Salem

News March 2, 2025

சேலத்தில் கருகலைப்பு: அதிரடி நடவடிக்கை

image

சேலத்தில் கருவில் உள்ள குழந்தைகளை பரிசோதனை செய்து பாலினம் குறித்து விதிமுறைகளை மீறி வருவதாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து அங்கு அதிகாரிகள் ஆய்வு செய்து மருத்துவர், நர்ஸ் உட்பட 9 பேரை சஸ்பெண்ட் செய்தனர். விசாரணையில், இங்கு குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து அதை கலைக்க தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியது தெரியவந்தது. இதுவரை 100-க்கும் மேற்பட்டோருக்கு விதிமுறைகளை மீற கருக்கலைப்பு செய்தது தெரியவந்தது.

News March 2, 2025

‘முழு கவனமும் சாலையில் மட்டுமே இருக்கட்டும்’ 

image

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார். 01) “வாகனம் ஓட்டும் பொழுது செல்போன் பயன்படுத்துவதை கட்டாயம் தவிர்க்கவும். உங்களது முழு கவனமும் சாலையில் மட்டுமே இருக்கட்டும்..! என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

News March 1, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.01 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News March 1, 2025

சேலத்தில் 16 லட்சம் மோசடி? ஆயுதப்படை எஸ்எஸ்ஐ சஸ்பெண்ட்

image

மாநகர ஆயுதப்படை எஸ்எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் பாஸ்கரன். இவர் லோகாம்பாள் என்பவரிடம் 16 லட்சம் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மோசடி செய்தது உண்மை என தெரியவந்தது. இதனையடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

News March 1, 2025

அரசுப் பள்ளிகளில் 25,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு

image

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,000 குழந்தைகளை 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்துள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- சேலம் ஆட்சியர். 

News March 1, 2025

டிகிரி போதும்..இந்திய அஞ்சல் வங்கியில் வேலை

image

இந்திய அஞ்சல் துறையின் ஒரு பகுதியாக செயல்படும் ‘இந்திய அஞ்சல் பேப்மெண்ட் வங்கியில்’ (India Post Payments Bank) உள்ள 51 நிர்வாகி காலிப்பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.30,000 சம்பளமாக தரப்படும். விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 1, 2025

மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்க முடிவு!

image

பொதுமக்களின் நலன் கருதி சேலம் மாவட்டத்தில் 37 வழித்தடங்களில் மினி பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 16.25 கிலோ மீட்டர் தூரம் பேருந்து சேவை இல்லாத வழித்தடமாகவும், எட்டு கிலோமீட்டர் பேருந்து சேவை இருக்கும் வழித்தடமாகவும் இருக்கும் என சேலம் கோட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல்.

News March 1, 2025

சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் வீட்டிலிருந்தே கைப்பேசி வாயிலாக தங்களுக்கு தேவையான வேளாண் எந்திரங்களை பெற்று பயனடையலாம் என வலியுறுத்தியுள்ளார். மேலும் கைப்பேசி வாயிலாகவே தேவைப்படும் நேரத்தில் வரவழைத்துக் கொள்ளலாம். அதற்குண்டான கட்டணத்தை கைப்பேசி வாயிலாகவும் செலுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

News March 1, 2025

சேலத்தில் இன்றைய நிகழ்வுகள் 

image

சேலத்தில் இன்று (மார்ச்.1) முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 8:30 தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி பொன்னம்மாபேட்டை பகுதியில் அன்னதானம் நடைபெறவுள்ளது. 2) காலை 9:30 மணி 2025-26 கல்வி ஆண்டிற்கு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மணக்காடு அரசு துவக்கப்பள்ளி துவக்கி வைக்கும் நிகழ்வு. 3) காலை 9 மணி காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் விவேகானந்தா மருத்துவமனையில் நடைபெறுகிறது. 

News March 1, 2025

பறவைகள் கணக்கெடுப்பில் மாணவர்கள் பங்கேற்கலாம்

image

சேலம் வனக்கோட்டத்திற்குட்பட்ட சேர்வராயன் தெற்கு வனச்சரகம், சேர்வராயன் வடக்கு வனச்சரகம், டேனிஷ்பேட்டை, மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி ஆகிய 6 வனச்சரகங்களில் வருகின்ற மார்ச் 08, 09 ஆகிய தினங்களிலும் சதுப்பு நில பறவைகள் கணக்கெடுப்பும் மற்றும் மார்ச் 15, 16 ஆகிய தினங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், இயற்கை ஆர்வலர்கள் பங்கேற்கலாம்.

error: Content is protected !!