India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் புதிதாக தொழில் தொடங்க விரும்புவோர் தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான சேலம் சிட்கோ தொழிற்பேட்டைகளில் காலியாக உள்ள தொழில்மனைகளை வாங்க www.tansidco.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 94450- 06571 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் வரும் அக்.19-ம்தேதி பொது விநியோகத் திட்டம் தொடர்பான குறைதீர் முகாம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெறும் பொது விநியோகத்திட்டக் குறைதீர் முகாமில் பொதுமக்கள் பொது விநியோகத்திட்டம் தொடர்பான தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலரிடம் தெரிவித்து தீர்வு செய்து கொள்ளலாம்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டுள்ளனர். மழைக்காலத்தில் பாதிப்புகள் நடைபெறாமல் இருக்க துரித நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பச்சப்பட்டி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து சுற்றுலாத்துறை ராஜேந்திரன் இன்று (அக்.15) காலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி, மேயர் ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையாளர் ரஞ்ஜீத் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சேலம் மாநகரின் பல்வேறு பகுதியில் நேற்று முன் தினம் மாலை முதல் நள்ளிரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவினர் இரவு முழுவதும் தண்ணீர் தேங்கிய பகுதிகளை ஆய்வுசெய்து நடவடிக்கை எடுத்தனர். இந்நிலையில் இன்று சேலத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
சேலம் அருகே பனமரத்துப்பட்டி ஒடுவன்காடு பகுதியில் ராஜா என்பவரின் 17 வயது மகளும், 15 வயது மகனும் வெட்டி படுகொலை செய்யப்பட்ட கொடூரம். பக்கத்து நிலத்தின் உரிமையாளர் தனசேகரன் தலைமறைவு. நில தகராறில் சிறார்கள் கொல்லப்பட்டார்களா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருவதால் இன்று மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காகத் திறக்கப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து நீர்த்திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியில் இருந்து 3,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் பாசனத்திற்கான நீர் தேவை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சந்தியூர் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வரும் அக்.16-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள், நோய் மேலாண்மை முறைகள் ஒருநாள் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் ரூபாய் 354 பதிவுக்கட்டணம் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். முதலில் பதிவு செய்யும் 60 நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
சேலத்தில் ஆளுநர் வருகையையொட்டி விமான நிலையம், . மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் தலைமையில் 400 போலீசாரும், பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அவர் செல்லும் பாதையில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு தலைமையில் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாநகரில் கடந்த 9 மாதத்தில் 82 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை, ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்று சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினவ் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.