India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாநகராட்சியில் பணிபுரிந்து வந்த ஆணையாளர் பாலச்சந்தர், கடந்த சில நாட்களுக்கு முன்பு இடம் மாற்றம் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சேலம் மாநகராட்சியின் 25ஆவது ஆணையாளராக ரஞ்ஜீத் சிங் இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, மாநகராட்சி அலுவலகம் வந்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்சித் சிங், மரக்கன்று நட்டுவைத்து பின்னர் பொறுப்பேற்று கொண்டார்.
சேலத்தில் பொதுமக்கள், விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் ரயில் வழித்தட வேலி அமைக்கப்பட வேண்டும் என திமுக எம்.பி செல்வகணபதி வலியுறுத்தியுள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அவர், அவசரமாக செல்ல வேண்டுமெனில் நீண்ட தூரம் சுற்றி போகும் நிலை உள்ளது. மக்களை நாம் மதிக்க வேண்டும். அரசு என்பது மக்களுக்காக தான். அதனால், எல்லா இடங்களிலும் வேலிகள் அமைக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
தமிழகம் முழுவதும் மின் கட்டண உயர்வை எதிர்த்து பலரும் போராடி வருகின்றனர். இதையடுத்து, நேற்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உணவகத்தில், உணவுகளின் விலையும் திடீரென உயர்த்தப்பட்டது. இது, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1 வடை ரூ.5க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், 2 வடை ரூ.15க்கும், மினி மீல்ஸ் ரூ.80க்கும், மினி டிபன் ரூ.60க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சேலம் பெரியார் பல்கலை., வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. துப்புரவு, பராமரிப்பு பணியாளர், ஆய்வக, தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு, டிகிரி, இன்ஜினியரிங் படித்த 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம்: ரூ.10,000 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் ஆக.7ஆம் தேதிக்குள் <
ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் 3ஆம் தேதி சென்னையில் இருந்தும் பிற இடங்களிலிருந்தும் இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. சென்னை ,சேலம், கோயம்புத்தூர், பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து 3ஆம் தேதி இராமேஸ்வரத்திற்கும், 4ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி புதன்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவித்தது சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி அறிவித்துள்ளார். இந்நிலையில் சேலத்திற்கு 3, 7 ஆகிய இரு தினங்கள் உள்ளூர் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சேலம் 5 ரோட்டில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு AITUC, INTUC, AICCTU, AIUTUC உள்ளிட்ட தொழிற்சங்கத்தின் சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
சேலம் திருவாகவுண்டனூரில் அமைந்துள்ள GVN திருமண மண்டபத்தில் இந்திய அரசு தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் குறித்த புகைப்படக் கண்காட்சி நேற்று நடைபெற்றது. 3 நாட்கள் புகைப்படக் கண்காட்சி நடைபெறவுள்ளது. விழாவில், பாஜகவின் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவின் மாநில தலைவர் கோபிநாத்,
பாமக எம்எல்ஏ அருள், அரசு அதிகாரிகள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பட்ஜெட் குறித்து சேலம் உணவு எண்ணெய் சங்கத் தலைவர் பி.திருமுருகன் தெரிவிக்கையில், இயற்கை விவசாயத்தை மேம்படுத்த, 2 ஆண்டுகளில் ஒரு கோடி விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, உயர்கல்வி கற்க ரூ.10 லட்சம் வரை கடனுதவி அளிப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா கடன் வரம்பு, 10 லட்சத்திலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தியது, புத்தொழில் முனைவோர் எண்ணிக்கையை அதிகப்படுத்தி புது வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என்றார்.
சேலத்தில் மின் பராமரிப்பு பணி காரணமாக நாளை (ஜூலை 25) கீழ்காணும் பகுதிகளில் காலை 9 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும். அவை: அலையனூர், மாரமங்கலத்துப்பட்டி, கோணகாப்பாடி, முத்துநாயக்கன்பட்டி, கலர்ப்பட்டி, செம்மண் கூடல், பாகல்பட்டி, கே.ஆர்.தோப்பூர், அழகுசமுத்திரம், கருங்கல்வாடி, கிருஷ்ணம்புதூர், குயவனூர், கரியாம்பட்டி, தோலூர்…
Sorry, no posts matched your criteria.