India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் சேலத்தில் 2செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.
சேலம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார். இந்த உள்ளூர் விடுமுறைக்கு பதிலாக, சேலம் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு வருகின்ற ஆகஸ்ட் 31 சனிக்கிழமை அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கூடிய எடப்பாடி காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டுவீச்சு என்பது தமிழக மக்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் நிலை உருவாகியுள்ளது. முதல்வர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறைக்கு அச்சுறுத்தல், பாதுகாப்பில்லை என்றால் தமிழக மக்களின் பாதுக்காப்பு கேள்விக்குறியாகிறது என நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீரத்னா குற்றம் சாட்டியுள்ளார்.
ஆடித் திருவிழாவை முன்னிட்டு, சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் இன்று (ஆகஸ்ட் 7) அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மேலும் தங்க கவசத்தில் ஜொலித்த பெரிய மாரியம்மன் சுவாமியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
பிரசித்திப் பெற்ற சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் திருக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு இன்று கோயிலில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அழகிய தோரணங்கள் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. மேலும் கோவில் வளாகத்தை சுற்றியும் சுமார் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது.
முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று சேலம் மத்திய மாவட்ட திமுகவின் சார்பில் அமைதி பேரணி மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் திமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
சேலம், எடப்பாடி காவல் நிலையத்தில் நேற்று பெட்ரோல் வீசப்பட்ட வழக்கில், சம்பவம் நிகழ்ந்த 10 மணி நேரத்தில் இளைஞர் ஆதித்யன் (20) கைது செய்யப்பட்டார். விசாரணையில், யூ-டியூப்பை பார்த்து பெட்ரோல் குண்டைத் தயாரித்தது தெரிய வந்துள்ளது. இளைஞரின் வாக்குமூலத்தால் காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இச்சம்பவம் எடப்பாடி பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மக்களே இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, இன்று (ஆகஸ்ட் 7) சேலம் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேலம் மாவட்டத்தில் உள்ள மாவட்ட கருவூலகம், சார்நிலைக் கருவூல்கள் செயல்படும். இன்றைய உள்ளுர் விடுமுறையை ஈடுசெய்ய ஆகஸ்ட் 31ஆம் தேதி பணிநாளாகச் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க!
சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள காவல் நிலையத்தில் இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீச்சு நடந்த சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆதித்யா என்ற இளைஞர் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாலும், அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், கைது செய்த இளைஞரை, காவல் கண்காணிப்பாளர் அருண்கபிலன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று(6.8.24) முதல் வரும் 9ஆம் தேதி வரை 4 நாள்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பட்டைகோவில், சின்னகடைவீதி, ஹவுசிங்போர்டு அண்ணா நகர், வள்ளுவர் சிலை, கலெக்டர் அலுவலகம், காந்தி சிலை, பழைய பேருந்து நிலையம் பகுதியில் போக்குவரத்து மாற்றம். திருச்சி ரோடு வழியாக வந்து செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் செல்லலாம்.
Sorry, no posts matched your criteria.