India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு காய்ச்சல் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், ஆட்சியர் பிருந்தாதேவி தலைமையில் ஆட்சியரகத்தில் நடைபெற்றது. மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணியில் 1,598 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டெங்கு கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவுறுத்தினார்.
சேலத்தில் 2024-2025ம் நிதி ஆண்டில் 428 பேருக்கு தொழில் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சிவக்குமார் கூறினார். உற்பத்தி தொழில், உணவு பதப்படுத்தல், ஆயத்த ஆடை தைத்தல், தென்னை நார்ப்பொருள் உற்பத்தி, ஹாலோ பிளாக், பல்பொருள் அங்காடி, ஆட்டோ மொபைல்ஸ், அழகு நிலையம், கழிவு மேலாண்மை, ஆம்புலன்ஸ் உள்பட தொழில் தொடங்க கடன் வழங்க பரிந்துரை செய்யப்படுகிறது என்றார்.
சேலம் மாவட்டத்தில் ரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம், சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் நடைபெறவுள்ளன. சேலம் மாவட்டத்தில் 385 கிராம ஊராட்சிகளில் செப்.09 முதல் செப்.12 வரை கிராம பொது சேவை மையக்கட்டடங்களிலும் , 20 வட்டார அளவில் செப்.19 முதல் செப்.20 வரை வட்டாரப் பொது சேவை மையக் கட்டடங்களிலும், மாவட்ட அளவில் செப்.25 அன்று ஆட்சியரகத்தில் நடைபெறவுள்ளது.
சேலம்: வாழப்பாடி அடுத்த பேளூர் பகுதியைச் சேர்ந்தவர் இராஜசேகரன்,(39). இவர் வாழப்பாடி அரசன் குட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். இவருக்கு ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டு, இன்று சென்னையில் நடந்த விழாவில், இராஜசேகரனுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விருது வழங்கி, வாழ்த்தி பாராட்டினார். இவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சேலம்- பெங்களூரு, சேலம்- கொச்சின், கொச்சின்- சேலம், பெங்களூரு- சேலம் ஆகிய விமான சேவைகளை அலையன்ஸ் ஏர் நிறுவனம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் (செப்.05) முழுவதுமாக ரத்துச் செய்துள்ளதாக சேலம் விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பயணிகளுக்கு டிக்கெட் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் வருகைதந்த தமிழக வணிக வரித்துறை மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தியை சேலம் சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி ஆகியோர் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேலும் அதைத் தொடர்ந்து அமைச்சரிடம் சட்டமன்ற உறுப்பினரும், மாவட்ட ஆட்சியரும் சந்தித்து பேசினர்.
திட்டமில்லா பகுதிகளில் கட்டப்பட்டு இயங்கிவரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களை வரன்முறைபடுத்த விண்ணப்பிக்கலாம். திட்டமில்லா பகுதிகளில் 2011 ஜனவரி 1ஆம் தேதிக்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று சேலம் கலெக்டர் பிருந்தா தேவி தெரிவித்தார்.
விஜய்யின் ‘G.O.A.T.’ திரைப்படம் தமிழகம் முழுவதும் வெளியான நிலையில், சேலத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் சேலம் மாவட்ட தலைவர் தமிழன் ஆ பார்த்திபன் தலைமையிலான ரசிகர்கள் கேக் வெட்டியும், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மைப் பணியாளர்களுக்கு வேஷ்டி, சேலைகள் மற்றும் மரக்கன்றுகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளராக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் நியமனம் செய்யப்பட்டார். கட்சியின் நிறுவனர் ராமதாஸிடம் நேரில் சென்று வாழ்த்து பெற்றார். மேற்கு மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் தன்னை நியமன செய்ததற்கு நன்றி தெரிவித்த பின்பு, வருகிற சட்டமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி வெற்றிபெற அரும்பாடுபடுவேன் என்றும் கூறினார்.
மேட்டூர் அணையின் தற்போதைய நிலவரப்படி அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 15,888 கன அடியிலிருந்து 17,272 கன அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 116.240 அடியாக அதிகரித்துள்ளது. நீர் இருப்பு 87,600 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் அணை மின் நிலையம் வழியாக 19,000 கன அடியும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாயில் 700 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.