India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட உள்ளூர் திட்டக் குழும மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தலைமையில், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் முன்னிலையில் இன்று மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட நகர் ஊரமைப்பு உதவி இயக்குநர் செல்வி. ஆ.ஷஹானா மற்றும் உள்ளூர் திட்டக் குழும உறுப்பினர்கள் உள்ளனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பண்டிகை மற்றும் முக்கிய திருவிழா நாட்களில் சேலம் கோட்டத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, பவுர்ணமி கிரிவலம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்று முதல் 22-ந் தேதி வரை சேலம் கோட்டம் மூலம் பல்வேறு வழித்தடங்களில் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளை கேட்டறியும் “உங்களை தேடி, உங்கள் ஊரில்” திட்ட முகாம் எடப்பாடி தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. எடப்பாடி தாலுகாவிற்குட்பட்ட வருவாய் கிராமங்களிலும் அலுவலர்கள் 2 நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை 23, ஆகஸ்ட் 4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் சேலம் மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது. எனவே, பொதுமக்கள் இன்றே ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ளுங்கள்.
வாழப்பாடி அருகே அத்தனூர்பட்டி ஏரியில் டிராக்டர்களில் மண்ணை வெட்டி கடத்திய டிராக்டர், பொக்லின் இயந்திரங்களை இன்று (ஜூலை 18) அப்பகுதி மக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர், பர்மிட் இல்லாமல் மண் எடுப்போர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து மக்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு ஐ.டி.ஐ.யில் 2024-ஆம் ஆண்டிற்கான காலி இடங்களுக்கு நேரடிச் சேர்க்கையானது, கடந்த 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் சேலம் கோரிமேடு அரசு ஐ.டி.ஐ.யில் நேரடி மாணவர் சேர்க்கையானது வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு
செய்துள்ளதாக துணை இயக்குனர் ராஜேஸ்வரி
தெரிவித்துள்ளார். இதன் மூலம் தவறவிட்ட மாணவர்கள் பயனடையலாம்.
TNPSC நடத்தும், குரூப்-2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க நாளை (ஜூலை 19) கடைசி நாள் ஆகும். இதில், உதவி இன்ஸ்பெக்டர் மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள உதவியாளர் பணியிடங்கள் (2,327 பணியிடங்கள்) நிரப்பப்படவுள்ளன. விண்ணப்பதாரர்கள் tnpsc.gov.in அல்லது tnpscexams.in இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம். முதல்நிலை தேர்வு செப்.14 அன்று நடைபெற உள்ளது. நாளை இரவு 12 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறைந்த வாடகையில் அரசு வேளாண் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. வேளாண் இயந்திரங்கள், கருவிகள் தேவைப்படும் விவசாயிகள் வேளாண்மை பொறியியல் துறை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் (சேலம்) 0427- 2905277, 97510- 08321 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கபிலன் கலந்துக் கொண்டு பொதுமக்கள் மனுக்கள் மீதான விசாரணை நடத்தினார். இதில் பல்வேறு மனுக்களுக்கு தீர்வுகாணப்பட்டது . இதனையடுத்து தீர்வு காணாத மனுக்கள் விசாரணையை ஒத்தி வைத்தார்.
Sorry, no posts matched your criteria.