Salem

News March 6, 2025

சேலத்தில் வேலைவாய்ப்பு – ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை மறுநாள் 08.03.2025 அன்று ஆத்தூர் தேவியாகுறிச்சி தாகூர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. மேலும், 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.

News March 6, 2025

பிளஸ்-1 தேர்வை 38 ஆயிரம் பேர் எழுதினர்

image

நேற்று தொடங்கிய பிளஸ்-1 தமிழ் தேர்வில் சேலம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 ஆயிரத்து 139 மாணவர்கள், 19 ஆயிரத்து 867 மாணவிகள் என மொத்தம் 38 ஆயிரத்து 6 பேர் 343 மாணவர்கள், 224 மாணவிகள் என மொத்தம் 567 மாணவர், மாணவிகள் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத மாவட்டம் முழுவதும் 151 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News March 6, 2025

பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

தலைவாசல் தேவியாக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் இவரது மனைவி பானுமதி இவர்களது மகள் தரணி ஸ்ரீ வயது (15 ) அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் இன்று பள்ளியில் சக தோழிகள் ஐந்து பேர் கேலி கிண்டல் செய்துள்ளனர். இதனையடுத்து தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

News March 5, 2025

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

image

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.இப்பயிற்சி மாதாந்திர உதவித்தொகையாக ரூ.5,000 மற்றும் தற்செயலான செலவுகளுக்கு ஒரு முறை மட்டும் ரூ.6,000 வழங்கப்படும். எனவே, தகுதியுள்ளவர்கள் <>http://pminternship.mca.gov.in/login/ <<>>என்ற இணையதளம் மூலம் வரும் மார்ச் 12- க்குள் விண்ணப்பிக்கலாம் . இதை ஷேர் பண்ணுங்க.

News March 5, 2025

சேலம் மாநகர காவல் இரவு ரோந்து பணி அதிகாரிகள் விபரம்

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும் அசம்பாவிதங்களை தவிரவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது அதன்படி மாநகர காவல் துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர் மார்ச் 5 இரவு அதிகாரிகள் விவரம்.

News March 5, 2025

சேலத்தில் இளம் பெண் சடலமாக மீட்பு 3 பேர் கைது

image

சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதை 60 அடி பாலம் அருகே அழுகிய நிலையில் இளம்பெண் உடல் மீட்கப்பட்டது. காவல்துறையினர் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து ஏற்காடு காவல்துறையினர் அங்கிருந்த ஆவணங்களை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டதில் இரண்டு இளம் பெண்கள் ஒரு இளைஞர் என மூன்று பேரை தற்பொழுது கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News March 5, 2025

நினைத்ததை நிறைவேற்றும் மேச்சேரி பத்ரகாளியம்மன்

image

சேலம், மேச்சேரியில் மிகவும் சக்தி வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயில் அமைந்து உள்ளது. இங்கு தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள்,பில்லி சூனியம் ஏவல் போன்றவை நீங்கும் என்பது நம்பிக்கை. மேலும் திருமண தடைகள், குழந்தைக்காக காத்திருக்கும் தம்பதியினர் ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் அவர்களுக்கு ஏற்பட்ட தோஷம் விலகி நல்வாழ்வு அமையும். இதை மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

News March 5, 2025

சேலம் ரயில்வே கோட்டத்தில் ரூ.2.4கோடி அபராதம்

image

சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணித்த 29 ஆயிரத்து 710 பேர் இடம் இருந்து 2 கோடியே 4 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும். முறையான டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால் டிக்கெட் பரிசோதகர் விதிக்கும் அபராதத்தை கட்டாயம் செலுத்த வேண்டும் என்று எச்சரிக்கை.

News March 5, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும் போலீசார் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய (மார்ச் 4) இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

News March 4, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும் மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாநகர காவல் துறை, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றைய மார்ச் 4 இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

error: Content is protected !!