Salem

News August 30, 2024

சேலம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News August 30, 2024

சேலம் வழியாக புதிய வந்தே பாரத் ரயில்.

image

மதுரை- பெங்களூரு இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நாளை (ஆக31) பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.
இந்த வந்தே பாரத் ரயில், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
பிரதமர் தொடங்கி வைக்கும் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சேவை, செப்.02ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

News August 30, 2024

சேலம் மாவட்ட அளவிலான முகாம்: கலெக்டர் தொடங்கிவைப்பு

image

சேலம் மாவட்டம் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மைதானத்தில் நடைபெற்ற வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட அளவிலான முகாமை சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தொடங்கி வைத்தார். இதில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாமக சட்டமன்ற உறுப்பினர் அருள் கலந்து கொண்டனர்.

News August 30, 2024

விநாயகர் சதுர்த்தி: சேலம் கலெக்டர் கெடுபிடி!

image

விநாயகர் சதுர்த்தி செப்.7ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவை: சிலைகள், 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், சிலைகளை ஊர்வலமாக போலீசார் தெரிவிக்கும் சாலையில் எடுத்துச்செல்ல வேண்டும், போலீசார் தெரிவிக்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டும், வாகனங்களில் சிலை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பாகவும், மக்களுக்கு இடையூறு இல்லாமலும் இருக்க வேண்டும்.

News August 30, 2024

சங்ககிரியில் கொட்டித் தீர்த்த கனமழை

image

சேலம் மாவட்டம் சங்ககிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று (ஆகஸ்ட் 29) மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. சங்ககிரி, ஆர்.எஸ் வடுகப்பட்டி, தேவூர், குள்ளம்பட்டி, மூலப்பாதை, செட்டிப்பட்டி, கத்தேரி ஆகிய பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்ததால், அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

News August 30, 2024

விநாயகர் சதுர்த்தி: சேலம் கலெக்டர் கெடுபிடி!

image

விநாயகர் சதுர்த்தி செப்.7ல் கொண்டாடப்பட உள்ள நிலையில் சேலம் ஆட்சியர் பிருந்தா தேவி கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அவை: சிலைகள், 10 அடி உயரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும், சிலைகளை ஊர்வலமாக போலீசார் தெரிவிக்கும் சாலையில் எடுத்துச்செல்ல வேண்டும், போலீசார் தெரிவிக்கும் வழிமுறையை பின்பற்ற வேண்டும், வாகனங்களில் சிலை எடுத்துச் செல்லும்போது பாதுகாப்பாகவும், மக்களுக்கு இடையூறு இல்லாமலும் இருக்க வேண்டும்.

News August 29, 2024

நாளை சேலம் வரும் இபிஎஸ்

image

சேலம், ஓமலூர் கமலாபுரம் விமான நிலையத்திற்கு நாளை சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர், அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமானத்தில் வருகிறார். அவரை வரவேற்க அனைத்து அதிமுக நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் சமூக ஆர்வலர்கள் வரவேண்டும் என்று ஓமலூர் சட்டமன்ற உறுப்பினர் மணி கேட்டுக்கொண்டார்.

News August 29, 2024

சேலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

சேலம் மாவட்ட ஆட்சியர்  இரா.பிருந்தாதேவி, தெரிவித்துள்ளதாவது, சேலம் மாவட்டத்தில் ஆகஸ்ட் 2024 மாதந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.08.2024 நாளை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியரக இரண்டாம் தள கூட்ட அறை எண் 215ல் நடைபெற உள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயச் சங்க பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்கலாம் என்று கூறினார்.

News August 29, 2024

சேலத்தில் பிரசவத்தில் தாய் குழந்தை மரணம்

image

பீகாரைச் சேர்ந்த கூலி தொழிலாளி சம்போசிங் மனைவி சஞ்சீவி தேவி (26) பிரசவத்துக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். குழந்தை வயிற்றிலேயே இறந்ததை கண்டுபிடித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை வெளியே எடுத்தனர். தொடர்ந்து, ரத்தப்போக்கு காரணமாக சஞ்சீவிதேவி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

News August 29, 2024

சேலத்தில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

image

சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குரும்பப்பட்டி உயிரியல் பூங்கா அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பள்ளிக்கு விடுமுறை அளித்து மிரட்டல் குறித்து பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் மாணவர்களை இன்று பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும பேருந்தில் ஏறிய மாணவர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்படுவர் என்றனர்.

error: Content is protected !!