India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் வாட்ச், கடிகாரம் பழுது நீக்குதல் குறித்து 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கு சேர்க்கை நடக்கவுள்ளது. இதற்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இதற்கு நவ.20-க்குள் அசல் ஆவணங்களான மதிப்பெண் சான்றிதழ், ஆதார், 4 புகைப்படத்துடன் சேலம் தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயன்பெறலாம். 75026-28826 என்ற எண்ணை கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், சேலம் மாநகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பட்டாசுக் கடைகளில் விதவிதமான பட்டாசுகளையும், கிப்ட் பாக்ஸ்களையும் பொதுமக்கள் தங்களது பிள்ளைகளுடன் வந்து ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். இதனால் தீபாவளி பண்டிகைக்கான பட்டாசு வியாபாரம் சூடுபிடித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் சஹோதயா பள்ளிகள் இணைந்து நடத்திய தடகளப் போட்டியில் உடையாப்பட்டியில் அமைந்துள்ள கைலாஷ் மான்சரோவர் சி.பி.எஸ்.இ பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பாகக் கலந்து கொண்டு 15 தங்கம், 14 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கங்களை வென்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அசத்தினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்தும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.
மேச்சேரி உப்புபள்ளம் பகுதியைச் சேர்ந்த மாரியம்மாள் (60) வீட்டில் தனியாக இருந்த போது 2 பெண்கள் ஜோதிடம் பார்ப்பதாகக் கூறி பரிகாரம் செய்ய 1/2 பவுன் தோடு, ரூபாய் 4,000 பணம் பெற்றுக் கொண்டு மாயமாகினர். மேச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருச்சி தொட்டியத்தை சேர்ந்த ரேவதி (20) மற்றும் மற்றும் வைத்தீஸ்வரி (26) ஆகியோரை கைது செய்தனர்.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில முதல் மாநாடு இன்று (அக்.27) மாலை நடைபெறவுள்ள நிலையில், சேலம் மாவட்டத்தில் ஓமலூர், மேட்டூர், கன்னங்குறிச்சி, மகுடஞ்சாவடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சேர்ந்த த.வெ.க.வினர் பேருந்துகள் மூலம் மாநாட்டு திடலுக்கு புறப்பட்டு சென்றனர்.
தீபாவளி அக்.31ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சேலம் கோட்டத்திலிருந்து சுமார் 500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. நாளை முதல் நவ.4ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், ஓசூர், பெங்களூர், திருவண்ணாமலை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, புதுச்சேரி, கடலூர், மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சேலம் கோட்டை போக்குவரத்து இயக்குனர் தெரிவித்தார்.
மேட்டூர் அணையில் இன்றைய நிலவரப்படி, நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியிலிருந்து 30,475 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 106.480 அடியாக உள்ள நிலையில், நீர் இருப்பு 73.495 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து பாசனத் தேவைக்காக வினாடிக்கு 2500 கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்.30, 31, நவ.03 தேதிகளில் ஈரோட்டில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும், அக்.30, 31, நவ.03 தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து ஈரோட்டிற்கும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சிறப்பு ரயில், சேலம், பொம்மிடி, மொரப்பூர், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், வரும் அக்.27ல் திருநெல்வேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் (06074), அக்.28ல் சென்னை சென்ட்ரலில் இருந்து திருநெல்வேலிக்கும் (06073) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும். சேலம் ரயில் நிலையத்தில் 3 நிமிடங்கள் நின்றுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழப்பாடி முத்தம்பட்டி பஸ் நிறுத்தம் எதிரே, சென்னையில் இருந்து சேலம் நோக்கி தீபக் அவரது மனைவி தெய்வானை அவர்களது, 9மாத ஆண் குழந்தையுடன் காரில், இன்று காலை 7 மணிக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், பக்கவாட்டு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 9 மாத குழந்தை உயிரிழந்தது. கணவன், மனைவி இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.