India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக ஹைதராபாத்- கோட்டயம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07135/07136) இயக்கப்படவுள்ளது. டிச.03,10,17,24,31 தேதிகளில் ஹைதராபாத்தில் இருந்தும், மறுமார்க்கத்தில், டிச. 04,11,18,25, ஜன.01 தேதிகளில், கோட்டயத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சேலம் ரயில் நிலையத்தில் சிறப்பு ரயில்கள் 5 நிமிடங்கள் நின்றுச் செல்லும்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் இருக்கவும், அசம்பாவிதங்களை தவிர்க்கவும், மாநகர காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநகர காவல்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், அந்தந்த காவல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு, இரவு ரோந்து பணி ஈடுபட்டு வருகின்றனர். இன்றைய இரவு அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களின் வசதிக்காக, வரும் டிச.05 முதல் ஜன.10 வரை வரை சேலம் வழியாக எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளி- கொல்லம் இடையே இருமார்க்கத்திலும் வாராந்திர சிறப்பு ரயில்கள் (07313/07314) இயக்கப்படுகிறது. வாரத்தில் வியாழன்கிழமைதோறும் எஸ்எஸ்எஸ் ஹூப்பள்ளியில் இருந்தும், வெள்ளிக்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில், முதல் நிலை வருவாய் ஆய்வாளராக கார்த்திக்கு என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் ரூ.15,000 லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக, லஞ்ச ஒழிப்பு போலீசாரால், இன்று கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் இடைத்தரகர் முருகமணி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். இருவரையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து, லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் புத்தகத் திருவிழா 2024-ல் பங்கேற்கும் விருந்தினர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. நவ.29-ல் மதுரை ராமகிருஷ்ணன், நவ.30 நாஞ்சில் நாடன், டிச.1 பவா செல்லத்துரை, டிச.2 யுவன் சந்திரசேகர், டிச.3 ஆனந்தகுமார் இ.ஆ.ப, டிச.4 பெருமாள் முருகன், டிச.5 சித்ரா பாலசுப்ரமணியம், டிச.6 முன்னாள் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, டிச.7 விஷ்ணுபுரம் சரவணன், டிச.8 ரேவதி, டிச.9 ஜீவானந்தம் கருத்துரை வழங்கவுள்ளனர்.
சபரிமலை சீசனை முன்னிட்டு, சேலம் வழியாக கர்நாடகா மாநிலம், பெலகாவி- கொல்லம் இடையே டிச.09 முதல் ஜன.14 வரை வாராந்திர சிறப்பு ரயில்கள் (07317/07318) இயக்கப்படுகிறது. வாரத்தில் திங்கள்கிழமைதோறும் பெலகாவியில் இருந்தும், மறுமார்க்கத்தில், செவ்வாய்கிழமைதோறும் கொல்லத்தில் இருந்தும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் சிறப்பு ரயில் நின்றுச் செல்லும்.
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற உள்ள புத்தகத் திருவிழா அரங்கை பணிகளை கலெக்டர் பிருந்தா தேவி நேரில் ஆய்வு செய்தார். மழை வெயில் அடித்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் மேற்கூரை பொருத்தப்பட்டுள்ளதா என்றும் பார்வையாளர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை குறித்தும் கேட்டறிந்தார். இப்புத்தக கண்காடசி வரும் 29ம் தேதி துவங்கி அடுத்த மாதம் 9ஆம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடப்பாண்டில், இதுவரை 8,922 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டுள்ளதாக டீன் தேவி மீனாள் தெரிவித்துள்ளார். இதில் 3,761 பேருக்கு சுகபிரசவமும், 5,161 பேருக்கு அறுவை சிகிச்சை மூலமும் குழந்தை பிறந்தது. 4,614 ஆண் குழந்தைகளும், 4,308 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், ஓமலூர், இடைப்பாடி, வாழப்பாடி, ஏற்காடு நீதிமன்றங்களில் வரும் டிசம்பர் 14-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்க உள்ளது. சமரசம் செய்துக் கொள்ளக்கூடிய காசோலை, வங்கிக்கடன், கல்விக்கடன், தொழிலாளர் நலன் உள்ளிட்ட வழக்குகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், தொழிலாளர் அரசு காப்பீடு கழகம் இணைந்து, மாவட்ட வாரியாக ஒருங்கிணைந்த மக்கள் குறைதீர் கூட்டத்தை நடத்துகிறது. அதன்படி, சேலம், அத்வைத ஆசிரம சாலையில் உள்ள தனியார் பள்ளியில் இன்று (நவ.27) காலை 9 மணிக்கு தொடங்கி மாலை, 05.45 வரை கூட்டம் நடக்கிறது. ஓய்வூதியம் பெறுவோர், முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் குறைகளை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.