India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக காவல்துறையில் புதிதாக 444 எஸ்ஐக்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிலையில் பயிற்சி முடித்தவர்களுக்கு காவல் நிலையம் ஒதுக்கப்பட்ட நிலையில் சேலம் மாவட்டத்திற்கு 10 காவல் உதவி ஆய்வாளர்களும், மாநகரத்திற்கு 6 காவல் உதவி ஆய்வாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 காவல் உதவி ஆய்வாளர்களும் அந்தந்த காவல் நிலையத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் இரா. பிருந்தாதேவி தலைமையில் நேற்று நடைபெற்றது. பின்னர், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணவும், குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் மனுவின் மீது உரிய தீர்வு காண்பதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
ஓமலூரில் திமுக தெற்கு ஒன்றியம் சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மூத்த நிர்வாகி, திமுக நிர்வாகிகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. இம்மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு உள்ளார். அவர் வரும் போது நம்மால் எதுவும் பேசமுடியவில்லை. எனவே, சேலத்திற்கு ஒரு அமைச்சர் கொடுத்தால் தங்களை குறைகளை தெரிவிக்க முடியும். இங்கு அமைச்சர் இல்லை என்றால் வெற்றி பெறமுடியாது என்றார்.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி பெற்று சேலம் மாவட்டத்தில் முதல்முறையாக பள்ளி, கல்லூரிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 6ஆம் தேதி தொடங்கவுள்ள இதில் சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளி கல்லூரிகள் பங்கேற்க உள்ளதாக மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகம் தெரிவித்தனர். இதன் மூலம் கிராமம், நகர்புறங்களில் இருந்து விளையாட்டு வீரர்களை அடையாளாம் காண முடியும் என்றனர்.
ஆத்தூர் இராணிப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்ல விநாயகர் திருக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா வருகின்ற 7.9.2024 முதல் 9.9.2024 வரை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. 25ம் ஆண்டு நிகழ்ச்சிக்கு கால்கோள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் ராணிப்பேட்டை நண்பர்கள் குழு அனைவரும் கலந்து கொண்டனர்.
சேலம் மாநகர் பகுதிக்குட்பட்ட சத்தியமூர்த்தி தெருவில் 15 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட எட்டுக்கை அம்மன் சிலையை அகற்ற மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளித்து அதனை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை -பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (செப்.2) முதல் இயக்கப்படுகிறது. வாரத்தில் செவ்வாய்க்கிழமையைத் தவிர்த்து மற்ற 6 நாட்களும் இயக்கப்படவுள்ளது. அதிகாலை 05.15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் காலை 09.15 மணிக்கு சேலத்தை வந்தடையும். மறு மார்க்கத்தில், மாலை 04.50 மணிக்கு சேலம் ரயில் நிலையத்தை வந்தடையும். சுமார் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது, கண்டெய்னர் லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஓட்டுநர் தொட்டியம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் பல லட்சம் மதிப்பிலான ஆயில் வீணாகியது. இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி இம்மாதம் நடத்தப்படவுள்ளது. இதற்கு முன்பதிவு ஆக.17ல் துவங்கி, கூடுதல் அவகாசத்துடன் இன்று (செப்.2) வரை வழங்கப்பட்டது. சேலத்தைச் சேர்ந்தவர்கள் இன்று மாலைக்குள் https://www.sdat.tn.gov.in/என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சேலம் உடையாபட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டு துவக்கி வைத்து. பேசும்போது”எந்த விஷயத்தையும் தடையாக நினைக்க கூடாது. ஒரு வருடம் என்னால் விளையாட முடியவில்லை. நான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் முயற்சியை விட மாட்டேன். எவ்வளவு தோண்டுபோனாலும் தன்னம்பிக்கை விட மாட்டேன் என்று மனம் திறந்து பேசினார்.
Sorry, no posts matched your criteria.