India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
குழந்தை திருமணம் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அதற்கான ஏற்பாடுகளை செய்தவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதத்துடன் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என கலெக்டர் ரா.பிருந்தாதேவி எச்சரித்துள்ளார். மேலும், விவரங்களுக்கு மாவட்ட குழந்தைகள் நலக் குழு கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரையை 99409-91160 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் போது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.20 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாநகரில் இன்று(20.3.25) இரவு 11 முதல் காலை 6 மணி வரை சேலம் டவுன், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி ஆகிய உட் கோட்டாவில் இரவு ரோந்து பணிகளில் ஈடுபடும் காவலரின் விவரங்கள் மேலே குறிப்பிட்டுள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் தங்களது அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்தில் அழைக்கலாம். தொடர்பு எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலின் புதிய தேரோட்டம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள, சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில், அதனை விசாரித்த நீதிபதிகள், தேரோட்டம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யவும், அரசாணையினைப் பின்பற்றவும் இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர்.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, வரும் மார்ச் 30- ஆம் தேதி சேலம் வழியாக சென்னை சென்ட்ரலில் இருந்து போத்தனூருக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 31- ஆம் தேதி போத்தனூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில்கள், சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டில் தடைச் செய்யப்பட்ட குட்கா, புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 1,236 கடைகளுக்கு ரூபாய் 3.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அனைத்து கடைகளிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. குட்கா, புகையிலை பொருட்களை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஜான் என்பவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பூபாலன், சரவணன், கார்த்திகேயன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 5 பேர் இன்று (20.03.2025) கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தில் இருந்த பார்த்திபன், அழகரசன், சேதுவாசன், பெரியசாமி, சிவக்குமார் ஆகிய 5 பேரை சித்தோடு போலீசார் கைது செய்துள்ளனர்.
வார இறுதி நாட்களையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் நாளை (மார்ச் 21) முதல் மார்ச் 24- ஆம் தேதி வரை 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்று சேலம் கோட்ட போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலத்தில் இருந்து சென்னை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடைப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான அங்கமுத்து (45). இவர் கடந்த ஐந்தாம் தேதி இரவு டாஸ்மாக் பாரியில் இருந்தார். அப்போது அங்கு வந்த 2 இளைஞர்கள் அவரிடம் மது அருந்த பணம் கேட்டனர். அவர் தர மறுத்தார். இதில் ஆத்திரமடைந்த இருவரும் அங்கமுத்துவை கல்லால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து, தன பிரபு, பேரரசு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சேலம் மாவட்டம், மேட்டூர் தொகுதி, 207ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த வித்யா வீரப்பன் (18574358150) , நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார். இவருக்கு, அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.