India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம், ஆத்தூர் அருகே தவளைப்பட்டி சென்ற 33 ஆம் எண் அரசு பேருந்து மலையற்றத்தின்போது பிரேக் பிடிக்காமல் பின்னோக்கி சென்று 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் இரண்டு பள்ளி குழந்தைகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சேலம் அழகாபுரம் பெரியபுதூர் நந்தவனம் தெருவை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (23). ரவுடியான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள படையப்பா நகர் பகுதியில் நடந்துவந்து கொண்டிருந்த தண்டபாணி(25) என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்த ₹1200 ரூபாயை பறித்து சென்றுவிட்டார். இதுகுறித்து அழகாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சேலம் திப்பம்பட்டி காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன், அவரது பேரன் மோஹித் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் மேச்சேரியில் இருந்து குள்ளம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் மோதியதில் மோகித் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஈஸ்வரன் காயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து மேட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 11) உங்கள் சமூக ஊடக கணக்குகள் மற்றும் வங்கிசார் செயலிகளுக்கு, சைபர் குற்றவாளிகளால் எளிதில் தகர்க்க (Crack) முடியாத அளவில் கடினமான கடவுச் சொற்களை (Password) அமைக்கவும். என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளத

தைப்பூசத்தை முன்னிட்டு, தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம், சிலுவம்பாளையத்தில் உள்ள பழனியாண்டவர் கோயிலில் இன்று (பிப்.11) அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, திருக்கோயிலில் வழங்கப்பட்ட அன்னதானத்தை பொதுமக்களுடன் அமர்ந்து சாப்பிட்டார்.

சத்திரம் மார்க்கெட் ரயில்வே நிலையத்தில் உள்ள யார்டில் பராமரிப்புப் பணி நாளை (பிப்.12) விருத்தாச்சலம்- சேலம் ரயில் (76815) நாளை விருத்தாச்சலத்தில் மதியம் 02.15 மணிக்கு புறப்பட்டு சேலம் டவுன் ரயில்வே நிலையம் வரை மட்டும் இயக்கப்படும். சேலம் டவுன்- சேலம் ஜங்ஷன் இடையே ஒரு பகுதி ரத்துச் செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

காடையாம்பட்டியில் பொன்னுசாமி என்பவர் காவலாளியாக மனைவியுடன் தங்கி வேலை பார்த்து வந்தார். இவரது மகன் சின்னசாமி என்பவர்,சொத்துபிரச்சனையில் நண்பர்களுடன் இணைந்து, தந்தை (பொன்னுசாமியை) கத்தியால் குத்தியுள்ளார். இதில் அவர் உயிரிழந்தார்.தாய்க்கும் கத்திக்குத்து விழுந்தது. இது குறித்து தீவட்டிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து சின்னசாமி, உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை.

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் வசதிக்காக, இன்று (பிப்.11) சேலம் மாவட்டம், தாரமங்கலம், சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை, வேம்படிதாளம், ஆட்டையாம்பட்டி வழியாக காளிப்பட்டி கந்தசாமி முருகன் திருக்கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன என சேலம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் உள்ள 78 ரயில்வே நிலையங்களிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் டிக்கெட் பெற க்யூ.ஆர். கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 40% கடந்துவிட்டது.வரும் ஆண்டில் 60%-க்கு மேல் உயரும்.அந்த அளவிற்கு மக்களிடம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் நடைமுறை அதிகரித்துள்ளது என்றனர் ரயில்வே அதிகாரிகள்.

சேலம், எடப்பாடி அருகே தனியார் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவர்கள் இருவரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மோதலில் பலத்த காயம் அடைந்த மாணவன் உயிரிழந்தார். மாணவன் உயிரிழந்ததை அடுத்து தனியார் பள்ளி வளாகம் முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.