India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி அறிக்கையில்; சேலம் அரசு ஐ.டி.ஐ.,யில், 2025ம் ஆண்டு நேரடி சேர்க்கை வரும், அக்.31 வரை நடக்க உள்ளது. அதில் கடைசலர், டிஜிட்டல் போட்டோகிராபர், இன்டஸ்ட்ரியல் ரோபோட்டிக்ஸ், டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீஷியன் போன்ற பிரிவுகளில் சேரலாம். இதற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சேலத்தில் இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு தர வலியுறுத்தி, வரும் டிசம்பர் மாதம் 5ஆம் தேதி, ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், இந்தப் போராட்டம் இறுதிப் போராட்டமாக இருக்க வேண்டும், எனவே தமிழக அரசு உடனடியாக இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கூறினார்.

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL)!
மொத்த பணியிடங்கள்: 340
கல்வித் தகுதி: B.E / B.Tech டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.40,000 முதல் 1,40,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.11.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <

பிறப்பு மற்றும் இறப்புகளுக்கான சான்றிதழ்கள் பெற மற்றும் திருத்தங்களை மேற்கொள்வதற்காக சிறப்பு தகவல் மற்றும் சேவை மையம் சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் துவக்கப்பட்டுள்ளது.இதில் பொதுமக்கள் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வலைதளத்தில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் கட்டணமில்லாமல் பதிவிறக்கம் செய்துதரப்படும் என ஆணையாளர் இளங்கோவன் அறிவிப்பு!SHAREit

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க

சேலத்தில் இறைச்சிகள் மற்றும் மீன் வகைகளின் இன்றைய விலை நிலவரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வெள்ளாட்டு கறி கிலோ ரூ.800, நாட்டுக்கோழி கறி கிலோ ரூ.500, பிராய்லர் கோழிக்கறி கிலோ ரூ.220, மேலும், கட்லா மீன் கிலோ ரூ.220, ரோகு மீன் கிலோ ரூ.200, பாறை மீன் கிலோ ரூ.180, மத்தி மீன் கிலோ ரூ.250, அயிலை மீன் கிலோ ரூ300 என்ற விலைகளில் மீன் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது. உங்கள் ஊரில் இறைச்சி விலை என்ன?

சிலிண்டர் மானியம் சரியாகக் கிடைக்கிறதா என்பதை அறிய முதலில் www.mylpg.in என்ற இணையதளத்திற்கு சென்று நீங்கள் பயன்படுத்தும் HP Gas, Indane, அல்லது Bharatgas ஆகிய சிலிண்டர் நிறுவனத்தின் Logoவை கிளிக் செய்யவும். பின்னர் உங்களின் மொபைல் எண் அல்லது LPG ஐடியை உள்ளிடவும். இதன்பிறகு,மானியம் தொடர்பான விவரங்களும் தோன்றும். மானியம் வரவில்லை என்றால் pgportal.gov.in என்ற இணையதளத்தில் புகாரளிகலாம்.SHARE பண்ணுங்க

சேலம் மாவட்டத்தில் உள்ள 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என அனைத்து வார்டுகளிலும் வார்டு அளவிலான சிறப்பு கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டங்கள் அந்தந்த வார்டு பகுதிகளில் வருகின்ற அக். 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒரு நாளில் காலை 11.00 மணிக்கு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி அறிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் இதுவரை தமிழக அரசின் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்கள் 12 நடத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 7,944 ஆண்கள், 10,410 பெண்கள் என மொத்தம் 17,593 பயனாளிகள் கலந்து கொண்டுள்ளனர் என்று மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் இலவச பரிசோதனையுடன் மருந்து பொருட்களும் வழங்கப்பட்டன.

சேலம் அழகாபுரம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக உள்ள தவமணி மீதும், எஸ்.ஐ. வீரக்குமார் மற்றும் ஏட்டு செல்லக்கண்ணு மீதும் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து, புகார்கள் குறித்து கமிஷனர் விசாரித்ததன் அடிப்படையில், மூன்று பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் காவலர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sorry, no posts matched your criteria.