India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது சிறுமி, அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுத்து, உச்சபட்ச தண்டனை கிடைக்கப் பெறுவதை உறுதிசெய்ய வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் அம்மாப்பேட்டையில் சிவகாமி திருமண மண்டபத்தில், புனித அன்னை தெரசா மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில், அதிக வட்டி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக, 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட 216 பேர் புகார் தந்துள்ளதாகவும், தாங்கள் செலுத்திய ரூ.4.31 கோடியை திரும்பப் பெற்றுத் தருமாறு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் தந்துள்ளனர்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் Deputy Chief Financial Officer, Agricultural Officer, Global NRI Center Head பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க் <

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இன்று (பிப்.05) வரை ஏரோ விமான சாகச நிகழ்ச்சி நடக்கிறது.இதனால் ஞாயிறுக்கிழமை, திங்கள்கிழமை,புதன்கிழமை, வெள்ளிக்கிழமையில் பெங்களூருவில் இருந்து சேலம் இயக்கப்படும் இண்டிகோ விமானம், அந்நிகழ்ச்சிக்கேற்ப தாமதமாக இயக்கப்படும்;அதேபோல், ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை,புதன்கிழமை, வியாழக்கிழமை,வெள்ளிக்கிழமை சேலத்துக்கு இயக்கப்படும் அலையன்ஸ்ஏர் விமானமும் தாமதமாக இயக்கப்படும்

சேலம்,காட்டுவளவை சேர்ந்தவர் குமரவேல் (29),அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு நெருக்கமாக இருந்துள்ளார். அப்பெண்ணுக்கு பிரகாஷ் (38) என்பவருடனும் பழக்கம் இருந்துள்ளது.இதனால் ஏற்பட்ட மோதலில் மோதலில் குமரவேல் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இக்கொலையில் ஈடுபட்ட பிரகாஷ்,உள்ளிட்ட 3 பேர் கைது. சேலத்தில் ஒரே பெண்ணுக்காக நடந்த கொலை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பிப்ரவரி 5 இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 9:30 மணி தமிழ்நாடு பாண்டிச்சேரி குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நீதிமன்றம். 2) காலை 9:30 மணி இந்திய கைத்தறி கழகத்தின் மாணவர்களுக்கான விளையாட்டு விழா 3) காலை 10 மணி மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்ட முகம் ராமநாயக்கன்பாளையம்.4) காலை 10 மணி சார் பதிவாளர் அலுவலகம் முற்றுகை பாமக எம்எல்ஏ சூரமங்கலம்

சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு விளக்க அளித்துள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் மருத்துவமனையின் பணியிலிருந்த காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாகப் பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பாட்டர். இந்த பழைய காணொளி தற்போது பரவிவருகிறது என தெரிவித்துள்ளது.

சேலத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூபாய் 2.70 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரங்களில் உள்ளதை உள்ளதைப்போல பைன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சேலம், ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில். வெண்ணங்கொடி என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் வெண்ணங்கொடி முனியப்பன் என பெயர் வந்தது. இங்கு அமாவாசை, பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், இங்கு ஞாயிறு தோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். சேலம் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. (Share பண்ணுங்க)

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சேலம் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த த.வெ.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ பார்த்திபன், அசைவ பிரியாணியுடன் கூடிய அசைவ விருந்து வைத்து அசத்தினார்.
Sorry, no posts matched your criteria.