India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.08 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

சேலம் மாநகரில் இன்று (08.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம்.

சேலத்தில் மாம்பழம் மட்டுமல்ல இன்னொரு ஸ்பெஷல் இருக்கு. அதுதான் மொறுமொறு தட்டுவடை செட். அப்படி என்ன ஸ்பெஷல்? பொரிகடலை, பச்சரிசி மாவில் தயாரிக்கப்பட்ட தட்டுவடை மீது புதினா சட்னி தடவி கேரட், பீட்ரூட், வெங்காய துருவல் சேர்த்து பரிமாறும்போது ஆஹா! அப்படி இருக்கும். முன்பெல்லாம் அம்மாப்பேட்டை, பொன்னம்மாபேட்டை, பழைய பஸ் ஸ்டாண்டில் கிடைத்தது தற்போது சேலம் மாநகராட்சி முழுவதிலும் தெருவோர கடைகளில் கிடைக்கிது.

ஈரோடு-கரூர் வழித்தடத்தில் பராமரிப்பு காரணமாக, மார்ச் 08, 11, 13, 15 ஆகிய தேதிகளில் திருச்சி- ஈரோடு ரயில் (56809) கரூர் வரையும், செங்கோட்டை- ஈரோடு (16846) கரூர் வரையும், ஈரோடு- செங்கோட்டை ரயில் (16845) கரூரில் இருந்து புறப்படும்; கரூர்- ஈரோடு இடையே இயக்கப்பட மாட்டாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில், பெண்கள் தின விழா நடைபெற்றது. இதில், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்பட நடிகர் பவிஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து மாணவிகளுடன் கலந்துரையாடிய அவர், கல்லூரி மாணவிகளுடன் நடனம் ஆடினார்.

வெயில் காரணமாக பீர் வகைகளின் விற்பனை சேலம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது. அதேவேளையில் பிராந்தி, விஸ்கி, ரம் உள்ளிட்டவைகளின் விற்பனை சற்று சரிந்துள்ளது. கோடை என்பதால் பீர் வகைகளின் விற்பனை களைக்கட்டியுள்ளது. எனவே அதற்கு ஏற்ப டாஸ்மாக் கடைகளுக்கு கூடுதலாக பீர் வகைகள் விற்பனைக்கு அனுப்ப வேண்டும் என டாஸ்மாக் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜோலார்பேட்டை ரயில் வழித்தடத்தில் மேம்பாட்டு பணிகள் காரணமாக, மார்ச் 08,09,11,15,16 ஆகிய தேதிகளில் சேலம் வழியாக இயக்கப்படும் ஈரோடு-ஜோலார்பேட்டை ரயில் (56108) ஈரோட்டில் இருந்து திருப்பத்தூர் வரையிலும், ஜோலார்பேட்டை- ஈரோடு ரயில் (56107) திருப்பத்தூரில் இருந்து புறப்பட்டு ஈரோடு வரையிலும் இயக்கப்படும். இந்த ரயில்கள், திருப்பத்தூர்- ஜோலார்பேட்டை இடையே இயக்கப்படாது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவிப்பு.

சேலத்தில் இன்று மார்ச்.8ம் தேதி ரேஷன் கார்டுகள் குறை தீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், திருத்தம், விலாசம் மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். உணவு சப்ளை மற்றும் நுகர்பொருள் பாதுகாப்பு உதவி ஆணையர் அலுவலகங்களில் இந்த குறை தீர்க்கும் முகாம் நடைபெறும். இந்த முகாமை பயன்படுத்தி பயன்பெற்று, பிறருக்கும். Share பண்ணுங்க

ஹோலி பண்டிகையை முன்னிட்டு,வரும் மார்ச் 08,15 ஆகிய தேதிகளில் போத்தனூரில் இருந்து பீகார் மாநிலம் ப்ரௌனிக்கும், மறுமார்க்கத்தில், மார்ச் 11,18 ஆகிய தேதிகளில் ப்ரௌனியில் இருந்து போத்தனூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, பெரம்பலூர், விஜயவாடா வழியாக இயக்கப்படும் இந்த சிறப்பு ரயில்கள் சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.

மேட்டூரை சேர்ந்த பெண்ணுக்கு துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி 2.5 லட்சம் மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், அம்மாபேட்டையை சேர்ந்த சுந்தரராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர். சைபர் குற்றம் தொடர்பான புகார்களுக்கு 1930 எண்ணை அழையுங்கள். இது போன்ற மோசடியில் சிக்கி கொள்ளமால் இருக்க இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
Sorry, no posts matched your criteria.