India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு, பயணிகளின் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வரும் செப்.06ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து கோவைக்கும், செப்.08ம் தேதி கோவையில் இருந்து சென்னை சென்டரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் Way2News நிருபராக மாற விருப்பமும், ஆர்வமும் உள்ளதா? உங்கள் பகுதிகளில் பகுதிகளில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை செய்திகளாக பதிவிட்டு கூடுதல் வருவாய் ஈட்டுங்கள். நீங்கள் அனுப்பும் ஒவ்வொரு செய்திக்கும் உரிய ரூபாய் வழங்கப்படும். உங்கள் ஊரின் நிருபராக மாறுங்கள் கூடுதல் வருவாய் ஈட்டுங்கள்! இப்போதே நிருபராக பதிவு செய்யவும். தொடர்புக்கு 91603 22122
சேலம் வழியாக எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , கர்நாடகா மாநிலத்தில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயிலை அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வே. செப்.04, 06 ஆகிய தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து எலகங்காவுக்கும் , செப்.05, 07 ஆகிய தேதிகளில் எலகங்காவில் இருந்து எர்ணாகுளத்திற்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சேலம், ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, கடந்த 2016- ல் ரியோடிஜெனிரோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கமும், 2021- ல் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்திய நிலையில், தற்போது பாரிஸில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைப்பாரா? என்ற எதிர்பார்ப்பில் சேலம் மக்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.
சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் வேகமாக சென்றதால் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பேருந்துகளின் கண்ணாடிகள் சேதமடைந்தது. பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவ்விபத்து குறித்து தகவலறிந்த காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்ததுடன், விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக காவல்துறையில் புதிதாக 444 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்திற்கு 10 காவல் உதவி ஆய்வாளர்களும், மாநகரத்திற்கு 6 காவல் உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 காவல் உதவி ஆய்வாளர்களும் அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இரா. பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு காண்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஓமலூரில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி, திமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். அவர் வரும் போது நம்மால் எதுவும் பேசமுடியவில்லை. எனவே, சேலத்திற்கு ஒரு அமைச்சர் கொடுத்தால் தங்களை குறைகளை தெரிவிக்க முடியும். இங்கு அமைச்சர் இல்லை என்றால் வெற்றி பெறமுடியாது என்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகம் தெரிவித்தனர். இதன் மூலம் கிராமம், நகர்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளாம் காண முடியும் என்றனர்.
ஆத்தூர் இராணிப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்ல விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 7.9.2024 முதல் 9.9.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 25ம் ஆண்டு நிகழ்ச்சிக்கு கால்கோள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் ராணிப்பேட்டை நண்பர்கள் குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.