Salem

News June 29, 2024

துணைவேந்தர் பதவிக் காலம் நீட்டிப்பு

image

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது ஊழல் குற்றச்சாட்டுகள், விதிமீறல்கள் என அடுக்கடுக்காக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அவருக்கு பதவி நீட்டிப்பு கிடைக்காமல் உரிய நடவடிக்கை எடுப்போம் என சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார். அவருடைய பதவிகாலம் நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில் 2025 மே.19 ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.

News June 28, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூன்.28) நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் மரு.பெ.மேனகா, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி ஆக்ரிதி சேத்தி, இணை இயக்குநர் ச.சிங்காரம்,கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.இரவிக்குமார், மாவட்ட நேர்முக உதவியாளர் ந.நீலாம்பாள் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.

News June 28, 2024

பத்ம விருது – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பன்முக திறமை உள்ளவர்களுக்கு குடியரசு தினத்தன்று பத்ம விருது வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுக்கு தகுதியுடைய நபர்கள்  https://padmaawards.gov.in என்ற இணையதள முகவரி மூலம் ஜூலை 21ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  

News June 28, 2024

விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் இன்று (ஜூன் 28) நடைபெற்றது. அதில், விவசாயிகள் நடப்பு காரீப் பருவத்திற்கு பயிர் காப்பீடு செய்து, எதிர்பாராத இடர்பாடுகளில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று விவசாயிகளுக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News June 28, 2024

சேலத்தில் 22 பேர் வீடு திரும்பினர்

image

கள்ளச்சாராய சம்பவத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 22 போ் வீடு திரும்பினா். கள்ளக்குறிச்சியில் கடந்த 18ஆம் தேதி 150க்கும் மேற்பட்டோா் கள்ளச்சாராயம் குடித்ததால், உடல் உபாதை ஏற்பட்டு விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 52 பேரில் 22 போ் உயிரிழந்தனா். 8 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

News June 28, 2024

சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும்

image

சேலம் விமான நிலையத்தை கொஞ்சம் நகா்த்த வேண்டும் என காங்., எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவனின் கோரிக்கையால் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. சேலத்தில் உள்ள விமான நிலையம் 6 மாதங்கள் தான் இயங்கும். மீதமுள்ள 6 மாதங்கள் மூடிவிடுவாா்கள். இதற்குக் காரணம் பயணிகள் வருகை இல்லாததுதான். எனவே, பயனுள்ள விமான நிலையமாக மாற்ற, அதை கொஞ்சம் நகா்த்தி ஈரோடுக்கும் சேலத்துக்கும் நடுவில் வைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

News June 27, 2024

பசுந்தாள் உர விதைகள் – விவசாயிகளுக்கு ஆட்சியர் தகவல்

image

மண்ணுயிர் காக்கும் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி இன்று (ஜூன்.27) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடைய நபர்களுக்கு 1 ஏக்கருக்கு 20 கிலோ விதைகள் வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற நேரடியாக உழவன் செயலியில் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

சேலம்: உர விற்பனை நிறுவனங்களுக்கு தடை

image

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு உரம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனிடையே உர ஆய்வு குழுவினர் வாழப்பாடி, ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், கெங்கவல்லி, தலைவாசல் உள்ளிட்டப் பகுதிகளில் உர விற்பனை நிலையங்களில் சோதனை செய்தனர். அதில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 9 நிறுவனங்களுக்கு தடை விதித்தனர்.

News June 27, 2024

சேலத்தில் நூலகம், அறிவுசார் மையம்: முதல்வர் ஸ்டாலின்

image

சேலம் மாவட்டத்தில் விரைவில் ஒரு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். பாமக எம்.எல்.ஏ அருள் கோரிக்கை வைத்ததையடுத்து, இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார். மேலும், அடுத்த நிதிநிலை அறிக்கையில் பாமக உறுப்பினர் முன்வைத்த கோரிக்கையை எதிர்பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News June 27, 2024

சேலத்தில் பலி எண்ணிக்கை 22ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்த சம்பவம் தமிழாக்கத்தை சோகத்தில் ஆழ்த்தியது. சேலம் அரசு மருத்துவமனையில் 48 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில், இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், நேற்று அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த கர்ணாபுரத்தை சேர்ந்த சரசு (52) என்ற பெண், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

error: Content is protected !!