India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாழப்பாடி அருகே பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் அதிமுக கிளை செயலாளர் ரவி (50) என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். அவர் மீது உடம்பில் காயங்கள் இருப்பதாக கூறப்படுவதால், இது கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை செய்து வருகின்றனர். இதுகுறித்து தகவலின் பேரில் போலீசார் விசாரணையில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அருகே அதிமுக கிளை செயலாளர் ரவி மர்மமான முறையில் உயிரிழந்த நிகழ்வு அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கிளை செயலாளர் ரவி(50) உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. ரவி உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு கோணங்களில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாநகரப் பகுதியில் உள்ள வின்சென்ட், அஸ்தம்பட்டி, அழகாபுரம் மற்றும் கோரிமேடு ஆகிய பகுதிகளில் காலை முதல் மெயில் சுட்டெரித்திருந்த நிலையில் இன்று மாலை நேரம் திடீரென கனமழை பெய்தது. கனமழை பெய்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திடீரென மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
சேலம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் கடந்த 2016ம் ஆண்டு பிரேசிலில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 2020ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்று அசத்தியுள்ள நிலையில், நடப்பு பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் 3-வது முறையாக பதக்கம் வென்று அசத்துவாரா?என்ற எதிர்பார்ப்பில் காத்துக் கொண்டிருக்கின்றனர். சேலம் மாவட்ட மக்கள்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு குறித்த சேலம் மாவட்ட அளவிலான முகாம் வருகின்ற ஆகஸ்ட்30- ஆம் தேதி அன்று சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாநகராட்சித் திடலில் நடைபெற உள்ளது. அதனால் விவசாயிகள் அனைவரும் பயன்பெரும் வகையில் நடைபெற உள்ளதாக விவசாயிகள் முகாமில் கலந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.
சேலம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் , தற்போதைய திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி மாநில துணைச் செயலாளருமான சேலம் எஸ்.ஆர். பார்த்திபன் நேற்று சென்னையில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சென்று சால்வை அணிவித்து பூ கொத்துக் கொடுத்து சந்தித்தார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான 17ஆவது பாரா ஒலிம்பிக் போட்டி இன்று (ஆக.28) பாரிஸில் தொடங்குகிறது.
வரும் செப்.8 வரை நடக்கும் போட்டியில் 184 நாடுகளை சேர்ந்த 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். குறிப்பாக, இந்தியா சார்பில் 84 பேர் பங்கேற்கவுள்ள நிலையில், தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த மாரியப்பன் மற்றும் துளசிமதி, நித்ய ஸ்ரீசிவன், சிவராஜன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு சேலம் வழியாக சென்னை சென்ட்ரல்- கொச்சுவேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே. ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 25 வரை சென்னை சென்ட்ரலில் இருந்து கொச்சுவேலிக்கும், ஆகஸ்ட் 29 முதல் செப்டம்பர் 26 வரை கொச்சுவேலியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி நடப்பு மாதத்திற்கான கூட்டம் வரும் 30ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. என கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. இந்நிலையில் நேற்று சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. மழை காரணமாக அப்பகுதியில் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மேலும் மழையால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Sorry, no posts matched your criteria.