India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் தலைமை அஞ்சலகம் மற்றும் அஸ்தம்பட்டி துணை அஞ்சலகத்தில் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை ஆதார் சேவை வழங்கப்படுகிறது. ஆதார் புதிய சேவை பெறுவதற்கும், 5 -7வயது மற்றும் 15-17 வயது குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் சேவை பெறுவதற்கும், கட்டணம் ஏதும் இல்லை. பெயர் திருத்தம், முகவரி திருத்தம், தொலைபேசி எண் மாற்றம் போன்ற மற்ற சேவைகளுக்கு ரூ.50 முதல் ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்திருப்பதால் இன்று உபரிநீர் திறப்பு வினாடிக்கு 1.70 லட்சம் கன அடியில் இருந்து ஒன்றரை லட்சம் கன அடியாகக் குறைக்கப்பட்டது. மேட்டூரில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் காவிரி கரையோர பகுதிகளில் வெள்ள அபாயம் சற்று தணியும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஏலியன் கோவில் அமைத்து வழிபாடு செய்து வருகிறார். 2021ஆம் ஆண்டு முதல் கோவிலை கட்டும் பணி நடந்து வருகிறது. இதுவரை எங்கும் ஏலியன் சித்தர் இல்லை என்றும், கோவில் திருப்பணிகள் நடந்து வருவதால், விரைவில் கும்பாபிஷேகத்திற்கு பிறகு அனைத்து பூஜைகள் நடக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். ரஜினி (ம) மோடிக்கு கோவில் கட்டி வரும் வரிசையில், தற்போது ஏலியனுக்கு கோவில் கட்டுவது வைரலாகியது.
வாழப்பாடி அடுத்த படையாச்சியூரை சேர்ந்தவர் முருகன் (58). இவரது மனைவி பொன்னம்மாள் (54). இவர்கள், சேசன்சாவடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று மாலை மொபட்டில் சென்றுகொண்டிருந்தனர். சேசன்சாவடி பஸ் ஸ்டாப் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையிவ் சென்னையிலிருந்து கோவை நோக்கி சென்ற விபத்து மீட்பு வாகனம் மொபட் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பொன்னம்மாள் பலியானார். முருகன் மருத்துவமனையில் இறந்தார்.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி உபரிநீரை நீரேற்று மூலம் ஏரிகளுக்கு வழங்கும் திட்டத்தின் கீழ் மேட்டூர் வட்டம், திப்பம்பட்டி நீரேற்று நிலையத்திலிருந்து மின் மோட்டார்கள் மூலம் நீரேற்று செய்யப்பட்டு ஏரிகளுக்கு வழங்கப்படுவதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர் பொ. சங்கர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ரா.பிருந்தாதேவி, இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் தொடர்புடைய அலுவலர் உள்ளனர்.
நாடாளுமன்ற மரபை மீறிய மத்திய அரசைக் கண்டித்து சேலம் கோட்டை மைதானத்தில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஏ.ஆர்.பி பாஸ்கர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மாமன்ற உறுப்பினர்கள் என
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
➤சேலத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு 3ஆம் தேதி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ➤வாழப்பாடி அருகே நடந்த விபத்தில் முருகன் (கணவன்), பொன்னம்மாள் (மனைவி) 2 பேர் உயிரிழந்தனர். ➤திமுக மூத்த நிர்வாகி முல்லை பன்னீர்செல்வம் காலமானார். ➤மத்திய அமைச்சர் அனுராக் தாகூரை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம். ➤சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து, அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக மேலாண்மை இயக்குநர் முனைவர் சங்கர் தலைமையில் கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது. உடன் தொடர்புடைய அலுவலர்கள் உள்ளனர்.
சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலம் அய்யந்திருமாளிகையில் உள்ள அறிவுசார் மையத்தில் அரசு தேர்வுக்காக பயிலும் மாணவ, மாணவிகளிடம் பயிற்சி குறித்த ஆலோசனைகளை இன்று சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் வழங்கினார். ஆய்வில் அஸ்தம்பட்டி மண்டல செயற்பொறியாளர் வாசுகுமார், உதவி ஆணையாளர் எஸ்.எஸ். சுரேஷ்குமார், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சத்துணவு திட்டம் சார்பில் சிறுதானிய விழிப்புணர்வு திருவிழா நடைபெற்றது. சிறுதானியங்களை கொண்டு 150-க்கும் மேற்பட்ட சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களை காட்சிப்படுத்தியிருந்தனர். இதில் பலருக்கு வந்து கொண்டு பார்வையிட்டு பயன்பெற்றனர்.
Sorry, no posts matched your criteria.