India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் அரசு மருத்துவமனையில் காவலர் ஒருவர் மரியாதைக் குறைவாகப் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்பு குழு விளக்க அளித்துள்ளது. அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் மருத்துவமனையின் பணியிலிருந்த காவலர் நோயாளிகளிடம் தரக்குறைவாகப் பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பாட்டர். இந்த பழைய காணொளி தற்போது பரவிவருகிறது என தெரிவித்துள்ளது.
சேலத்தில் சாலை விதிகளை மீறுவோர் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு லட்சம் வழக்குகள் தேக்கம் அடைந்துள்ளது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூபாய் 2.70 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு நகரங்களில் உள்ளதை உள்ளதைப்போல பைன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் ஆலோசனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலம், ஜாகிர் அம்மாபாளையத்தில் உள்ள வெண்ணங்கொடி முனியப்பன் கோவில். வெண்ணங்கொடி என்ற ஒரு வகை மரக்கொடி படர்ந்த பகுதியில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் வெண்ணங்கொடி முனியப்பன் என பெயர் வந்தது. இங்கு அமாவாசை, பௌர்ணமியில் சிறப்பு வழிபாடு நடைபெறும். மேலும், இங்கு ஞாயிறு தோறும் பொங்கல் வைத்து வழிபாடு நடக்கும். சேலம் மக்களுக்கு காவல் தெய்வமாக உள்ளது. (Share பண்ணுங்க)
தமிழக வெற்றிக் கழகத்தின் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் சேலம் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டப் பொருளாளர்கள், துணைச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோரை நேரில் அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்த த.வெ.க.வின் சேலம் மத்திய மாவட்டச் செயலாளர் தமிழன் ஆ பார்த்திபன், அசைவ பிரியாணியுடன் கூடிய அசைவ விருந்து வைத்து அசத்தினார்.
சேலத்தில் இன்றைய முக்கிய நிகழ்வுகள்: 1) காலை 10 மணிக்கு மக்களுடன் முதல்வர் மூன்றாம் கட்டம் அமைச்சர் ராஜேந்திரன், அமைச்சர் கணேசன் துவக்கி வைப்பு. 2) காலை 10 மணிக்கு மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை கண்டித்து கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்.3) காலை 10 மணிக்கு குகை நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா பள்ளி மைதானம்
சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற பிப்ரவரி 5ஆம் தேதி மரவள்ளிக்கிழங்கு விலை நிர்ணயம் தொடர்பான முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளதாகவும், விவசாயிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள் , வியாபாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில், கிழங்கு விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் இன்று “குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாகவோ, முதலீடு செய்யும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி வரும் லிங்க், ஆன்லைன் விளம்பரங்களை நம்பி, உங்கள் பணத்தை இழந்து விட வேண்டாம். ஆன்லைன் மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்பதத்தை வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்கள் நிறைவடைந்த நிலையில், மூன்றாம் கட்ட முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை நான்காம் தேதி ஆத்தூர், ராமநாயக்கன்பாளையம், புங்கவாடி, அம்மம்பாளையம், வளையமாதேவி, கல்லா நத்தம் பகுதியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட 15 ரயில் நிலையங்களில் மத்திய அரசின் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ.271 கோடியில் மதிப்பீட்டில் நடை மேம்பாலம், நகரும் படிக்கட்டுகள், மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் பங்கஜ் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டத்தில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காவல்துறை உட்கோட்டத்திற்குட்பட்ட சேலம் ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், ஓமலூர், மேட்டூர், வாழப்பாடி, உட்பட்ட பகுதிகளில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (பிப்.3) இரவு ரோந்து அதிகாரிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.