India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் 100 ரூபாய் மதிப்பில் கொய்யா, பப்பாளி, எலுமிச்சை அடங்கிய பழச்செடிகள் தொகுப்பு, 60 ரூபாய் மதிப்பில் தக்காளி, கத்திரி, மிளகாய், கொத்தவரை, வெண்டை, கீரை வகைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, இலவசமாக வழங்கப்படுகிறது. விவசாயிகள்,மக்கள், ஆதார் நகலுடன் பதிவு செய்து விதைகள் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம்.நேரில் செல்ல முடியாதவர்கள் <
சேலம் வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி (செப்டம்பர்.05) இரவு முதல் இன்று பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
சேலம் மாவட்டத்தில் இன்று (05.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மக்களே, தமிழக அரசின் எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையரகத்தின் கீழ் இயங்கும் அரசு அச்சகங்களில் எலக்ட்ரீசியன், மெக்கானிக் உள்ளிட்ட 56 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
வரும் செப்.06 முதல் செப்.27 வரை சேலம் வழியாக செல்லும் வகையில் ஹுப்ளி-ராமநாதபுரம்-ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரயில்களை (07355/07356) சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. வாரத்தில் சனிக்கிழமைதோறும் ஹூப்ளியில் இருந்து ராமநாதபுரத்திற்கும், மறுமார்க்கத்தில், ஞாயிற்றுக்கிழமைதோறும் ராமநாதபுரத்தில் இருந்து ஹூப்ளிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம் ரயில் நிலையத்தில் 5 நிமிடங்கள் நின்று செல்லும்.
சேலம்: சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள மிலாது நபி வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,இறை ஆசியும்,நபியின் ஒளி,கருணை, இரக்கம் நெஞ்சில் வேரூன்றி நல்லொழுக்க வழியில் சென்று துன்பங்கள் அகன்று, அமைதி, அன்பு, நன்மைகள் பெருகி ஒற்றுமையுடன் மகிழ்ந்திருக்க, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய மிலாது நபி திருநாள் நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
இந்திய விமான நிலைய ஆணையத்தில் (AAI) காலியாகவுள்ள 976 ஜூனியர் எக்ஸிக்யூடிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு BE,B.TECH முடித்தவர்கள் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.40000 முதல் ரூ.140000 வரை சம்பளம் வழங்கப்படும். 27.09.2025 தேதிக்குள் https://www.aai.aero/ என்ற இணையதளத்தில் விண்ணபிக்கலாம். இதனை இன்ஜினியரிங் மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க!
நவராத்திரி, தீபாவளி உள்ளிட்ட தொடர் பண்டிகைகளை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு சேலம் வழியாக செல்லும் மதுரை- பெங்களூரு கண்டோன்மென்ட்- மதுரை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் (20671/20672) கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும் என்றும், புதிய நடைமுறை வரும் செப்.11- ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 148 உதவியாளர் பணியிடங்களுக்கு 4,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் அக்.11- ஆம் தேதி 4 தேர்வு மையங்களில் எழுத்து தேர்வு நடத்தப்படவுள்ளது. 200 கேள்விகளுடன் 170 மதிப்பெண்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சிப் பெறுபவர்கள் நேர்முக தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக இன்று செப்டம்பர் 5-ம் கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில் அமைச்சர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள பதிவில் “கற்பது மட்டும் போதாது, கேட்பதும்,கேள்வி கேட்பதும் தான் முன்னேற்றம்” என கற்றுத் தந்த நம் ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.