India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டம் சரக்கு போக்குவரத்தில் 2024 ஏப்ரல் மாதம் முதல் 2024 ஜூன் மாதம் வரை 6,97,549 டன் சரக்குகளை ஏற்றப்பட்டு ரூபாய் 70.3 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இதே போல் பார்சல் மூலம் 4,87,78,000 ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. கடந்த ஆண்டு விட 5.37% வருவாய் அதிகரித்துள்ளது என சேலம் கோட்டம் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியினர் டெபாசிட் கூட வாங்க முடியாது என ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “நாதகவினர் எப்போதும் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், பாமக வேட்பாளர் நிச்சயம் தோற்பார் என்பதால், தற்போது மக்களை திசை திருப்புவதற்காக வன்முறையை கையில் எடுத்துள்ளனர். அநேகமாக பாமகவுக்கு இதுதான் கடைசி தேர்தலாக இருக்கும் எனக் கூறினார்.
சேலம் ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில், ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் சரக்கு ரயில்கள் மூலம் ரூ.70.03 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அதிகப்படியாக பெட்ரோலிய பொருள்கள், சிமென்ட், இரும்பு, எஃகு பொருள்கள் .1 லட்சத்து 26 ஆயிரத்து 251 பார்சல்கள் அனுப்பப்பட்டு, ரூ.4.78 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. மேலும், கொள்கலன்கள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் அதிமுக நிர்வாகி சண்முகம் (62), கடந்த 3ஆம் தேதி இரவு மர்ம கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமார் உள்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில், திமுக கவுன்சிலர் தனலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், அவர் கேரள மாநிலம் பாலக்காட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில், நாளை முன்னாள் முதல்வர் இபிஎஸ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆகியோர்களுடன் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், கட்சி வலுப்படுத்துவது, வார்டு வாரியாக அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் விவரம் குறித்து ஆலோசனை நடத்தபட உள்ளது என்றும், இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சேலம் மாவட்டத்திற்கு 124 நிறுவனங்களுடன் ரூபாய் 1,638.91 கோடி மதிப்பீட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது 80 நிறுவனங்கள் மூலம் ரூபாய் 1,039.40 கோடி மதிப்பீட்டில் முதலீடு செய்து 2,057 வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 -ல் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்ட சேலம், கள்ளக்குறிச்சி, தருமபுரி, நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பான மண்டல அளவிலான ஆலோசனைக்கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் இரா. பிருந்தாதேவி தலைமை வகித்தார். உடன் துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி- ராமேஸ்வரம் சிறப்பு ரயில் சேவை, வரும் டிசம்பர் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை, இந்த சிறப்பு ரயில் பாம்பன் ரயில் பாலம் வழியாக இயக்கப்படாது எனவும், ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்தில் இயக்கப்படாது என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரம் வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக பகுதிச் செயலாளர் சண்முகம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்ததில், திமுக கவுன்சிலரின் கணவர் சதீஷ், அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறையினர், 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவரை சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் இன்று மாலை முதல் சுமார் 1 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
Sorry, no posts matched your criteria.