Salem

News March 30, 2025

சேலம் மாவட்டத்தில் இன்று பதிவான வெப்பநிலை

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 4-வது நாளாக வெப்பநிலை சதத்தைத் தொட்டுள்ளது. இன்று (மார்ச் 30) சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது. நேற்று 103.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியிருந்த நிலையில் இன்று சற்று குறைவாக பதிவாகியுள்ளது. சுட்டெரித்து வரும் வெயிலால் முதியவர்கள் கடும் சிரம்மமடைந்துள்ளனர்.

News March 30, 2025

சேலம்: தர்பூசணி சாப்பிடுவோர் கவனத்திற்கு

image

சேலத்தில் விற்பனையாகும் தர்பூசணி பழங்களில், செயற்கை நிறமூட்டி சேர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் வருவதால், தர்பூசணியைப் பார்த்து வாங்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டுள்ளதா என கண்டறிய, வெட்டிய தர்பூசணியில் டிஸ்யூ பேப்பரை வைத்துத்தேய்க்க வேண்டும். நிறமூட்டி சேர்க்கப்பட்டால், அது பேப்பரில் ஒட்டிக்கொள்ளுமாம். இது குறித்து 9444042322 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கலாம். இதை SHARE செய்யுங்கள்.

News March 30, 2025

ஊஞ்சல் கட்டி ஆடிய சிறுவன் பலி

image

சேலம் மாவட்டம், மேட்டுப்பட்டி தாலுகாவைச் சேர்ந்த கோடீஸ்வரனின் மகன் கவின் ஸ்ரீநாத் (வயது 12). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 7- ஆம் வகுப்பு படித்து வந்தான். நேற்று வீட்டில் புடவையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய போது, கழுத்தில் சேலை சிக்கி உயிரிழந்தான். இது குறித்து வழக்குப்பதிவு செய்து வீராணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 30, 2025

ஓமலூர் மாணவி தங்கம் வென்று அசத்தல்

image

தேசிய அளவிலான 18வது சப்ஜூனியர் டென்னிஸ் போட்டி, பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்றது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தனிநபர் போட்டி ஒற்றையர் பிரிவில், சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த வீராங்கனை தனிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த தனிகாவிற்கு கிராம மக்கள் வாழ்த்து தெரிவித்து, மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News March 30, 2025

மானிய விலையில் சோலார் பம்ப் செட்: ஆட்சியர் அறிவிப்பு

image

சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகள் பயன்படும் வகையில் மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, தமிழக அரசு மானிய விலையில் சோலார் பம்ப் இருட்டுகளை வழங்கி வருவதாகவும் மூணு எச்பி முதல் 15 எச்பி வரை வழங்கப்படும். இந்த பம்ப் செட்டுகளை விவசாயிகள் வாங்கி பயனடையுமாறு வலியுறுத்தியுள்ளார்.

News March 30, 2025

சிறப்பு ரயில் அறிவிப்பு 

image

திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக திருவனந்தபுரம் வடக்கு- பெங்களூரு இடையே 2 மாதத்திற்கு கோடைக்கால சிறப்பு ரயில்கள் (06555/06556) இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இச்சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு இன்று (மார்ச் 30) காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. கோடைக்கால விடுமுறையைத் தொடர்ந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 30, 2025

புதிய நகராட்சியாக உருவானது சங்ககிரி

image

தமிழக அரசு (மார்ச் 30) திருவண்ணாமலை மாவட்டம் போளூர்,செங்கம், கோத்தகிரி, நீலகிரி, அவிநாசி, பெருந்துறை மற்றும் சேலம் மாவட்டம் சங்ககிரி ஆகிய 7 பேரூராட்சியை நகராட்சியாக அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. சங்ககிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நகராட்சி கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். (Share பண்ணுங்க.)

News March 30, 2025

இந்த தண்ணீரை குடிக்காதீங்க!

image

சேலம் அரசு மருத்துவமனை முன்னாள் கண்காணிப்பாளர் மருத்துவர் தனபால் கூறுகையில், வெயில் காலத்தில் இயற்கையாகவே உடல் சற்று சூடாக இருக்கும். இச்சமயத்தில் பிரிட்ஜில் வைக்கப்பட்டிருந்த குளிர்ந்த நீரை குடிப்பதால் தலைவலி வயிற்று உபாதைகள் செரிமான பிரச்சனைகள் உண்டாக வாய்ப்பு உள்ளது. எனவே, குழந்தைகள் (ம) முதியோர்கள் கண்டிப்பாக பிரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிக்க கூடாது. Share பண்ணுங்க.

News March 30, 2025

சேலத்தில் கொளுத்தும் வெயில்

image

சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து 3-வது நாளாக 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. ▶ காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வெளியே செல்வதை தவிர்க்கவும். ▶ தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். மக்களே இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.

News March 29, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.29 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!