Salem

News July 27, 2024

உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

image

சேலம் மாவட்டத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் www.tnvelaivaaippu.gov.in இணையதள முகவரியிலோ விண்ணப்பங்களை பெற்று நேரில் சமர்ப்பிக்க வேண்டும். என்று வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டி மையங்களுக்கு சேலம் கலெக்டர் டாக்டர். பிருந்தாதேவி இன்று அறிவுறுத்தியுள்ளார்.

News July 27, 2024

நாளை முதல் தண்ணீர் திறப்பு

image

ஆடிப்பெருக்கையொட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து நாளை முதல் 7 நாட்களுக்கு நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, டெல்டாவில் ஆடிப்பெருக்கு விழாவினை சிறப்பாக கொண்டாட நாளை முதல் முதல் 7 நாட்களுக்கு வினாடிக்கு 5,000 கன அடி தண்ணீர் திறபட்டவுள்ளது.

News July 27, 2024

100 அடியை எட்டியது மேட்டூர் அணை

image

சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியுள்ளது. மேலும் மேட்டூர் அணையின் வரலாற்றில் 71வது முறையாக 100 அடியை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து 450 நாட்களுக்கு பிறகு மேட்டூர் அணை 100 அடியை எட்டியுள்ளது. கடந்த 23 நாட்களில் மட்டும் 60 அடி அதிகரித்து, தற்போது 100 அடியை எட்டியுள்ளது.

News July 27, 2024

சேலத்தில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

image

ஆடித் திருவிழாவையொட்டி சேலத்தில் பூக்கள் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் கிலோ ரூ.300க்கு விற்ற குண்டு மல்லி நேற்று ரூ.500 – ரூ.550 வரை விற்கப்பட்டது. ரூ.150க்கு விற்ற முல்லை ரூ.200க்கும், ஜாதிமல்லி ரூ.500க்கும் விற்கப்பட்டது. காக்காட்டான், மலைக்காட்டான் ரூ.160க்கும், செவ்வரளி, நந்தியாவட்டம், சாதா சம்பங்கி ஆகியவை ரூ100க்கும் விற்பனை. வெள்ளை அரளி, ஐ.செவ்வரளி ஆகியவை ரூ.60க்கும் விற்பனை.

News July 27, 2024

தமிழ் புதல்வன் திட்டம் ஆலோசனை கூட்டம்

image

சேலம் மாவட்டத்தில் “தமிழ்ப் புதல்வன் திட்டம்“ செயல்படுத்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி, தலைமையில் இன்று (26.07.2024) மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன், மாவட்ட சமூக நல அலுவலர் இரா.சுகந்தி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் கல்லூரி ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளனர்.

News July 26, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தலைமையில் இன்று நடைபெற்றது. ‘விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தெரிவிக்கப்படும் கோரிக்கைகள் மீது 10 முதல் 15 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் பதிலளிக்க வேண்டும்’ என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.

News July 26, 2024

சேலத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை

image

மேட்டூர் அணையில் நீர் மட்டம் 100 அடி நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இந்நிலையில், அணையின் நீர் தேக்க பகுதிகளில் வருவாய்த்துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி அணையின் நீர் தேக்க பகுதியான செட்டிப்பட்டி, கோட்டையூர், பண்ணவாடி ஆகிய பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 26, 2024

அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த நகர் மன்ற தலைவர்

image

சேலம், கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி பேரூர் மன்ற தலைவர் லீலா ராணி, இன்று நகர்புறத்துறை அமைச்சர் கே.என்.நேருவை அவருடைய அலுவலகத்தில் சந்தித்து செந்தாரப்பட்டி பேரூராட்சிக்கு திட்டங்களை ஒதுக்கித் தர வேண்டும், நிதிகள் வழங்க வேண்டும் என்று மனு அளித்தார். அருகில் திமுக நகர மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

News July 26, 2024

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

image

சேலம் மேட்டூர் அணையில் இன்று (ஜூலை 26) காலை நிலவரப்படி, அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 32.693 கன அடியில் இருந்து 45.598 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அணையின் நீர்மட்டம் 90.500 அடியில் இருந்து 92.620 அடியாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போதைய நீர் இருப்பு 55.697 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும், குடிநீர் தேவைக்கு மின்நிலையம் வாயிலாக வினாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது.

News July 26, 2024

குறைதீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (ஜூலை 26) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இது, காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரின் 2ஆம் தள கூட்ட அறை எண் 215இல் நடைபெற உள்ளது. இதில், விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வேளாண்மை சம்பந்தமான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என ஆட்சியர் இரா. பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

error: Content is protected !!