India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்ற மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் பங்கேற்று பேசிய நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன், “சேலம்-கரூர், கரூர்-திருச்சி, திருச்சி-காரைக்கால் பயணிகள் ரயிலை இணைத்து சேலம்-காரைக்கால் தினசரி ரயிலாக இயக்க வேண்டும். சங்ககிரி ரயில் நிலையத்தை அம்ரித் பாரத் திட்டத்தில் சேர்த்து அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார்.
சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துக்கள் ஏற்படும் இடங்களை கண்டறிந்து காவல்துறை, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை, மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆய்வு மேற்கொள்ளவேண்டும். மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்கும் புதிய வழிமுறைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும் இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி மார்ச் மாதம் 22ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது
போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்று மாரத்தான் போட்டியை துவக்கி வைக்கவுள்ளனர். இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது காலை 6:00 மணிக்கு இந்த மாரத்தான் போட்டி துவங்க உள்ளது. இதில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
சேலம் மாவட்டம், சின்னப்பம்பட்டி பகுதியை சேர்ந்த நடராஜன், இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் 2025 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி லக்னோ அணிக்காக நடைபெறும் போட்டியில் நடராஜன் பங்கேற்கவுள்ளார். இந்த போட்டியில் நடராஜன் சிறப்பாக விளையாட வேண்டும் என அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம், சொர்ணபுரி பகுதியில் திருவண்ணாமலை சேர்ந்த ராஜேஷ் என்பவர் பணம் இரட்டிப்பு தருவதாகக் கூறி பல நபரிடம் பணம் பெற்றுள்ளார். இதனையறிந்த போலீசார், நிறுவனத்தில் சோதனை செய்து, 3 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கானது சேலம் பொருளாதார குற்றப்பிரிவு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மார்ச் 22 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 10 மணி உலக நீர் தினத்தை முன்னிட்டு கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி▶️ காலை 10 மணி தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியினர் கருப்பு கொடி காட்டும் போராட்டம் ▶️ காலை 11 மணி ஆட்டோ மீட்டர் கட்டணத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி கோட்டை மைதானத்தில் ஆர்ப்பாட்டம்
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை இங்கே <
சேலம் கிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ஜான் (எ) சாணக்கியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளனர். போலீசார் விசாரணையில் ரவுடி செல்லத்துரை கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது தெரியவந்தது. இதன் காரணமாக சேலத்தில் ரவுடிகளின் பட்டியலையும் உளவுப்பிரிவு போலீசார் மூலம் மீண்டும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு தாரமங்கலம் அணைமேட்டில் கட்டப்பட்ட முருகன் சிலை தமிழ்நாடு மட்டுமல்லாது உலக அளவில் பேசப்பட்டதை நம் எல்லோரும் அறிந்ததே.
முருகன் சிலையின் மறுசீரமைப்பு பணி 80சதவீதம் முடிவுற்ற நிலையில் முன்பு இருந்த உடல் அமைப்பை முழுவதுமாக மாற்றி, முக அமைப்பை மாற்றியும், நெஞ்சுப் பகுதியில் சிறிய சிவன் சிலையும் முருகர் சிலையும் உள்ளது போல வடிவமைத்து உள்ளனர்.விரைவில் கும்பாபிஷேகம் நடைபெறும்
Sorry, no posts matched your criteria.