India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 23 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

தமிழகத்தில் கோடை காலம் முடியும் வரை அதாவது ஜூன் மாதம் முடியும் வரை வன ஊழியர்கள் யாருக்கும் விடுமுறை கிடையாது என வனத்துறை அதிகாரிகள் தகவல். வனத்தில் தீ பரவலைத் தவிர்க்க தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சேலம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மலைப்பகுதிகளில் வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

சேலம், மேட்டூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீ மாதேஸ்வரன் சுவாமி திருக்கோயிலில் வரும் பிப்.25-ம் தேதி மஹா சிவராத்திரி விழா தொடங்குகிறது. இதில் 5 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் இரு மாநில போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சியிலிருந்து பல்வேறு பொறுப்பாளர்கள் விலகி வரக்கூடிய சூழலில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியிலிருந்து நிர்வாகிகள் விலகி வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் பணியாற்றி வந்த சபரி என்பவர் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சேலம், எடப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளிக்கு ஆசிரியர் பயிற்சிக்காக 2023ஆம் ஆண்டு வந்த தனியார் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பயிற்சிக்கு வராமல், வந்ததாக வருகை பதிவேட்டில் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அப்போதைய பள்ளி தலைமை ஆசிரியர் பால்ராஜ், உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோருக்கு இரண்டு ஆண்டு ஊதிய உயர்வை ரத்து செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குநர் உத்தரவிட்டுள்ளது.

“பள்ளி குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை மும்மொழி கொள்கையை அமல்படுத்தினால் மட்டுமே தருவதாக ஒன்றிய அரசு கூறி வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை இருமொழி கொள்கை மட்டும் செயல்படுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் ரூ.3,000 கோடி மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்தி உள்ளோம் என சேலத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட இளைஞர்களுக்காக தொழில் வேலைவாய்ப்பு திட்ட ஆள் சேர்ப்பு முகாம் வுஐலுவரும் பிப்.25- ஆம் தேதி காலை 10 மணிக்கு சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் ஆடிட்டோரியத்தில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழக நிர்வாக இயக்குநர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tnautoskills.org/registration என்ற இணையதளம், வாட்ஸ் அப் 94451-58093 மூலமாகவும் அறிந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 22) சாலையில் செல்லும்போது கவனத்தை சாலையில் வைக்கவும் தொலைபேசியில் அல்ல விழிப்புடன் இருப்போம்! விபத்தை தவிர்ப்போம்.. என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 22 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் வழியாக செல்லும் ஈரோடு- ஜோலார்பேட்டை ரயில் (56108),பிப்.23,25,மார்ச்.01,02 ஆகிய தேதிகளில் ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரை மட்டுமே இயக்கப்படும்; மறுமார்க்கத்தில், ஜோலார்பேட்டை-ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்படும்.திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு!
Sorry, no posts matched your criteria.