India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று ஏப்ரல்.28 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
சேலம் மாநகரில் இரவு நேரங்களில் குற்ற செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும், ஏதேனும் விபத்துக்கள் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்றிடவும், இரவு முழுதும் அந்தந்த பகுதி காவல் ஆய்வாளர்கள் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, ஏப்ரல் 28ஆம் தேதியான இன்று இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கடும் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல தொடங்கியுள்ளனர். எனினும் பலர் தர்பூசணி, நீர்மோர் ஆகியவற்றை பருகி சூட்டைத் தணித்து வருகின்றனர். சேலத்தில் இன்று (ஏப்.28) 99.5 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்திற்கு பிறகு 100 டிகிரிக்கு கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.
பராமரிப்புப் பணிகள் காரணமாக, சேலம் வால்மீகி தெரு, முஹமத்புரா தெரு, கருவாட்டுபாலம், கிச்சிபாளையம் மெயின் ரோடு, திருச்சி மெயின் ரோடு ஒரு பகுதி, புலிகுத்தி மெயின் ரோடு ஒரு பகுதி, களரம்பட்டி மெயின் ரோடு ஒரு பகுதி, கடம்பூர் முனியப்பன் கோவில் தெரு,SMC காலனி, லட்சுமி நகர், சத்தியமூர்த்தி நகர், காந்திமகான் தெரு பகுதிகளில் நாளை (ஏப்.29) காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின்விநியோகம் இருக்காது. SHARE IT
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் நேற்று 12 டன் எடை கொண்ட, ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட, 8 கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட பத்ரகாளி சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக வரும் ஏப்ரல் 30- ஆம் தேதி பெங்களூருவில் இருந்து மதுரைக்கும், மறுமார்க்கத்தில், மே 01- ஆம் தேதி மதுரையில் இருந்து பெங்களூருவுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு ரயில்கள், கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே ஊமகவுண்டன்பட்டி பகுதியில் அருள்மிகு எல்லை பத்ரகாளியம்மன் திருக்கோவிலில் 12 டன் எடை கொண்ட ஒரே கல்லால் வடிவமைக்கப்பட்ட பத்ரகாளி சிலை; எட்டு கைகளுடன் சாந்த சுரூபமாக காட்சியளிக்கும் 16 அடி பிரம்மாண்ட சிலை பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலம் மக்களே உஷார்! மோசடி கும்பல் உங்கள் வாட்ஸ்அப் OTP-ஐ கேட்டு, கணக்கை ஹேக் செய்ய முயற்சி செய்கிறார்கள். OTP-ஐ யாருடனும் பகிராதீர்கள். அவர்கள் OTP-ஐ பெற்றால், உங்கள் தனிப்பட்ட மற்றும் வங்கி சார்ந்த தகவல்களை வைத்து உங்களை மிரட்டவோ அல்லது பணத்தை திருடவோ வாய்ப்புள்ளது. உங்கள் வாட்ஸ்அப்பில் Two Step Verification-ஐ Enable செய்து பாதுகாப்பாக இருங்கள் என சேலம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 722 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு 21 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம். காலிப்பணியிடங்கள் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பணிக்கு சம்பளமாக ரூ.9,000 வரை வழங்கப்படும். இப்பணிக்கு நாளை (ஏப்.29) விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
சங்ககிரி அருகே உள்ள அரசிராமணி செட்டிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற ஹரிபாஸ்கர் (வயது 25) என்ற இளைஞர், எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து தேவூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.