India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சேலத்தில் விநாயகர் சிலைகள் விற்பனை நிலையத்தில் காவல்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். 10 அடிக்கு மேல் உள்ள சிலைகள், ரசாயனம் கலவை இல்லாத விநாயகர் சிலைகள் குறித்து சோதனை செய்தனர். 10 அடிக்கு மேல் சிலைகள் விற்கப்பட்டாலோ அல்லது பொது இடங்களில் வைக்கப்பட்டாலோ அந்த சிலைகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் சிறையில் இருக்கும் சிறை அலுவலர் ஒருவர் சிறைக்கு பயன்படுத்தப்படும் அரிசி பருப்பு உணவு பொருட்களை வெளியே விற்பனை செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனை அடுத்து சேலம் மத்திய சிறை சூப்பிரண்டு வினோத் நேற்று ஆத்தூர் சிறைக்கு சென்று சம்பந்தப்பட்ட சிலை அலுவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலிருந்து 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டுவருகின்றன. வார இறுதி நாள்கள், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சேலம் கோட்டம் சார்பில் பல்வேறு வழித்தடங்களில் ஆக. 24 முதல் வரும் ஆக. 27 வரை பயணிகளின் தேவைக்கேற்ப 300 சிறப்புப் பேருந்துகள், மாற்றுப் பேருந்துகள், தட நீட்டிப்பு, வழிதடப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. Share it
சேலம் தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (19), கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை நேற்று ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பெயரில் குமரேசன் மீது போலீசார் வழக்குப்பதிந்து கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று சேலம் கலெக்டர் பிருந்தாதேவி கூறினார். மாவட்டத்தில் உள்ள உயர் கல்வி பயிலும் தகுதியான மாணவர்கள் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளையும் அணுகி கல்விக்கடன் பெற்று பயன் பெறலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
சேலத்தில் கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உயர்க்கல்வி பயிலும் மாணவர்கள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் அனைத்து நகர கூட்டுறவு வங்கிகளை அணுகி ரூ.5 இலட்சம் வரை கல்விக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்கள் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது 150 சங்கங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து முதியோர் உதவித்தொகை, மகளிர் உரிமை தொகை ஆகியவை ஆதார் எண் மூலமாக கூட்டுறவு சங்கங்களில் பெறலாம் என சேலம் மாவட்ட கூட்டுறவு சங்க அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
மைசூரு- செங்கோட்டை இடையே சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செப். 04, 07 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து செங்கோட்டைக்கும், செப்.05, 08 ஆகிய தேதிகளில் செங்கோட்டையில் இருந்து மைசூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொது செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சேலம் அயோத்தியபட்டினம் தெற்கு ஒன்றிய செயலாளர் மெடிக்கல் ராஜா இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதில் சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டத்தில் எரிவாயு உருளை பதிவு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும் உள்ள குறைபாடுகள் மற்றும் புகாா்கள் தொடா்பாக எரிவாயு வாடிக்கையாளா்கள், எரிவாயு முகவா்கள் ஆகியோர்களை கொண்டு மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் எரிவாயு நுகர்வோர்களுக்கு ஆகஸ்ட் மாதத்துக்கான குறைதீா்க்கும் கூட்டம் ஆக. 29ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக அறை எண் 115 கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.
Sorry, no posts matched your criteria.