Salem

News March 10, 2025

சேலம்: அரசு தலைமை நீர் பகுப்பாய்வகத்தில் வேலை

image

தமிழக அரசின் பொது சுகாதார (ம) நோய் தடுப்பு மருத்துவ துறையில் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 8ஆம் வகுப்பு முதல் B.SC( CHEMISTRY) முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊதியமாக ரூ.8500 முதல் ரூ.21,000 வரை வழங்கப்படும். கடைசி நாள் 11.3.25 ஆகும். விண்ணப்பிக்க <>இங்கே<<>> க்ளிக் செய்யவும். இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 10, 2025

மாநகராட்சி ஆணையர் நியமனம்: அன்புமணி வலியுறுத்தல்

image

சேலம் மாநகராட்சி ஆணையராக இளங்கோவன் நியமிக்கப்பட்டதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநகராட்சி ஆணையர் பணியிடங்களும் ஐ.ஏ.எஸ். நிலை அதிகாரிகளைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும், அனைத்து மாநகராட்சிகளிலும் நேர்மையான இளம் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளை ஆணையாளர்களாக நியமிக்க வேண்டும் என பா.ம.க. மாநில தலைவர் டாக்டர்.அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News March 10, 2025

டயர் வெடித்து ஒரே குடும்பத்தில் 25 பேர் படுகாயம்

image

சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருமணத்திற்காக திருக்கடையூர் சென்று இன்று இரவு 9 மணி அளவில் வீட்டுக்கு வரும்போது, பஸ்ஸின் டயர் வெடித்ததில் 25 பேர் படுகாயம் அடைந்து, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார் ஆறுதல் கூறினார். மேலும், மேல் சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News March 9, 2025

4 விருதுகளைத் தட்டிச் சென்ற சேலம் கோட்டம்!

image

மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு (ASRTU) சார்பில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 19 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் எரிபொருள் சேமிப்பு, சாலைப் பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்காக 4 விருதுகளை வென்று சிறப்பித்துள்ளது.

News March 9, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், மக்களை பாதுகாக்கவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச் 9 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. 

News March 9, 2025

சேலம் மாநகரில் இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (09.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். 

News March 9, 2025

மகளிர் தினவிழாவில் ஆவேசமடைந்த பாடகர் 

image

சேலத்தில் நடைபெற்ற பெண்கள் தின விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல பாடகரும் நடிகருமான க்ரிஷ் கலந்து கொண்டார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பள்ளி குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க அடித்தால் எந்திரிக்காத அளவிற்கு தண்டனைகள் கடுமையாக இருக்க வேண்டும். பெண்களையும் சமூக வலைத்தளத்தையும் பிரிக்க வாய்ப்பே இல்லை. ரீல்ஸில் இருந்து வெளியே வந்தால் நல்ல உணவு கிடைக்கும் என்றார்.

News March 9, 2025

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 3,912 வழக்குகளுக்கு தீர்வு!

image

சேலம், சங்ககிரி, ஓமலூர், மேட்டூர், ஏற்காடு, வாழப்பாடி, இடைப்பாடி உள்ளிட்ட நீதிமன்றங்களில் நேற்று தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. 16 அமர்வுகளில் சமரசம் செய்யக்கூடிய 5,024 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 3,912 வழக்குகளில் தீர்வுக் காண்ப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 48.36 கோடி நிவாரணம் வழங்கப்பட்டது.

News March 9, 2025

திருமண தடை நீங்கும் தான்தோன்றீஸ்வரர் கோயில்

image

சேலம் மாவட்டம் பேளூர் அமைந்துள்ளதுள்ளது 1000 ஆண்டுகள் பழமையான அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கமானது உளி படாமல் சுயம்புவாக தானே தோன்றியதால் இவர் தான்தோன்றீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இத்தலத்தில் உள்ள கல்யாண விநாயகரை வழிபட்டால் நீண்ட நாள் திருமண தடை உள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.இதை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

News March 9, 2025

சேலத்தில் பெண்ணை கேலி, கிண்டல் செய்த வாலிபர் கைது

image

சேலம் தம்மநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது20). இவர் கொண்டலாம்பட்டி பகுதியில் பெண் ஒருவரை வேலைக்கு செல்லும்போது வழிமறித்து கேலி, கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாமோதரனை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!