Salem

News September 25, 2024

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்

image

சேலம் மண்டல வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சந்தீப் சிங் நேகி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தொழிலாளர் வருங்கால வைப்புநிதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சேலம் உள்பட 5 மாவட்டங்களில் நடக்கிறது. ஏற்காடு அடிவாரம் எமரால்டு வேலி பப்ளிக் பள்ளியிலும் ஈரோடு, பெருந்துறை, தர்மபுரி, கரியமங்கலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கிறது.

News September 25, 2024

சேலத்தில் இன்றைய மின்தடை

image

சேலம் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையத்திற்கு உட்டபட்ட பகுதியில் இன்று (25.9.24) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. தொப்பூர், தீவட்டிப்பட்டி, நெத்திமேடு, தேவூர், ஆடையூர் ஆகிய துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளனர்.

News September 25, 2024

சேலத்தில் குறைந்த வட்டியில் கடனுதவி

image

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் சிறுபான்மையினர் மக்களுக்கு குறைந்த வட்டியில் டாம்கோ கடனுதவி வழங்கப்படும் என ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்தார். கூட்டுறவுத்துறையின் கீழ் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, 8 நகர கூட்டுறவு வங்கிகள் மற்றும் 5 நகர கூட்டுறவு கடன் சங்கங்களில் டாம்கோ கடன் மேளாக்கள் நடைபெறவுள்ளன. எனவே அருகில் உள்ள வங்கி மற்றும் சங்கங்களை அணுகுமாறு கேட்டுக் கொண்டார்.

News September 24, 2024

சேலத்தில் சிறுத்தை கிராம மக்கள் அச்சம்

image

சேலம், மேட்டூரில் கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ஓராண்டுக்கு முன்பு தமிழக வன எல்லை பகுதியில் வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க 10 சிறுத்தை குட்டிகளை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் விட்டதாக கிராம மக்கள் பரபரப்பு குற்றம் சாட்டினர். இது தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News September 24, 2024

சேலம் மாவட்டத்தில் மழை

image

சேலம் மாநகரில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில், தற்போது வின்சென்ட், அஸ்தம்பட்டி, அழகாபுரம், சாரதா கல்லூரி சாலை, 5 ரோடு, 4ரோடு, பழைய பேருந்து நிலையம், கன்னங்குறிச்சி, ஏற்காடு அடிவாரம், ராமகிருஷ்ணா ரோடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News September 24, 2024

காகிதத்தில் தத்ரூபமாக செய்யப்பட்ட ரயில் நிலையம்

image

சேலம் ஜங்சன் ரயில் நிலைய வளாகத்தில் மீண்டும் பயன்படுத்த முடியாத பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட பொருட்களின் ‘Waste to Art’ என்ற கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதில் மாணவ, மாணவிகள் இயற்கைக்கு பாதிப்பில்லாத வகையில் பல்வேறு உருவங்களைச் செய்து காட்சிப்படுத்தினர். குறிப்பாக, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘சேலம் ஜங்சன் ரயில் நிலையம்’ வடிவமைப்பு பயணிகளை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

News September 24, 2024

எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

எரிவாயு நுகர்வோர்களுக்கான செப்-2024 மாத குறைதீர்க்கும் கூட்டம் வரும் செப்.27-ம் தேதி முற்பகல் 11 மணிக்கு சேலம் கலெக்டர் அலுவலகம் அறை எண்.115 மகிழம் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் இக்குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக அளித்து தீர்வுச் செய்துக் கொள்ளலாம் என மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளார்.

News September 24, 2024

40 டன் இனிப்புகளைத் தயாரிக்க சேலம் ஆவின் திட்டம்

image

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒருமாத காலமே உள்ள நிலையில், சேலம் ஆவின் பண்ணையில் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தாண்டு 40 டன் இனிப்பு தயாரிக்க திட்டமிடப்பட்டு ஆர்டர்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சேலம் ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகைக்கான ஆவினின் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.

News September 24, 2024

சேலத்தில் இன்று கல்விக்கடன் மேளா

image

சேலம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (செப்.24) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சேலம் நங்கவள்ளியில் உள்ள கைலாஷ் மகளிர் கல்லூரியில் கல்விக்கடன் மேளா நடத்தப்படவுள்ளது. கல்விக்கடன் தேவைப்படும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து சேலம் மாவட்டத்தில் பயின்று வரும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பயனடையும் வகையில் தேவையான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

News September 24, 2024

சேலம் கலெக்டருக்கு ஐகோர்ட் வாரண்ட்

image

சேலம், ஆட்டையாம்பட்டி பஞ்சாயத்து செயலாளராக இருந்த மூர்த்தி முறைகேடு புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், 2017-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிமன்றம் வேறு இடத்தில் பணி வழங்க உத்தரவிட்டும் வழங்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்ட நிலையில், விசாரணைக்கு சேலம் ஆட்சியர் ஆஜராகததால் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

error: Content is protected !!