India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ், சேலம் மாவட்டத்திற்கு 4,229 வீடுகள் கட்ட முதற்கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 30ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கிராம சபையில் இதற்கான ஒப்புதல் பெறப்பட உள்ளது என்றும், பொதுமக்கள் அனைவரும் அன்று தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் பயன்பாடற்ற பசுமையான ஏற்காட்டினை உருவாக்கி, சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பசுமை சூழலை பாதுகாத்திட சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முழு ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும் என சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் அனைத்து சுற்றுலா பயணிகளும் பசுமையான ஏற்காட்டினை உருவாக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வெளி மாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பேருந்துகள் தமிழகத்தில் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் மாவட்டம் மற்றும் சேலம் மாநகரம் உட்பட்ட 4 மாவட்டங்களில் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தடையை மீறி இயங்கிய 6 வெளி மாநில ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை செய்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாரயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. ஏற்கெனவே பலி எண்ணிக்கை 59 ஆக இருந்த நிலையில் இன்று(ஜூன் 26) காலை சேலம் அரசு மருத்துவமனையில் ரஞ்சித்குமார் என்பவரும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏசுதாஸ் என்பவரும் உயிரிழந்துள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி நேற்று(ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5க்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி இன்று (ஜூன் 25) தெரிவித்திருப்பதாவது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து மாநில அளவிலான விருதுகள் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்கும் விருதாளர்கள் https://awards.tn.gov.in என்ற வலைத்தளத்தில் விவரங்களை பதிவு செய்து ஜூலை 5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று (ஜூன் 25) நடைபெற்றது. இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் செயற்பொறியாளர் சேகர், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சங்கமித்திரை, உதவி இயக்குநர் (தணிக்கை) மதுமிதா, உள்ளிட்ட அலுவலர்கள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 28ஆம் தேதி காலை 10.30 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களது குறைகளை நேரிலும் விண்ணப்ப மூலமாகவும் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சேலம் மாநகரப் பகுதிகளில் டாஸ்மாக் மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரில் சேலம் மாநகர காவல்துறையினர், மாநகரம் முழுவதும் இன்று (ஜூன் 25) அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுபானங்களை பதுக்கி வைத்திருந்த 7 பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 120 மதுபாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் செல்வகணபதி இன்று நாடாளுமன்ற எம்.பி-யாக பதவி ஏற்றுக்கொண்டார். நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில், தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். செல்வகணபதி, சேலம் மக்களவைத் தொகுதிக்கு முதல்முறையாக எம்.பி-யாக பதிவியேற்றுள்ளார்.
Sorry, no posts matched your criteria.