India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், இன்று கோட்டை மைதானத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், தேமுதிக மாநகர் மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்க தவறிய ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்தும், கள்ளச்சாராய உயிரிழப்புகளை கண்டித்தும் தேமுதிகவினர் கோஷங்களை எழுப்பி முழக்கமிட்டனர்.
சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் காணிக்கை, நேற்று அறங்காவலர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில், கடந்த 5 மாதங்களில் 18.87 லட்சம் ரொக்கமாக பெறப்பட்டது. மேலும், 180 கிராம் தங்கம் மற்றும் 730 கிராம் வெள்ளி பொருட்களை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59ஆக உயர்ந்துள்ளது. மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜான் பாஷா (52) என்பவர், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், சேலம் மருத்துவமனையில் தற்போது 29 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சிபிசிஐடி போலீசார் இதுவரை, 21 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வந்த அதிமுக பிரமுகர் சுரேஷ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்தவர் என்பதும், இவர் மீது ஏற்கெனவே 40க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
அயோத்தியாப்பட்டணம் அருகே சந்தப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் (21)(கல்லூரி மாணவர்). இவர் நேற்று இரவு 10.30 மணிக்கு, அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, நிலைத்தடுமாறி எதிரே வந்த மினி டெம்போ மீது மோதியுள்ளார். இவ்விபத்தில் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி, மாற்றுத்திறனாளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு உரிய முறையில் நடவடிக்கை எடுத்து கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்தார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் இரா.மகிழ்நன் உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 59 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து, இன்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், சேலம் கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு, கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும், கள்ளச்சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சிறுத்தை ஒன்று பட்டியில் கட்டி வைத்திருந்த ஆடுகளை கடித்து கொன்றுள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், வனப்பகுதியில் உலாவி வரும் சிறுத்தையை பிடித்த மீண்டும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
குளித்தலை – பேட்டைவாயத்தலை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், சேலம்-மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 24, 27ஆம் தேதிகளில் சேலத்தில் இருந்து கரூா் வரை மட்டுமே இந்த ரயில் இயக்கப்படும் என்றும், அதே தேதிகளில் கரூரில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 57-ஆக உயர்ந்துள்ளது.
சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சாமுண்டி (70) என்பவர் இன்று (ஜூன் 23) தற்போது உயிரிழந்ததையடுத்து சேலம் மருத்துவமனையில் உயிரிழப்பு எண்ணிக்கை 19-ஆக அதிகரித்துள்ளது. மேலும்,
விஷச்சாராயம் அருந்திய 29 பேர் சேலம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.