India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும், இதனால் போக்குவரத்து பாதிக்கப்படலாம். எனவே பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. உங்க ஏரியாவில் மழை பெய்கிறதா?
சேலம் குகை ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நடைபெற்று வரும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இன்று முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழா நிறைவு கவியரங்கம் நடைபெற்றது. இதில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜேந்திரன், சேலம் மேயர் ராமச்சந்திரன், மண்டல குழு தலைவர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் ஆடி திருவிழாவையொட்டி குற்ற சம்பவங்களை தடுக்க கோவில்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மக்களோடு மக்களாக சேர்ந்து சிலர் திருட்டில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதால், திருவிழா முடியும் வரை போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட உள்ளனர்.
சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வரும் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. அதன்படி, பட்டகோவில், சின்னகடைவீதி, அக்ரஹாரம், சத்யம்கார்னர், கன்னிகாபரமேஸ்வரி கோயில், கமலா மருத்துவமனை, அண்ணா நகர், ஹவுசிங் போர்டு, திருவள்ளுவர் சிலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் “சேலத்தை தலைநகராக கொண்டு தமிழ்நாட்டை இரண்டாக பிரித்தால் ரூ.15,000 கோடி அல்ல, ரூ.20,000 கோடி சிறப்பு நிதியாக நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம். முதலமைச்சர் உருவாக்க தயாரா? சேலத்தை தலைநகராகக் கொண்டு தமிழகம் இரண்டாக பிரிக்கப்பட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள 200 ஏரிகளில் தற்போது வண்டல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ஏரிகளில் அதிகமான ஆழத்தில் மண் எடுப்பதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிகாரிகள் சொல்லும் ஆழத்தில் தான் மண் எடுக்க வேண்டும் என்றும், அதிகமாக எடுத்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
கோவையில், செயற்கைகால்கள் மற்றும் கைகளை இலவசமாக பொருத்தும் முகாம் நடைபெற்றது. ராஜஸ்தானில் உள்ள நாராயண் சேவா சன்ஸ்தான் எனும் அமைப்பு சார்பில் கடந்த ஏப்ரலில் நடந்த முகாமில் மாற்றுதிறனாளிகளுக்கு அளவீடுகள் எடுக்கப்பட்டன. தற்போது மருத்துகுழுக்களின் உதவியுடன் கோவை, ஈரோடு, சேலம், மதுரை என பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால்களை வெற்றிகரமாக பொருத்தினர்.
தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு இன்று மழை நிலவரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, சேலம் மாவட்டத்தில் இன்று மாலை 5.30 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி முதல் இன்று வரை 51% கூடுதல் மழை பொழிவை தென்மேற்கு பருவமழை கொடுத்துள்ளது.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 70,000 கன அடியாக நீடிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் முழுக்கொள்ளளவான 120 அடியாகவும், நீர் இருப்பு 93,470 டி.எம்.சி.யாகவும் உள்ளது. 16 மதகு வழியாக 48,500 கன அடியும், அணை மின் நிலையம் வழியாக 21,500 கன அடியும் காவேரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இன்று சர்வதேச நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இவ்வுலகில் நண்பர்கள் இல்லாமல் எவரும் இல்லை. கிணற்றில் குளித்தது, கிரிக்கெட் ஆடியது, பள்ளிக்கு செல்வதாக கூறி படத்துக்கு போவது என சினிமாவை மிஞ்சும் அளவுக்கு நண்பர்களுடன் செய்த சேட்டைகளுன்டு. அந்த வகையில், சேலம் நண்பர்களே நீங்க உங்க நண்பனை பற்றி கீழே கமெண்ட் பண்ணுங்க, நண்பனுக்கு சேர் செய்யுங்க.
Sorry, no posts matched your criteria.