India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 895 பெண்களுக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்டது. இவர்களுக்கான முதற்கட்ட உடற்தகுதி தேர்வு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 நாட்களாக நடந்தது. இதில் 450 பேர் பங்கேற்றனர். அவர்களில் 327 பேர் தேர்ச்சி பெற்று 2ம் கட்ட உடற்தகுதிக்கு தேர்வாகினர். இவர்களுக்கு நேற்று 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது.
சேலம் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் கோடைக்கால பயிர்களுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வெண்டை,
வெங்காயம், தக்காளி பயிர்களுக்கு வரும் ஆக.31 ஆம் தேதி வரை காப்பீடு செய்ய
அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதில், பிரிமீயம் தொகையாக ஒரு ஏக்கருக்கு வெண்டை ரூ.1,264, வெங்காயம் ரூ.2,050 மற்றும் தக்காளிக்கு ரூ.1,017 செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிவராமன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு கால் முறிவு ஏற்பட்டு கிருஷ்ணகிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று காலை அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை கட்சியின் தலைவர் நடிகர் விஜய் நேற்று அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றிய தலைமை சார்பில் மக்களிடம் கட்சியின் கொடியை காண்பித்து இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிகழ்வில் வாழப்பாடி ஒன்றிய தலைவர்விஜய், மனோஜ், மாதேஷ், கௌதம், சதீஷ், தினேஷ், வேலவன், கணபதி, கார்த்திக், விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சேலம் ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சேலம் மாவட்டம் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் எடப்பாடி, மேட்டூா், நரசிங்கபுரம் ஆகிய நகராட்சிப் பகுதிகளில் பணிபுரிய மூன்று சமுதாய அமைப்பாளா்கள் எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு மூலம் தோ்வு செய்யப்பட உள்ளனா். விண்ணப்பங்களை வரும் 30ம் தேதி மாலை 5 மணிக்குள் சமா்ப்பிக்கலாம் என தெரிவித்துள்ளாா்.
சேலம், இளம்பிள்ளை அருகே மடத்தூர் பகுதியில் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற இருப்பதால் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விழாவில் இன்று கலந்து கொள்ள இருப்பதால், இளம்பிள்ளை பகுதியில் தொண்டர்கள் உற்சாக வரவேற்பளிக்க காலை முதல் பரபரப்பாக கொடிக்கம்பங்கள் மட்டும் போஸ்டர்கள் வைத்தும் உற்சாக வரவேற்பு அளிக்க காத்துக் கொண்டுள்ளனர்.
சேலம், மேட்டூரைச் சேர்ந்தவர் “தேர்தல் மன்னன்” பத்மராஜன்(65). இவர் நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட 242முறை வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். தற்போது தெலுங்கானாவில் ராஜ்யசபா எம்.பி தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் அப்பதவிக்கு நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இது இவர் 243முறை வேட்புமனு தாக்கல் ஆகும். தேர்தல் செப்.3ஆம் தேதி நடக்கவுள்ளது.
சேலத்தில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடியினர் இனத்தை சேர்ந்த மாணவர்கள் தனியார் நிறுவனத்தில் 1 ஆண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி நிரந்தர வேலைவாய்ப்புடன், பட்டப்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு பெற்றுத்தரப்படும். ஊதியமாக ரூ.17,000 முதல் ரூ.22,000 வரை பெறலாம். இதில் பயன்பெற https://tahdco.com/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். 94450-29473 என்ற எண்ணை அழைக்கலாம்.
சேலத்தில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் இந்த ஆண்டு கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு “கிருஷ்ண தரிசனம் திருவிழா” என்ற பெயரில் சிறப்பு கண்காட்சி 19.08.2024 முதல் 30.08.2024 வரை நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அம்சமாக கிருஷ்ணர் திருவுருவம் கொண்ட களிமண், காகிதக்குள், மார்பில் துகள் பொம்மைகள், பஞ்சலோகம், பித்தளை, பருப்பு உலோக சிலைகள், நூக்க மர உட் பதிப்பு ஓவியங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளது.
மாணவர்களின் ஊக்குவிக்கும் நான் முதல்வர் திட்டத்தில் சிறந்த கல்லூரிகள் பட்டியலில் சேலத்தில் உள்ள தீராஜ் லால் காந்தி தொழில் நுட்ப கல்லூரி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழக இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் கல்லூரிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
Sorry, no posts matched your criteria.