India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் வீராணம் பகுதியில் அனுமதி இன்றி மது விற்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுவளவு மாரியம்மன் கோவில் அருகே யோகலட்சுமி மற்றும் மோகன் ஆகியோர் மது பாட்டில்களை விற்பனை செய்வதை கண்டறிந்தனர். அதனையடுத்து அவரிடம் இருந்த பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். மாவட்டத்தில் தொடர்ந்து பெண்கள் மது வழக்கில் கைதுசெய்யப்படுவது தொடர்கதையாகிறது.

சேலம் மாவட்டத்தில் இன்று (10.02.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பிற்படுத்த ,மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவிகள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் பிப்.28ஆம் தேதியாகும். இதற்குள் உதவித்தொகை பெற விரும்புவோர் இணையதளம் வாயிலாக உடனடியாக விண்ணப்பித்து, கல்வி உதவித் தொகை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கையின் வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 10) ”சாலையை கடக்கும்போது, சாலையில் கவனத்தை வையுங்கள் தொலைபேசியில் அல்ல: கவனம் சிதறல் மரணத்திற்கு வழிவகுக்கும்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை பிப்ரவரி 11ஆம் தேதி வள்ளலார் தினத்தை ஒட்டி, சேலத்தில் உள்ள எம்எல்1, எம்எல் 2, எம்எல்3, எம்எல் 3ஏ உள்ளிட்ட அனைத்து மது பானக் கடைகளும், மதுபானகிளப்புகளை மூட வேண்டும் என ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மீறி விற்பனை செய்பவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

ஏற்காட்டில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிந்த இளைய கண்ணு என்பவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தாக போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மாணவிகள் செய்யும் சின்ன சின்ன தவறுகளை வைத்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். (நன்றி- நியூஸ் தமிழ்)

தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் 4 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பொது எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள், ரூ.1,25,200 முதல் ரூ.2,54,800 வரை சம்பளம் வழங்கப்படும்.மேலும் விவரங்களுக்கு இந்த <

சேலம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட ஜவ்வரிசி ஆலைகள் இயங்கி வருகின்றன. ஜவ்வரிசி மரவள்ளி கிழங்குகளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. ஜவ்வரிசி தயாரிப்பின் போது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவு தரத்தில் இல்லாத சல்பியூரிக் அமிலம், ஹைட்ரஜன் பெராக்சைடு, சோடியம் ஹைப்போ குளோரைடு ஆகிய வேதிப்பொருட்கள் பயன்படுத்துவதாக தெரியவந்தால் ஆலைகளின் உணவு பாதுகாப்பு உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரிக்கை.

சேலம் பிப்ரவரி 10 இன்றைய முக்கிய நிகழ்வுகள்:1) காலை 10 மணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறைதீர் கூட்டம் .2) காலை 10 மணி பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம் கோட்டை மைதானம்.3) காலை 11 மணி வேங்கை வயல் பிரச்சனையை சிபிஐ வசம் ஒப்படைக்க வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கருவாட்டு பாலம் பக்கத்தில் பழைய பிளாஸ்டிக் பொருட்களை உடைத்து மறுசுழற்சி செய்வதற்காக தயாரிக்கப்படும் கம்பெனி உள்ளது. இந்த கம்பெனியில் இன்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தெரியாத பெண்கள் அந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.