Salem

News July 22, 2024

அதிமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

image

சேலம் ஓமலூரில் உள்ள அதிமுக புறநகர் மாவட்ட கட்சி அலுவலகத்தில், நாகப்பட்டினம் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணைந்தனர். நாகை மாவட்ட செயலாளரும், கட்சியின் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓஎஸ்.மணியன் ஏற்பாட்டில், நாகபட்டினம் மாவட்டம், வாங்கல் பகுதியைச் சேர்ந்த நேதாஜி தலைமையில் இணைந்தனர்.

News July 21, 2024

சேலத்தில் மெட்ரோ: அதிகாரிகள் ஆய்வு

image

சேலத்தில் மெட்ரோ ரயில் இயக்க சாத்திய கூறுகள் உள்ளதா என ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட உள்ளன. அதைத்தொடர்ந்து 2 வழித்தடங்களில் இயக்குவது குறித்து தனியார் நிறுவனம் திட்ட அறிக்கையை தயாரித்து அரசிடம் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளது. மேலும் சேலத்தில் விரைவில் மெட்ரோ ரயில் அமைக்க ஆய்வு நடத்த அதிகாரிகள் குழு வர உள்ளனர்.

News July 21, 2024

மக்களுடன் முதல்வர்: கலெக்டர் அறிவிப்பு

image

சேலம் மாவட்டத்தில் நாளை (ஜூலை.22) அயோத்தியாபட்டணம், கொளத்தூர், ஆத்தூர் பெத்தநாயக்கன்பாளையம், மகுடஞ்சாவடி உள்ளிட்ட ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் ‘மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் நடைபெற உள்ளது. முகாம்களை மக்கள் பயன்படுத்திக் கொள்ள சேலம் கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி கேட்டுக் கொண்டுள்ளார்.

News July 21, 2024

19 புதிய பேருந்துகள் துவக்கி வைப்பு

image

சேலம் மாவட்டத்தில் 19 புதிய பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. கலெக்டர் டாக்டர் ரா.பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்ற, இந்நிகழ்ச்சியில் சேலம் மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகணபதி, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.

News July 21, 2024

முதல்வர் ஸ்டாலின் நாடகம்: எடப்பாடி பழனிச்சாமி

image

ஏழை, எளிய மக்களுக்காக துவங்கப்பட்ட அம்மா உணவகத்தில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார். சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், அம்மா உணவகத்தில் பணியாளர்கள் பாதியாக குறைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 19 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு விட்டது. மூன்றாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டு விட்டு, தற்போது முதல்வர் ஆய்வு என்று நாடகம் நடத்துக்கிறார். என பேசினார்.

News July 21, 2024

முன்னாள் முதல்வர் கட்சி அலுவலகத்திற்கு வருகை

image

முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓமலூரில் உள்ள சேலம் மாவட்ட அதிமுக கட்சி அலுவலகத்திற்கு இன்று காலை 10 மணி அளவில் வருகை தர உள்ளார். சேலம் புறநகர் பகுதியில் உள்ள அதிமுக நிர்வாகிகள் அனைவரும் வரவேற்க வர வேண்டும் என்று ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் மணி கேட்டுக்கொண்டார். மேலும் அவர் நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News July 21, 2024

சேலம் சரக டிஐஜி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

image

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கோவில் நிலம், பிற நிலங்களில் இருந்தும் சட்டவிரோதமாக கொள்ளையடிக்கப்பட்ட கனிம வளங்கள் குறித்து பதிவான வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 26ஆம் தேதி சேலம் டிஐஜி, நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என சென்னை உயர்நிதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ராதாகிருஷ்ணன் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

News July 20, 2024

மேட்டூர் அணையில் ஆட்சியர் ஆய்வு

image

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 68,000 கனஅடியைத் தாண்டிய நிலையில், சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேட்டூர் அணையின் வலது கரை, இடது கரை, 16 கண் மதகு உள்ளிட்ட இடங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டு, அணையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்தும், அணைக்கான நீர்வரத்து, இருப்பு குறித்தும் நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

News July 20, 2024

சேலத்தில் 17 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

image

சேலம் மாநகரில் 17 காவல் ஆய்வாளர்களை இடமாற்றம் செய்து காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டுள்ளார். சேலம் டவுன் காவல் ஆய்வாளராக செல்வராஜ், சூரமங்கலம் காவல் ஆய்வாளராக கிருஷ்ணமூர்த்தி, கன்னங்குறிச்சி காவல் ஆய்வாளராக சசிகலா உள்ளிட்ட 17 பேர் இடமாற்றம் செய்யப்பட்டு காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு உத்தரவிட்டு உள்ளார்.

News July 20, 2024

சேலம் விவசாயிகளிடம் கருத்துக் கேட்பு

image

சேலம் விமான நிலைய விரிவாக்க பணிக்கு காமலாபுரம், சிக்கனம்பட்டி, பொட்டியபுரம், தும்பிப்பாடி கிராமங்களில் 570 ஏக்கல் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதற்கான கருத்துகேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட விவசாயிகள், கையகப்படுத்தும் நிலத்திற்கேற்ப மாற்று நிலம் வழங்கவேண்டும். இல்லையேல் ஏக்கருக்கு ரூ.2 கோடி வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

error: Content is protected !!