India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் இன்று (11-9-2024) மாலை 5 மணிக்கு சேலம் ஜங்சனில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாசை சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் ஆகியோர் சென்று சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
நேற்று சேலம் மத்திய சிறையில் சிபிசிஐடியின் 9 மணி நேரம் விசாரணை நிறைவடைந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை சேர்ந்த சிவகுமார் என்பவரை வேலூர் டிஐஜி வீட்டில் அடித்து துன்புறுத்தியதாக அவரது தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை சேலம் மத்திய சிறையில் சிபிசிஐடி அதிகாரிகள் கைதி சிவகுமாரிடம் விசாரணை மேற்கொண்டனர். 9 மணி நேரம் நடைபெற்ற விசாரணை நிறைவடைந்தது.
கலைஞர் கருணாநிதி நினைவிடம் அமைக்கும் கோப்பில் கையெழுத்திட்ட பாவத்தை செய்தது நான் என சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அதிமுக மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார். மேலும், முதலீடுகளை ஈர்க்க என்ற அமெரிக்க சென்ற முதல்வர் ஸ்டாலின் பாட்டுப்பாடி சைக்கிள் ஓட்டுகிறார் என்றார்.
ஆத்தூர் வட்டார வேளாண்மை துறையில் வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் தேக்கு மரக்கன்றுகள் இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க உள்ளது. எனவே மரக்கன்றுகள் நடவு செய்ய விருப்பம் உள்ள விவசாயிகள் கணினி சிட்டா, ஆதார் கார்டு ஜெராக்ஸ், வங்கி புத்தகம் ஜெராக்ஸ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு, குடும்ப அட்டை ஆகியவற்றை வழங்கி இலவசமாக தேக்கு மரக்கன்றுகளை பெற்றுக்கொள்ளலாம் என வேளாண்மை அதிகாரிகள் கேட்டுகொண்டுள்ளார்.
இரும்பாலை முத்தாம்பட்டியை சேர்ந்தவர் முருகன், இவரது மனைவி லட்சுமி (45). நேற்று முன்தினம் அங்குள்ள இறைச்சி கடையில் இறைச்சி (சுவரொட்டி) வாங்கி வறுத்து சாப்பிட்டார். சிறிது நேரத்தில் அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவரை உறவினர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், லட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
வேலூர் சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்தி கொடுமைப்படுத்திய விவகாரம் தொடர்பாக, வேலூர் சிறைத்துறை டிஐஜி உட்பட 14 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்நிலையில், விசாரணைக்காக சென்னையிலிருந்து சிபிசிஐடி அதிகாரிகள் சேலம் மத்திய சிறைக்கு விரைந்துள்ளனர். சேலம் மத்திய சிறையில் இன்றும், வேலூரில் நாளையும் சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 11,736 கன அடியிலிருந்து 10,706 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 114.910 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 85,583 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் அணை மின் நிலையம் வழியாக 23,000 கன அடியும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
சேலம் மேற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நாளை மறுநாள் (செப்.12) பிற்பகல் 3 மணியளவில் சங்ககிரி-பவானி பிரதான சாலையில் உள்ள ஸ்ரீ வாசுதேவ் மஹாலில் திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு தலைமையில், சேலம் மத்திய மா.செ. வழக்குரைஞர் ராஜேந்திரன், சேலம் கிழக்கு மா.செ. எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை திமுக சேலம் மேற்கு மா.செ. டி.எம்.கணபதி வெளியிட்டார்.
இன்று (செப்.10) சேலம் மரவனேரி புனிதபால் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் பங்கேற்று பயனடையுமாறு மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி வேண்டுகோள் விடுத்துள்ளார். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள் கலந்துகொண்டு உயர்கல்விக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள், வங்கி கடனுதவிகள் தொடர்பான சேவைகள், தொழில்நுட்பக் கல்வி குறித்த ஆலோசனைகளையும் வழங்கவுள்ளனர்.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை இன்றும் (செப்.09) கடுமையாக சரிந்துள்ளது. மல்லிகை கிலோ ரூபாய் 280- க்கும், ஜாதிமல்லி ரூபாய் 260- க்கும், சம்பங்கி ரூபாய் 60- க்கும், அரளி ரூபாய் 40- க்கும், நந்தியாவட்டம் ரூபாய் 30- க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பூக்களின் விலை குறைந்த போதும், பூக்கள் விற்பனை மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.