ட அரங்கில் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் எரிவாயு பதிவு, விநியோகம் ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை நுகர்வோர் கூட்டத்தில் தெரியப்படுத்தி தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

News January 28, 2025

ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்ற பாரா வீராங்கனை!

image

தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டுச் சங்கம் சார்பில் இந்திய பாரா ஒலிம்பிக் குழு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து நடத்திய 20வது மாநில சீனியர் பாரா தடகளம் சாம்பியன்ஷிப் 2025 போட்டியில் ரஷ்ய, பெண்கள் வட்டு எறிதல் பிரிவில் முதலிடம், பெண்கள் குண்டு எறிதல் பிரிவில் இரண்டாமிடம் வென்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவியை நேரில் சந்தித்து வாழ்த்துபெற்றார்.

News January 28, 2025

இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை – அன்புமணி 

image

சேலத்தில் பாட்டாளி மக்கள் சந்திப்பு கூட்டத்தில் பா.ம.க. தலைவர் மருத்துவர்.அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகையில்,”தியாகிகளுக்கு மணிமண்டபம் கட்டுகின்றனர்; அவர்களின் இடஒதுக்கீடு நோக்கம் நிறைவேறவில்லை; வரலாற்றில் வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். மேட்டூர் அணை உபரிநீரை வசிஷ்ட நதியுடன் இணைத்து ஏரி, குளங்களை நிரப்ப வேண்டும்” என தெரிவித்தார். 

error: Content is protected !!