India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தலைவாசல் அருகே டிராக்டர் கவிழ்து 6 பேர் பாலத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர். சாத்தப்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் டிராக்டர் ஒட்டிவந்த சம்பத் பரிதாபமாக உயிரிழந்தார்.டிராக்டர் கவிழ்ந்த போது உயிர் பிழைக்க குதித்த டிரைவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்
ஓமலூர் அருகே ஜோடுகுளி என்ற இடத்தில் கார் ஒன்று ஓட்டல் முன்பு நின்றது. போலீசார் டிரைவரிடம் எங்கிருந்து வருகிறீர்கள் என்று விசாரித்துள்ளனர். காரின் பின்பக்க கதவை திறந்து காண்பிக்குமாறு கூறியுள்ளனர். டிரைவர் காரை விட்டு இறங்கி தப்பி ஓடினார். பின்னர் காரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு காரை சோதனை செய்தபோது காரில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
மேட்டூர் அணை நடப்பு ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரிநீர் போக்கி வழியாக உபரிநீர் எந்நேரமும் திறக்க வாய்ப்பிருப்பதால், காவேரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் ஆற்றில் இறங்கவும், குளிக்கவும், துணி துவைத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வருவாய்த்துறை சார்பில் ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன்(31) என்பவர் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தண்டனை கைதியாக சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்டத்தின் கீழ் 6,876 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்ததாவது. மொத்தம் 50,431 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மக்களுடன் முதல்வர் திட்டத்தில் மீதமுள்ள அனைத்து மனுக்களின் மீது தொடர்புடைய துறைகளின் மூலம் விரைந்து தீர்வுகள் காணப்பட்டு வருகிறது. என்று குறிப்பிட்டார்.
சேலம் மாவட்டம் பேளூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் குறிச்சி, பலத்தானூர், நடுப்பட்டி, சின்னமநாயக்கன்பாளையம், புழுதிக்குட்டை, ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள ஏரி பகுதியை ஆக்கிரமித்து, 7 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தனியார் கிளப்-க்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம நாராயண சதீஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.
சேலம் மாநகரில் நேற்றிரவு பெய்ய தொடங்கிய மழை விடிய
விடிய கன மழையாக
கொட்டியது. இந்த மழையால்
சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சேலம்
புதிய பஸ் நிலையம், ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி, ஜங்ஷன், பச்சைப்பட்டி ஆகிய பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பச்சைப்பட்டியில் சுமார் 50 வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் தங்கதுரை-வெண்ணிலை தம்பதியினர். இவர்களுக்கு கடந்த 5 நாள்களுக்கு முன் சேலம் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. இதனையடுத்து குழந்தையை 35வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், குழந்தையை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில், அவரை கைது செய்தனர். விசாரணையில்(அடுத்த பக்கம் திருப்பவும்)
காரிப்பட்டியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். கடந்த ஆண்டு இவருக்கு திருமணம் ஆகியுள்ளது. பின், இவர் 2023ஆம் ஆண்டு கன்சீவ்வாகியுள்ளார். ஆனால், 2024ஆம் ஆண்டு மே மாதம் குழந்தை அபார்ஷன் ஆகியுள்ளது. இதை உறவினர்களிடம் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.