India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவர் விளம்பரம் செய்யக்கூடாது. கைகளில் கொடி, பேனர்கள், உருவப்படங்களை எடுத்துச் செல்ல கூடாது. சங்ககிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை போன்ற பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து ஆர்.டி.ஓ.லோகநாயகி தெரிவித்துள்ளார்.
கோவை – சேலம் அணிகளுக்கு இடையேயான TNPL போட்டி, இன்று மதியம் 3.15 மணிக்கு திண்டுக்கல்லில் நடைபெற உள்ளது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த சேலம் அணி, திருப்பூருக்கு எதிரான முந்தைய போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றியை பதிவு செய்தது. ஆனால், இன்று தொடர் வெற்றிகளை குவித்து பலம் வாய்ந்த அணியாக உள்ள கோவையை எதிர்கொள்ள உள்ளதால், போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.
மத்திய அரசின் பட்ஜெட் ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான பட்ஜெட் அறிக்கையாக தெரியவில்லை. பிரதமர் மோடி தனது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை தாராளமாக வழங்கி உள்ளார். இதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசை கண்டித்து, சேலம் கோட்டை மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) காலை 9.30 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் இன்று மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை அயோத்தியாப்பட்டணம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர், கோபால், தாசில்தார் வரதராஜன் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகராட்சி ஆணையாளராக ரஞ்சித் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார். பின் அவர் கூறுகையில், அதிகாரிகளுக்கும், மக்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுவேன் என்று தெரிவித்தார். மேலும் சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பிரச்சனைக்கு முக்கியத்துவம் கொடுப்பேன் என்றும், பணி செய்யாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.
சேலம் மாநகராட்சி மைய அலுவலக மாமன்றக் கூட்ட அரங்கில் நாளை (ஜூலை 26) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தலைமையில், மாமன்ற இயல்பு கூட்டம் நடைபெறும் என்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் இன்று தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் அனைத்து மாமன்ற பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.
சேலத்தில் ஆடி பண்டிகையொட்டி நடைபெற்று வந்த அரசுப் பொருட்காட்சி “6” ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சேலத்தில் உள்ள போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. மேலும் இதற்கான பணிகள் துவங்கப்பட்டு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சேலம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி குறியீடுகளை விரைந்து செயல்படுத்திடும் வகையில் அலுவலர்களுக்கான பயிற்சி சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் மஜ்ரா கொல்லப்பட்டியில் உள்ள மாவட்ட வள மையக் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 39 அடியாக இருந்து, 9 நாட்களில் 46.18 அடி உயர்ந்துள்ளது. இந்நிலையில் 1 வருடத்திற்கு பிறகு 90 அடியை எட்டியது. மேலும், வரும் நாட்களில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதால் அணையின் நீர்மட்டம் விரைவில் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அணைக்கு நீர்வரத்து விணாடிக்கு 23,331 கனஅடியில் இருந்து 28,856 கனஅடியாக உயர்ந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடத்துவது குறித்து கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், மாநாடு நடத்த திருச்சி மற்றும் மதுரையில் இடம் பார்த்து வந்த நிலையில், தற்போது சேலத்திலும் இடம் பார்க்கப்பட்டு வருகிறது. இதனால், கட்சியின் முதல் மாநாடு சேலத்தில் நடக்குமா? என கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் பெரும் ஆவலுடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.