India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் வழியாக ஒடிஷா மாநிலம் சம்பல்பூருக்குச் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் வரும் நவம்பர் 29 வரை இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில் சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, பெரம்பூர், குண்டூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் பொன்னியம்மாள் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். பொன்னியம்மாளிடம் இருந்த பணம், நகையை திருடுவதற்காக, அவரை கொண்று உடலை ஆற்றில் வீசி 2 சவரன் நகை, ரூ.500 பணத்தை திருடியது தெரியவந்தது. இக்கொலை வழக்கில் சித்துராஜ், மாரிமுத்து, தனுஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள அணைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகள் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, இனி கியூர் ஆர் குறியீடு மூலம் பணம் செலுத்தும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் சிரமமின்றி முன்பதிவு மற்றும் முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட்டுகளை எடுக்க முடியும்.
தேவகோட்டையைச் சேர்ந்தவர் சுப்ரமணியனை தொடர்பு கொண்ட கும்பல், ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள இரிடியம் செம்பு கிடைத்திருப்பதாகவும். அதனை விற்று தந்தால் பல லட்ச ரூபாய் கமிஷனாக தருவதாகவும் கூறியுள்ளனர். சேலம் சத்தியமங்கலம் வரவழைத்து 10,000 முன்பணம் பெற்று, போலி இரிடியம் செம்பை கொடுத்துள்ளனர். மோசடி கும்பலை தேடி வந்த போலீசார், சுந்தர பாண்டி, செம்புலிபிரபு ஜீனத் குமார் மூவரை கைது செய்தனர்.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல், சேலம் மாவட்டத்தில் உங்களை சுற்றி நடக்கும் உள்ளூர் நிகழ்சிகள், புகார்கள், கோரிக்கைகள், அரசியல், ஆன்மிக நிகழ்வுகளை செய்திகளாக பதிவேற்றி நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். செய்திகள் உடனுக்குடன் பதிவிட்டு வருவாய் ஈட்டலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 9642422022, 83400-22122 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். * உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்*
இந்திய சுதந்திர போராட்ட வீரரான ஒண்டிவீரனின் 253வது நினைவு நாளையொட்டி, சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி ஒண்டிவீரனின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அதிமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டு சுதந்திர போராட்ட வீரருக்கு மரியாதை செலுத்தினர்.
சேலம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியாகியிருக்கிறது. சேலம் தபால் துறையில் கிளை அஞ்சலக அலுவலர், கிளை உதவி அஞ்சலக அலுவலர், தபால்காரர் ஆகிய 140 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
சேலத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தேவூர் துணை மின் நிலையம், அஸ்தம்பட்டி துணை மின் நிலையம், தும்பல் துணை மின் நிலையம், கந்தம்பட்டி துணை மின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவனின் மாமனார் வி.சாம்பமூர்த்தி கடந்த 17ம் தேதி காலமானார். இதனையடுத்து சேலம் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சேலம் அரசினர் விண்ணப்பங்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கு வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து டாக்டர் இரா.பிருந்தாதேவி. தெரிவித்ததாவது: நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266 39467, 99427 12736, 99441 09416 மற்றும் 98432 75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். என்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.