India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாளை (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (செப்.23) காலை 10 மணிக்கு கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மனு வழங்கிய 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.84,400 மதிப்பிலான உதவி உபகரணங்களை ஆட்சியர் நேரில் வழங்கினார். இக்கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகரப் பகுதிகளில் மாநகர காவல்துறை ஆணையாளர் பிரவீன்குமார் அபினபு உத்தரவுப் பேரில் கடந்த 2 நாட்களாக காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர சோதனையில் 27 கஞ்சா வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.
சேலம் கருப்பூரில் மினி டைடல் பூங்காவை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து கருப்பூரில் உள்ள மினி டைடல் பூங்காவில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, திமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம்,அருள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் 35 ஜோடிகளுக்கு சீர்வரிசை பொருட்கள் மற்றும் மாங்கல்யம் உட்பட ரூபாய் 60,000 செலவில் இலவச திருமணம் வரும் அக்டோபர் 21ம் தேதி நடக்கிறது. விருப்பமுள்ளவர்கள் சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம்; தேர்வு செய்யப்பட்ட ஜோடிகளுக்கு அக்டோபர் 21ம் தேதி திருமணம் நடத்தி வைக்கப்படும்.
சேலம் கருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (செப்.23) காலை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சியில், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த டைடல் பூங்கா மூலம் 1,000- க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் இன்று ஜி.கே.வாசன் பேட்டி செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தன் கட்சியின் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கிறார்கள். தென் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையில் முதல் வரிசை திமுக ஆட்சியில் தான். தமிழகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் என மக்கள் உறுதியாக உள்ளனர். போதை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்றார்.
2026 சட்டமன்ற தேர்தலில் சேலத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் திமுக நிச்சயம் வெற்றி பெறும் என நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சேலத்தில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசினார். மேலும் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி, மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டிமணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.
சென்னையை கலக்கி வந்த பிரபல ஏ+ கேட்டகரி ரவுடியான சிடி மணியை சேலத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். குறிப்பாக சி.டி மணி மீது 10 கொலை வழக்குகள், 7 கொள்ளை வழக்குகள் உட்பட 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது. சமீபத்தில் என்கவுண்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜியின் நண்பரான சி.டி மணி, வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த காரணத்தினால் கைது செய்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.