India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வாகன ஓட்டிகள் அனைவரும் முன் செல்லும் வாகனத்துடன் குறைந்தது 10 மீட்டர் தூரம் விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பான தூரம் பின்பற்றுவது விபத்துகளை தவிர்க்கும் முக்கிய வழிமுறையாகும் எனவும் பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் இணையதளத்திற்கு eservices.tn.gov.in/eservicesnew/index செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். அதில் மாவட்டம், வட்டம், கிராமம் பட்டா, சிட்டாவை தேர்வு செய்து உங்கள் செல்போன் எண்ணை பதிவிடுங்கள். பின்னர் OTP-யை பதிவிட்டு உறுதி செய்தவுடன் உங்களது ஆவணம் PDF ஃபைலாக தோன்றும். அதனை பிரிண்ட் அவுட் எடுத்துக்கோங்க அவ்வளவுதான். (SHARE IT NOW)

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் nlm.udyamimitra.in என்ற இணையதளம் வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பிக்கலாம்.ஷேர் பண்ணுங்க.

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் கிழே உள்ள எண்களுக்கு அழைக்கலாம என சேலம் கலெக்டர் அறிவிப்பு: கெங்கவல்லி – 04272451943,ஆத்தூர்- 04282-251400, ஏற்காடு -04292-223000,ஓமலூர்-04290-220224,மேட்டூர்-04298-244063, எடப்பாடி-0427-2450026,சங்ககிரி 04283-240242, வீரபாண்டி-0427-2904666, சேலம் மேற்கு-0427-2212844,சேலம் வடக்கு-0427-2212844,சேலம் தெற்கு
0427-2461616!SHAREit

சேலம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பணிபுரிந்த வந்த கபீர், சென்னைக்கும், நாமக்கல் முதன்மைக்கல்வி அலுவலர் மகேஸ்வரி, சேலத்துக்கும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தவிர சேலம் மாவட்ட கல்வி அலுவலர் மான்விழி(தொடக்க கல்வி), பதவி உயர்வில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் 26 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மக்களின் சமூக வலைதள பாதுகாப்பை உறுதிசெய்ய, தங்கள் முகநூல் (Facebook) கணக்கில் Profile Lock செய்வது அவசியம் என சேலம் காவல்துறை தெரிவித்துள்ளது. இது மூலம் அறிமுகமில்லாத நபர்கள் உங்கள் புகைப்படம், தகவல் போன்றவற்றைப் பெற முடியாது. தனிப்பட்ட தகவல்களை பாதுகாக்க அனைவரும் உடனே ‘Lock’ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சேலம் மாநகர காவல் துறை, குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டது. “Teach your children – Good Touch & Bad Touch” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட போஸ்டர் மூலம் பெற்றோர்களை தங்கள் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல் மற்றும் தவறான தொடுதல் குறித்து அறிவுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சேலம் பெருமாம்பட்டியை சேர்ந்த செந்தில் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவருக்கும் தீபாவளி சீட்டு நடத்தியது தொடர்பாக கொடுக்கல் வாங்கல் பிரச்சனை இருந்துள்ளது. இந்நிலையில் பழனிசாமியும் அவரது நண்பர் பொட்டு கண்ணன் என்பவரும், செந்திலிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து இரும்பாலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரிக்கின்றனர்.

1) இந்திய ரயில்வேயில் 2,569 இன்ஜினியர் பணியிடங்கள் (rrbapply.gov.in)
2) எச்.எல்.எல். நிறுவனத்தில் வேலை (lifecarehll.com)
3) தமிழக சுகாதாரத்துறையில் 1,429 பணியிடங்கள் (mrb.tn.gov.in)
4) 12-ம் வகுப்பு முடித்தவருக்கு ரயில்வேயில் வேலை (rrbapply.gov.in)
5) நர்சிங் முடித்தவருக்கு அரசு மருத்துவமனையில் வேலை (tmc.gov.in)
இதை வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க.

சேலம் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <
Sorry, no posts matched your criteria.