India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ரயில்வே கோட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் ரயில்களில் டிக்கெட் இன்றியும், முறைகேடாகவும் பயணித்த சுமார் 26,165 பேரிடம் இருந்து ரூபாய் 1.82 கோடி அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. ரயிலில் பயணிக்கும் மக்கள் முறையாக டிக்கெட் எடுத்து பயணிக்க வேண்டும். மீறி டிக்கெட் இன்றி பயணித்தால் டிக்கெட் பரிசோதகர்களால் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சேலம் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேகங்களை வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு, பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற இலவச எண்ணைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சலுக்கு நீங்கள் எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும்.SHARE IT NOW
வாழப்பாடி புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (38). வாழப்பாடி அய்யாகவுண்டர் தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் (37). இருவரும், புதுப்பாளையம் பகுதியில் உள்ள அரசு மதுபான கடை முன், நேற்று இரவு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பீர் பாட்டிலால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டு குத்திக்கொண்டனர். இதுகுறித்து தகவலின் பேரில் அப்பகுதிக்குச் சென்ற வாழப்பாடி போலீசார், இருவரையும் மீட்டு, விசாரிக்கின்றனர்.
சேலத்தில் செப்.11 இன்றைய முக்கிய நிகழ்வுகள் ▶️காலை 9 மணி முண்டாசு கவி மகாகவி பாரதியாரின் நினைவு நாள் டவுன் ரயில் நிலையம் அருகில் இருக்கும் பாரதியார் சிலைக்கு பல தரப்பினர் மாலை அணிவித்தல் ▶️காலை 10 மணி சேலம் அரசு சட்டக் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு அரசு நிகழ்ச்சி ▶️காலை 10 மணி பெரியார் பல்கலைக்கழகத்தில் விளைவு சார் கல்வி பயிற்சி பட்டறை
சேலம் திருவாக்கவுண்டனூர் பைபாஸில் உள்ள G.V.N. மஹாலில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.செப்.20- ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் 100- க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றனர்.இதில் 8ஆம் வகுப்ப்பு முதல் டிகிரி, டிப்ளமோ,BE,B.TECH அல்லது ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம். வேலை தேடும் இளைஞர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க
சேலம் செப்டம்பர் 12 வெள்ளிக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள் ▶️குருவம்பட்டி ஆனந்த கவுண்டர் மண்டபம் குருவம்பட்டி ▶️தாரமங்கலம் செங்குந்தர் திருமண மண்டபம் கண்ணனூர்▶️சர்க்கார் கொல்லப்பட்டி செல்வி பொன்னுசாமி திருமண மண்டபம் சர்க்கார் கொல்லப்பட்டி▶️வாழப்பாடி வேல்முருகன் திருமண மண்டபம் வாழப்பாடி ▶️கஞ்சநாயக்கன்பட்டி சுப்பிரமணி திருமணம் ஹால் கஞ்சநாயக்கன்பட்டி▶️ நங்கவள்ளி தானிய கிடங்குவளாகம் (நரியம்பட்டி)
சேலம் மாநகர காவல்துறை சார்பில் ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் “உங்கள் வாகனங்களில் டேஷ் கேமரா பொருத்தி, அதைப் புகைப்படம் எடுத்து சேலம் மாநகர காவல் துறையின் முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். இவ்வாறு பதிவிடும் முதல் ஐந்து நபர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும் என மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார். இதனை கார் வைத்துள்ள உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மாநகராட்சியில் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
சேலம் மாவட்டத்தில் இன்று (10.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சியில் (10.09.2025)-ம் தேதி இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையின் விவரங்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் வெளியிட்டுள்ளன. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, சூரமங்கலம், அஸ்தம்பட்டி, ஆகிய பகுதிகளில் காவல்துறை ரோந்து பணியில் ஈடுபட உள்ளன. மேலும் புகார் மற்றும் தகவல்களை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்.
Sorry, no posts matched your criteria.