India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இரும்பாலை, மோகன் நகர், காரைச்சாவடி, தெசவிளக்கு, மாட்டையாம்பட்டி, ஓம்சக்தி நகர், தொப்பூர், செக்காரப்பட்டி, கம்மம்பட்டி, வெள்ளார், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூர், சென்னாரெட்டியூர், கொன்ரெட்டியூர், மூக்கனூர், தீவட்டிப்பட்டி, சோழியானூர். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட அட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18ஐ முன்னிட்டு ஆகஸ்ட் 3ம்தேதி சேலத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களில் இடி,மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டத்திற்கு அடுத்த 3 மணி நேரம் அதாவது இரவு 10 மணி வரை மழைக்கு பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக கோவையில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது
சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024- ஆம் ஆண்டிற்கான நேரடிச் சேர்க்கை ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266-39467, 99427- 12736, 99441-09416, 98432-75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்துக் கொள்ளலாம் என அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம், மேச்சேரி வட்டம், ஓலைப்பட்டி ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றுவரும் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமினை சேலம் மாவட்ட ஆட்சி தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறை சார்ந்த அதிகாரிகள், பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சேலத்தில் விமான நிலையத்தை விரிவுபடுத்த வேண்டும், அருகேயுள்ள மாவட்டங்களும் பயனடையும் வகையில் மத்திய மாம்பழ கொள்முதல் மையம், குளிர்பதன கிட்டங்கியை சேலத்தில் அமைக்க வேண்டும், சேலத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்படவேண்டும், கரும்பு விவசாயிகள், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தொடர்பாக மத்திய பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் என்பது சேலம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. உங்கள் கருத்து என்ன?
சேலம் ரயில்வேயில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலக்ட்ரீசியன் 59, டர்னர் 2, வெல்டர் (கேஸ் & எலக்ட்ரிக்) 44, பிட்டர் 75, டீசல் மெக்கானிக் 3, மெக்கானிஸ்ட் 7, ஒயர்மேன் 27, கோபா (COPA) 5 என 222 இடங்கள் காலியாக உள்ளன. 10ஆம் வகுப்பு (அ) ITI துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.12ம் தேதிக்குள் https://sr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
சேலம் கலெக்டர் ரா.பிருந்தாதேவி செய்தி குறிப்பு ஒன்றை நேற்று வெளியிட்டார். அதில், சேலம் கலெக்டர் அலுவலகத்தில் ஜூலை 26 அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட பொதுமக்கள் தங்களிடம் உள்ள இந்திய சுதந்திரப் போராட்டம் தொடர்பான பொருட்களை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்த நன்கொடையாக வழங்கலாம். மேலும், விவரங்களுக்கு 94434-78024 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது govtmuseumsalem2@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் பிருந்தா தேவி அறிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.மேனகா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. மாத குறைதீர்க்கும் கூட்டம் ஜூலை 30ஆம் தேதி பிற்பகல் 4 மணிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை எண்.115 மகிழம் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வு செய்து கொள்ளலாம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.