India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜூலை மாதத்தில் துவரம் பருப்பு, பாமாயில் பெற முடியாத ரேஷன் அட்டை தாரர்கள், இம்மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம். ஜூன் மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாதவர்கள், ஜூலை மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், ஜூலை மாதத்துக்கான துவரம் பருப்பு, பாமாயிலை சிலரால் பெற முடியவில்லை. எனவே,சேலத்தில் உள்ள 10,72,892 ரேஷன் அட்டை தாரர்கள் ஜூலை மாதத்துக்கான பொருட்களை இம்மாதம் பெற்றுக் கொள்ளலாம்.
➤சேலத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ➤மேட்டூர் அணையில் அமைச்சர் துரைமுருகன் ஆய்வு மேற்கொண்டார். ➤தீரன் சின்னமலை நினைவு இல்லத்தில் இன்று அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். ➤மேட்டூர் அணையில் 70,000 கன அடியாக நீர் திறப்பு குறைவு. ➤சேலத்தில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு 9 இடங்களில் மக்கள் நீராட மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
சேலம், மேட்டூர் அணையின் பழைய காவிரி பாலத்தில் இன்று ஆடிப்பெருக்கு பண்டிகையை முன்னிட்டு
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பூங்கா மற்றும் முனியப்பன் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மாற்று பாதையில் செல்ல காவல்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
சேலம், மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில் இன்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அணையின் வலது, இடது கரை மற்றும் 16 கண் மதகு பாலம் ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அணைக்கான நீர்வரத்து, அணையின் பாதுகாப்பு குறித்து நீர்வளத்துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது எம்எல்ஏ ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219-வது நினைவுத் தினத்தை முன்னிட்டு, சேலம் சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் அவரது நினைவு மணி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி கௌரவ தலைவர் ஜி.கே.மணி, சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மேட்டூர் அணையிலிருந்து உபரிநீர் திறக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களின் வழியாக காவிரியில் கரைபுரண்டோடி வருகிறது. இந்த நிலையில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று மேட்டூர் அணையில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, பொறியாளர்கள் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.
மேட்டூர் அணையில் உபரிநீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்றும், நாளையும் சேலம் மாவட்ட காவிரி ஆற்றங்கரை பகுதிகளில் பொதுமக்கள் புனிதநீராட ஆட்சியர் தடைவிதித்துள்ளார். இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் நீர்நிலைகளில் நீராடுவது வழக்கம். ஆட்சியரின் அறிவிப்பு பக்தர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை அவசியம்தானே! உங்கள் கருத்து என்ன?
ஆடிப்பெருக்கு விழாவை ஓட்டி பொதுமக்கள் பூலாம்பட்டி, பில்லுக்குறிச்சி, கிழக்குக்கரை வாய்க்கால், ஓனம் பாறைகால்வாய், நெடுங்குளம் மாம்பாடியூர், வெள்ளரி வெள்ளி பவளத்தார் மோரி, கொளத்தூர், செட்டிபட்டி, கோட்டையூர், பண்ணவாடி, சென்றாய பெருமாள் கோவில், காவிரி பாலம் முதல் முனியப்பன் கோவில் வரை, எம்ஜிஆர் பாலம், திப்பம்பட்டி உள்ளிட்ட இடங்களில் மட்டும் நீராட அனுமதிக்கப்படுவர் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 3) சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (சனிக்கிழமை) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து அதிக அளவில் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருவதால் அணைக்கு வருவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
நாளை 3.08.2024 சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, சேலம் மாவட்டம், சங்ககிரியில் அமைந்துள்ள தியாகி தீரன் சின்னமலையின் நினைவுச்சின்னம் தமிழ்நாடு அரசின் சார்பில் வண்ண விளக்குகளால் இன்று (02.08.2024) அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனை காண அப்பகுதியில் உள்ள ஏராளமான பொதுமக்கள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.