India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாளை (ஏப்ரல் 01) காலை 07.50 மணிக்கு கோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய கோவை- தன்பாத் வாராந்திர சிறப்பு ரயில் (03680) இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக சுமார் 8 மணி 25 நிமிடங்கள் தாமதமாக மாலை 04.15 மணிக்கு புறப்படும் என சேலம் ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாநகரில் இன்று (31.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.31 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் அகாடமியின் ஆண்டு விழாவில், சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், ரஞ்சிக் கோப்பை வீரருமான கே.பி.அருண் கார்த்திக், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடிய மாணவ, மாணவியர்களுக்கு கோப்பைகள், பதக்கங்கள், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
சேலம் ஐடிஐ-யில் 3 மாத குறுகிய கால இலவச பயிற்சிக்கான சேர்க்கை நடைபெறுவதாகவும், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 18ம் தேதிக்குள் தங்களது டிசி, மதிப்பெண் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், ஆதார் மற்றும் 4 புகைப்படங்களுடன் கோரிமேட்டில் உள்ள ஐடிஐயை நேரடியாக தொடர்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பிருந்தாதேவி தகவல் தெரிவித்துள்ளார். இதை SHARE செய்யுங்கள்.
சித்திரை திருவிழாவை முன்னிட்டு, சேலம் மாவட்டம், வாழப்பாடி, சிங்கிபுரத்தில் வரும் ஏப்ரல் 05- ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடக்கவுள்ளது. 500-க்கும் மேற்பட்ட காளைகள், 400-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ள நிலையில், விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை ஜல்லிக்கட்டு கமிட்டியினர் செய்து வருகின்றனர்.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
சேலம் (மார்ச்.31) இன்றைய முக்கிய நிகழ்வுகள். ▶️ காலை 6 மணி முதல் ரமலான் பண்டிகை ஒட்டி அனைத்து மசூதிகளிலும் சிறப்பு தொழுகை. ▶️காலை 9 மணி மார்க்சிஸ்ட் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மத்திய சிறைச்சாலை முன்பு நினைவுச்சுடர் ஓட்டம் துவக்கம். ▶️காலை 10 மணி சூரமங்கலத்தில் எடப்பாடியார் நீர் மோர் பந்தல் திறப்பு. ▶️காலை 10 மணி சீலநாயக்கன்பட்டியில்அச்சு குழுமத்தை அமைச்சர் பார்வையிடுகிறார்.
சேலம்: வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம் பகுதியில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா அரசு அனுமதி பெற்று வரும் ஏப்.5ல் நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்கின்றன. 400 மாடுபிடி வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதையடுத்து, பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு விழா மேடை, வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ( SHARE பண்ணுங்க)
சேலம் மாநகரில் இன்று (30.03.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள், மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
Sorry, no posts matched your criteria.