India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலத்தில் மின் பராமரிப்புப் பணி காரணமாக இன்று (ஆகஸ்ட் 20) காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை தேவூர் துணை மின் நிலையம், அஸ்தம்பட்டி துணை மின் நிலையம், தும்பல் துணை மின் நிலையம், கந்தம்பட்டி துணை மின் நிலையம் ஆகிய துணைமின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் புறநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவனின் மாமனார் வி.சாம்பமூர்த்தி கடந்த 17ம் தேதி காலமானார். இதனையடுத்து சேலம் புத்திரகவுண்டம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.
சேலம் அரசினர் விண்ணப்பங்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடிச் சேர்க்கைக்கு வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து டாக்டர் இரா.பிருந்தாதேவி. தெரிவித்ததாவது: நேரடிச் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தை 85266 39467, 99427 12736, 99441 09416 மற்றும் 98432 75111 என்ற எண்களை தொடர்பு கொண்டு முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். என்று தெரிவித்தார்.
சேலம் மாவட்டம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் பணிபுரிய சமுதாய அமைப்பாளர்கள் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: பணியிடத்திற்கான விண்ணப்பங்களை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ, வருகிற (ஆக.30) மாலை 5.00 மணிக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்படுகிறது.
சேலம் அரசு போக்குவரத்து கோட்டத்துக்குட்பட்ட உட்பட நான்கு மாவட்டங்களில் உள்ள 3.10 லட்சம் அரசு பள்ளி, ஐடிஐ மாணவ மாணவிகளுக்கு இலவச அரசு பேருந்து பாஸ் இந்த மாத இறுதிக்குள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சேலம் அரசு போக்குவரத்து கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் 3.10 லட்சம் மாணவ மாணவிகள் இலவச பஸ் பாஸ் மூலம் அரசு பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்ரமணியன் இன்று வெளியிட்டார். இதில், சேலத்தைச் சேர்ந்த காயத்திரி என்ற மாணவி 668 மதிப்பெண்கள் எடுத்து அரசுப் பள்ளியில் 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் 2ஆம் இடம் பிடித்துள்ளார். இவர் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகிறார். இதே போல், சேலத்தைச் சேர்ந்த மணிசங்கர் என்பவர் 8ஆவது இடத்தை பிடித்துள்ளார். அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஷேர் பண்ணுங்க.
தாரமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் நேற்று மாலை தாரமங்கலம் நங்கவள்ளி சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் அந்த வழியாக வந்துள்ளார். அவர் எஸ்ஐ அழகு துரையிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தனபாலை போலீசார் கைது செய்தனர்.
சேலம் சத்திரம் ரயில்வே கூட்ஸ் ஷெட்டிற்கு வட மாநிலங்களில் இருந்து கோதுமை, துவரம் பருப்பு உள்ளிட்ட தானியங்கள், கோழித்தீவனம் , உரம் உள்ளிட்டவை சரக்கு ரயில்களில் வருகிறது. இதனை இறக்கி, சேலம் மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்தவகையில், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து நேற்று, சரக்கு ரயிலில் 3,165 டன் துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள் வந்தது.
சேலம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பகலில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. அவ்வப்போது மழை வந்தாலும், மழை இல்லாத நேரங்களில் பெரும்பாலும் கோடை காலம் போன்று வெப்பம் அதிகரித்து காணப்படுவதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மரங்களை வெட்டுவதுதான் இது போன்ற பருவநிலை மாற்றத்திற்கான காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சேலத்தில் மின்பராமரிப்பு காரணமாக நாளை காலை 9 முதல் மதியம் 2 மணிவரை தாரமங்கலம், காடம்பட்டி, சிக்கம்பட்டி, தொளசம்பட்டி, அமரகுந்தி, அத்திராம்பட்டி, பவளத்தானூர், அத்திக்காட்டனூர், சவுரியூர், பக்கநாடு, ஆவடத்தூர், ஆடையூர், இருப்பாளி, ஒட்டப்பட்டி குண்டானூர், ஆணைபள்ளம், அடுவாபட்டி, கல்லூரல்காடு, குண்டு மலைகரடு, கன்னியாம்பட்டி, புளியம்பட்டி, ஒருவாபட்டி, மயிலேரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
Sorry, no posts matched your criteria.