India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் மாவட்ட ஊரகப் பகுதிகளான வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, கெங்கவல்லி, சங்ககிரி, எடப்பாடி, மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையிலும், காவல்துறையினர் இரவு முழுதும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி இன்று ஏப்ரல் 27 ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள், அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஏப்ரல்27ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
▶️சேலம் கலெக்டர்- 0427-2450301. ▶️கலெக்டரின் நேர்முக உதவியாளர்- 0427-2417575. ▶️உதவி ஆணையர்- 9445000222. ▶️மாவட்ட வருவாய் அலுவலர்- 0427-2450303. ▶️தனித்துணை ஆட்சியர்- 9443797855. ▶️மாவட்ட சித்த மருத்துவ அலுவலர்- 0427-2411311. ▶️மாவட்ட ஊராட்சி அலுவலகம்- 0427-2450187. ▶️மாநகராட்சி ஆணையாளர்- 0427-2213131. ▶️மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர்- 0427-2350536. இது போன்ற முக்கிய எண்களை SHARE பண்ணுங்க.
சேலம்மாவட்டத்தில் குழந்தைகள் திருமணம் தொடர்பாக வரப்பெற்ற அனைத்து புகார்களுக்கும், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, காவல்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை என சேலம் கலெக்டர் பிருந்தாதேவி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பவரின் மகன் நகுல் (17). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், நண்பரின் புல்லட் வாங்கிக் கொண்டு ஏவிஆர் ரவுண்டானாவில் இருந்து குரங்குச்சாவடி நோக்கி சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத வகையில் மேம்பாலத்தின் மீது மோதியத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் நகுல் சம்பவயிடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் எர்ணாகுளம்- ஹாட்டியா
எக்ஸ்பிரஸ் ரயில்கள் (22837/22838) வரும் ஏப்ரல் 28- ஆம் தேதி முதல் கூடுதலாக எக்னாமி ஏசி பெட்டிகள் இணைத்து இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இனிமேல் இந்த ரயில் 19 மூன்றடுக்கு எக்னாமி ஏசி பெட்டிகள், 1 பேன்ட்ரி கார், 2 லக்கேஜ் மற்றும் பிரேக் வேன் பெட்டிகள் என 22 பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஏப்ரல்.26 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
சேலம் மாநகரில் இன்று (26.04.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.
சேலம் மாவட்டத்தில் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து வெயில் சதமடித்து வருகிறது. சுட்டெரித்து வரும் வெயிலால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். தர்பூசணி, நீர்மோர், பழச்சாறு போன்றவற்றை பருகி உடல் சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்.26) 102.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது
Sorry, no posts matched your criteria.