India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கேட்டு உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தான் சந்திக்க டெல்லி போவதாக ஊடகங்களில் வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை எனத் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் இன்றைக்கு கள்ளச் சாராயம் உயிரிழப்பு அதிகமாக உள்ளது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம், எடப்பாடியில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய போராடாமல் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை பற்றி நாடாளுமன்றத்தில் திமுக பேசுவதாகவும், இது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிப்பதாக என்றார்.
சேலம், எடப்பாடியில் இன்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிச்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு சிபிஐ விசாரணை கேட்டு அதிமுக நடத்திய உண்ணாவிரத போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் நாம் தமிழர் கட்சி உண்ணாவிரத போராட்டம் நடத்தினால், அதிமுக ஆதரவு தெரிவிக்கும் என்றார்.
சேலம் மாவட்டத்தில் ஜவுளிப் பூங்கா அமைத்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று ஜவுளித் தொழில் முனைவோர்களுடன் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை குறித்தும், அத்திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் தலைமையில், நேற்று ஆத்தூரில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வெற்றி பெறும் தொகுதி, அது எப்படி தோற்றுப் போனது என்று நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார். மேலும், வேலை செய்யாத நிர்வாகிகள் மாற்றம் செய்யப்படும் என்றும், வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்க உழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை 49,127 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஓமலூர் ஒன்றியத்தில் 4,286 பேர் உள்ளனர். மாவட்டத்தில் யாருடைய பெயரும் விடுபடாமல் கணக்கெடுப்புப் பணியைத் தொடர்ந்து நடத்தி, 100% எழுத்தறிவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் இதற்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டிற்கான GST வசூலில் சேலம் GST கோட்டம் சாதனை படைத்துள்ளதாக சேலம் GST ஆணையர் தெரிவித்துள்ளார். நேற்று ஜிஎஸ்டி பவனில் நடந்த ஜிஎஸ்டி விழாவில் பேசிய அவர், GST வசூலில் தமிழக மாநகராட்சி அளவில் சேலம் முதலிடம். சேலத்தில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. 2017-18 நிதியாண்டில் ரூ.1,358.31 கோடியும், 2023- 24 நிதியாண்டில் ரூ.3,970.71 கோடியும் வசூலானது எனத் தெரிவித்தார்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் பதவி நீட்டிப்புக்கு பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியார்களை சந்தித்த அவர், ஊழல் உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியவருக்கு ஆளுநர் பணி நீட்டிப்பு வழங்கியது ஏற்கத்தக்கதல்ல என்றும், போலி ஆவணம் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்த அவர் மீது கடும் குற்றச்சாட்டுகள் உள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 50% மானியத்தில் 250 எண்ணிக்கையிலான நாட்டுக்கோழி பண்ணை அமைக்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் (ஜூலை 05)-க்குள் தங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்ட விளக்கங்களை பெற்று உரிய படிவத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு கூறினார்.
சேலம் மாவட்டத்தில் அஞ்சலக சிறுசேமிப்புத் திட்டங்களில் மாநில மற்றும் மாவட்ட அளவில் வசூல் செய்து சாதனை புரிந்த அஞ்சலக சிறுசேமிப்பு முகவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று (ஜூலை.1) நினைவுப் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சிறுசேமிப்பு) எம்.முரளிதரன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.