India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம்: மேட்டூர் கேம்ப் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் மணிகண்டன் ( 27) என்பவரை ஒரு கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இந்தச் சம்பவம் தொடர்பாக கருமலைக்கூடல் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து நடத்திய தீவிர விசாரணையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் சிக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பிடிபட்ட அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை 9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இந்த செய்தியை நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும்.அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

சேலம்: ஓமலூர் அருகே உள்ள கொங்குபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (41). இவரது மகன் பவித்ரன் (15) அருகே உள்ள தோட்டத்தில், மலம் கழித்து விட்டாதாக கூறப்படுகிறது. இதனை கண்ட தோட்டத்தை குத்தகைக்கு எடுத்துள்ள ரமேஷ் (51) என்பவர் சிறுவனை மலம் அள்ள வைத்தாக தீவட்டிப்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொண்ட போலீசார் போலீசார், வன்கொடுமை சட்டத்தில் ரமேஷை கைது செய்தனர்.

சேலம், கோட்டையை சேர்ந்தவர் ஜாபீர் (40) என்பவர் நேற்று முன்தினம் அண்ணா மேம்பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த குமாரசாமிப்பட்டியை சேர்ந்த வினோத் (30) ஓட்டி வந்த யமஹா பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டது. இருவரும் ஹெல்மெட் அணியாததால் படுகாயம் அடைந்தனர். இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜாபீர் உயிரிழந்தார். விபத்து குறித்து அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிவிப்பின்படி, மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும். இந்த முகாமில் முதலமைச்சர் காப்பீட்டு திட்டம், முதியோர் பென்ஷன், மற்றும் மக்களுக்கு தேவையான 30க்கும் மேற்பட்ட அரசு துறை சேவைகள் வழங்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர் மற்றும் மேட்டூர் பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், பொதுமக்களை பாதுகாக்கவும் காவல்துறை அதிகாரிகள் தினமும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று (அக்டோபர் 16) இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சேலம் மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1. ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2. CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5. புது போட்டோவை பதிவிறக்கவும், 15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க!

மேட்டூர் அருகே கொளத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ள கோட்டையூர் பரிசல்துறை அருகே, அடையாளம் தெரியாத நிலையில் தோல் உரிந்த ஆண் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 60 வயதாக இருக்கும் என கூறப்படுகிறது. அந்த ஆண் சடலத்தை, காவல்துறையினர் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.