India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகர் பகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்து அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை -பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செப்.2) முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படவுள்ளது. அதிகாலை 05.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 09.15 மணிக்கு சேலத்தை வந்தடையும். மறு மார்க்கத்தில், மாலை 04.50 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். சுமார் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஆயில் வீணாகியது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்து. பேசும்போது”எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன். எவ்வளவு தோண்டுபோனாலும் தன்னம்பிக்கை விட மாட்டேன் என்று மனம் திறந்து பேசினார்.
சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி சாலையில் லாரி மீது மின் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில், ஆட்டோவில் இருந்த திருச்சி மாயனூரைச் சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில், ஓட்டுநர் மூர்த்தி உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 25 சுங்கச்சாவடிகளில் செப்.1 முதல் சுங்க கட்டணம் 5 முதல் 7 சதவீதம் வரை உயா்த்தப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி, உளுந்தூா்பேட்டை, சமயபுரம், மதுரை எலியாா்பத்தி, ஓமலூா், ஸ்ரீபெரும்புதூா், வாலாஜா உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் இந்த கட்டண உயா்வு அமல்படுத்தப்படுகிறது. சுங்கக்கட்டண உயா்வால் வாகன ஓட்டிகள் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஷேர் பண்ணுங்க
பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் இன்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. இதில் மழைநீர் வடிகால், சாலை சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
வார இறுதி விடுமுறையை முன்னிட்டு, சேலத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடந்து வரும் அரசுப் பொருட்காட்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். அதைத்தொடர்ந்து மேலும் அரசுப் பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளைப் பார்வையிட்டும், ராட்டினங்களில் சவாரி செய்தும்
பொதுமக்கள் மகிழ்ந்தனர். தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் ரயில் நிலையத்தில் இருந்து பெங்களூருவுக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூபாய் 608 ஆகவும், எக்ஸிகியூடிவ் வகுப்பில் பயணிக்க ரூபாய் 1,211 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் இருந்து மதுரைக்கு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலில் சாதாரண வகுப்பில் பயணிக்க ரூ. 792 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.