Salem

News February 25, 2025

கணவன் வெட்டியதில் சிகிச்சை பெற்று வந்த மனைவி பலி

image

கெங்கவல்லி அருகே கிருஷ்ணாபுரம் காந்திநகரை சேர்ந்தவர் அசோக்குமார்(45). இவர் அவரது மனைவி தவமணி(38) மற்றும் மூன்று குழந்தைகளை கடந்த 19-ல் அரிவாளால் வெட்டினார். இதில் இரு குழந்தைகள் உயிர் இழந்தனர். மனைவி தவமணி மற்றும் மற்றொரு குழந்தை ஆகியோர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி தவமணி உயிரிழந்தார். இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

News February 25, 2025

பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணி நேர்காணல் ஒத்திவைப்பு

image

மார்ச் 1ஆம் தேதி நடைபெறவிருந்த சேலம் பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் பணிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. அரசு கல்லூரி ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கடும் எதிர்ப்பை அடுத்து நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது. தனக்கு ஆதரவான குறிப்பிட்ட நபரை பதிவாளராக கொண்டு வர துணைவேந்தர் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து அடுத்து பதிவாளர் பதவிக்கான நேர்காணல் ஒத்திவைக்கப்பட்டது.

News February 25, 2025

சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

நாளை (பிப்.26) மஹா சிவராத்திரி பிப்.27-ல் அமாவாசையை முன்னிட்டு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் சேலம், தர்மபுரியில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதுதவிர சேலத்தில் இருந்து பவானி கூடுதுறை, சித்தர்கோவில் ஆகிய ஊர்களுக்கும் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

News February 25, 2025

சேலம் மாநகர துணை ஆணையர் இடமாற்றம்

image

தமிழகத்தில் பல்வேறு பகுதியில் ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சேலம் மாநகர துணை ஆணையராக வந்த எஸ்.பிருந்தவை சென்னை ஆவடி காவல் கண்காணிப்பாளர் உதவி கமாண்டர் அலுவலகத்திற்கு பணியிடம் மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

News February 25, 2025

சேலத்தில் வேலை வாய்ப்பு

image

பொதுத்துறை வங்கியான பரோடா வங்கியில் தொழிற்பயிற்சிக்கான 4,000 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு ஊதியமாக ரூ.12,000 முதல் ரூ.15,000 வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச்.11 ஆகும். <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கவும். ஷேர் பண்ணுங்க.

News February 25, 2025

கோவை- தன்பாத் ரயில் இன்று ரத்து

image

இன்று (பிப்.25) காலை 07.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக செல்லும் கோவை-தன்பாத் வாராந்திர ரயில் நிர்வாக காரணத்தால் முழுமையாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனை சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. ஏற்கனவே டிக்கெட் முன்பதிவு செய்தவர்களின் கட்டணம் திருப்பி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 25, 2025

மோசடியில் பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கலாம்

image

சேலம், சொர்ணபுரி பகுதியில் பணம் இரட்டிப்பாக செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ரூ.2.85 கோடி பணம், 300 கிராம் தங்கம் 200 கிராம் வைரம் 2.30 வெள்ளி பறிமுதல் செய்தனர். 14 பேரை கைது செய்த நிலையில் இவ்வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்ற போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டவர் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News February 25, 2025

சேலம் மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (பிப். 24) பயணத்தின் போது பாதுகாப்பான இடைவெளியை பின்பற்றவும்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News February 24, 2025

சேலத்தில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு

image

“சேலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தில் ரூபாய் 880 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைகிறது; இதன் மூலம் நேரடியாக 15,000 பேருக்கும், மறைமுகமாக 50,000 பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்; ஜவுளிப்பூங்கா அமைவதன் மூலம் ஆண்டுக்கு ரூபாய் 7,000 கோடிக்கு ஏற்றுமதி வருவாய் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது” என சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் பேட்டி.

News February 24, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று பிப்ரவரி 24 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

error: Content is protected !!