India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இ-வாடகை கைபேசி செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் சார்பில் வேளாண் இயந்திரங்கள் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர். பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். விவசாயிகள் தங்கள் கைபேசியில் உழவர் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள இ-வாடகை செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது வேளாண்மைப் பொறியியல் துறையின் இணையதளம் https://mts.aed.tn.gov.in/evaadagai விண்ணப்பிக்கலாம்
சேலம் மாவட்டத்தில் கோரிமேடு இருபாலர் ஐடிஐ, மகளிர் ஐடிஐ, மேட்டூர் ஐடிஐ, கருமந்துறை மகளிர் ஐடிஐ என 4 அரசு ஐடிஐக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த ஐடிஐக்களில் நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் செப்.30- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஐடிஐயில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை மற்றும் அரசின் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகிறது.
▶️சேலம் மக்களே இந்திய ரிசர்வ் வங்கியில் 120 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
▶️இதற்கு ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் போதுமானது
▶️இப்பணிக்கு ஆன்லைன் தேர்வு,நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்
▶️ https://ibpsreg.ibps.in/rbioaug25/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்
▶️ செப்.30ஆம் தேதியே கடைசி நாளாகும்
▶️வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம் மக்களே வாடகை வீட்டில் இருக்கீங்களா? சில விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள். ▶️2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கொடுக்க வேண்டும். ▶️ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை அவர்கள் உயர்த்த வேண்டும். ▶️வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே உங்களிடம் அறிவிக்க வேண்டும். ▶️மீறினால் அதிகாரிகளிடம் (1800 5990 1234) என்ற எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு SHARE பண்ணுங்க!
சூரமங்கலத்தை சேர்ந்த விவசாயி செல்லப்பன் (65) கடந்த செப்.6-ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் கந்தம்பட்டியைச் சேர்ந்த பிரபு (32),தினேஷ் (20),குமரவேல் (26) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.இதில் பிரபு என்பவர் செல்லப்பன் வீட்டின் அருகே உள்ள பெண்ணுடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும்,இதற்கு செல்லப்பன் தடையாக இருந்ததால் கொலை செய்ததாகவும் பரபரப்பு வாக்கு மூலம் வெளியாகியுள்ளது!
சேலம்-கடலூர் (போர்ட்) பயணிகள் ரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று சேலம் ரயில்வே கோட்ட உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதேபோல், சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக பகல் நேரத்தில் சென்னை ரயில் இயக்க வேண்டும். நடைமேடைகளை அதிகரிக்க வேண்டும், லிஃப்ட் மற்றும் எக்ஸ்லேட்டர்களை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
▶️அரசு வங்கியான BOB Capital Markets Limited வங்கியில் காலியாக உள்ள 70 Manager பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது ▶️ இதற்கு BA,BSC,BE,B.TECH உள்ளிட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்▶️தங்கள் சுயவிவரக் குறிப்பு (resume), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் போன்ற தேவையான ஆவணங்களை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்கலாம்▶️SHARE பண்ணுங்க!
சேலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூபாய் 55,000 வரை அதிகரித்துள்ளது. வெள்ளி விலை உயர்வால் உற்பத்தி மற்றும் விற்பனை 50% சரிந்துள்ளதாகவும் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூபாய் 6,000 அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மக்களே வீடு கட்ட ஆகும் செலவை விட வீட்டு வாங்கும் கட்டிட வரைபட மற்றும் சாக்கடை குழாய் அனுமதி வாங்க பல ஆயிரம் செலவு ஆகும். அந்த செலவை FREE ஆக்க ஒரு வழி. இதற்கு https://pmay-urban.gov.in/ என்ற இணையதளம் சென்று ஆதார் எண், வருமானம் போன்றவற்றை பதிவு செய்து விண்ணப்பித்து இலவச கட்டிட வரை பட அனுமதி பெறலாம். இதன் மூலம் உங்கள் செலவு மிச்சமாகும். வீடு கட்டபோறவங்களுக்கு SHARE பண்ணுங்க!
சேலம்: ஓமலூர் வட்டம் தாராபுரம் அடுத்த செல்லப்பன் காட்டுக்கொட்டாய் கிராமத்தில் வசிக்கும் ராஜகோபால் (70) அவரது மனைவி சரோஜா(55) ஆகிய இருவரையும் நேற்று இரவு அவர்களது வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் கடுமையாக தாக்கி வீட்டில் இருந்த சுமார் 18 3/4 பவுன் மற்றும் ரூபாய் 70 ஆயிரத்தை கொள்ளையடித்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். சம்பவம் குறித்து ஓமலூர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.