Salem

News August 15, 2024

சேலம்: தேசியக்கொடி ஏற்றி கலெக்டர் மரியாதை

image

சேலம் மாவட்டம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் இன்று (ஆகஸ்ட் 15) சுதந்திர
தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் இரா.பிருந்தாதேவி தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். உடன் சேலம் மாவட்ட
காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News August 15, 2024

சேலத்தில் வேலைவாய்ப்பு: நாளை மிஸ் பண்ணிடாதீங்க!

image

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை சேலம் வேலைவாய்ப்பு அலுவகத்தில் நடைபெற உள்ளது. 3000 காலி பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்கள் மற்றும் வேலைநாடுநர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News August 14, 2024

விமான கட்டணம் உயர்வு: பயணிகள் அதிர்ச்சி

image

தொடர் விடுமுறை காரணமாக சென்னையிலிருந்து சேலம், திருச்சி, மதுரை, கோவை செல்லும் விமானங்களில் டெலிட் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. சென்னை – சேலம் விமான கட்டணம் ரூ.2715 ஆக இருந்த நிலையில் இன்றும் நாளையும் ரூ.8,277 ஆக உயர்ந்துள்ளது. விமானம் கட்டணம் உயர்ந்துள்ளதால் விமான பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

News August 14, 2024

சேலத்தில் காவல்துறை கண்காணிப்பாளராக பொறுப்பேற்பு

image

சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக அருன் கபிலன் பணியாற்றி வந்து சில நாட்களுக்கு முன்பு மாற்றப்பட்டார். அதைத்தொடர்ந்து இன்று சேலம் மாவட்டத்தின் புதிய காவல்துறை கண்காணிப்பாளராக கவுதம் கோயல் பொறுப்பேற்றுக் கொண்டார். மேலும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தனர்.

News August 14, 2024

கிராம சபைக் கூட்டம் பற்றி தெரிந்து கொள்வோமா? (1/6)

image

சேலம் மாவட்டத்தில் நாளை(ஆக.15) கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கிராம பஞ்சாயத்திற்குட்பட்ட பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, பொது இடத்திலோ கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராக இருப்பார். இதில் நீங்களூம் தலைவராக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? (அடுத்த பக்கம் திருப்பவும்)

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தின் தீர்மான நகலை பெறுவது எப்படி? (2/6)

image

7 நாட்களுக்கு முன் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு கிராம சபை கூட்டம் குறித்து தெரிவிக்க வேண்டும். ஊராட்சி தலைவர் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கவில்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும். இதில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தின் நகலை கிராம மக்கள் கட்டணம் இல்லாமல் பெறமுடியும். உங்கள் பகுதியை தவிர்த்து மற்ற கிராம சபை கூட்டத்தில் நீங்கள் கலந்து கொள்ளலாம். அதில் நீங்கள் பார்வையாளராக மட்டுமே இருக்க முடியும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தை நிறுத்த முடியுமா? (3/6)

image

கிராம சபை கூட்டத்தில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 என்றால், குறைந்தபட்சம் 50 பேர், 501 – 3000 என்றால் 100 பேர், 3001 – 10,000 என்றால் 200 பேரும், 10,000 மேல் மக்கள்தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை(130). இதற்கு குறைவாக இருந்தால் கூட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மக்களுக்கு உண்டு. கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் ஆலோசிக்கப்படுவது எது?(4/6)

image

இதில் 2023-2024-ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீா் விநியோகத்தை உறுதி செய்வது, இணையவழி வரி செலுத்தும் முறை, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் முதலான 12 கூட்டப் பொருள்கள் குறித்து ஆலோசிக்கப்படும். காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கிராம சபை கூட்டம் நடப்பதை உறுதி செய்வார்கள்.

News August 14, 2024

கிராம சபை கூட்டம் குறித்து புகார் அளிப்பது எப்படி ? (5/6)

image

உங்கள் ஊராட்சியில் இந்த நிமிடம் வரை கிராமசபை கூட்டம் குறித்த தகவல் தெரியவில்லை என்றாலும், கிராம சபை கூட்டம் நடக்கவில்லை என்றால் ஆட்சியருக்கு புகார் தெரிவிக்க உங்களுக்கு உரிமை உண்டு. முதல்வர் தனிப்பிரிவு – 1100, ஊராட்சி மணி – 155340, அரசின் தலைமை செயலாளர் – 044-25671555, ஊரக வளர்ச்சி துறை செயலகம் – 044-25665566, முதலமைச்சர் தனி பிரிவு – 044 25672283, 9443146857 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

News August 14, 2024

கிராம சபை கூட்டத்தில் நீங்களும் தலைவராக முடியுமா? (6/6)

image

கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT

error: Content is protected !!