Salem

News May 7, 2025

சேலம்: கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

image

சேலம்: வாழப்பாடி சுக்கியம்பாளையத்தை சேர்ந்த 55 வயதான விவசாயி வடிவேல் தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில், சரியான விவசாய மகசூல் இல்லாததால் கடன் செலுத்த முடியாமல் தவித்து வந்ததுள்ளார். இதையடுத்து, நிதி நிறுவனத்தின் தொந்தரவு தாங்காமல் அவர் தற்கொலை செய்து கொண்டார் என வாழப்பாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News May 7, 2025

சேலம் கோட்டத்தில் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

மே தினம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சேலம் கோட்டம் சார்பில் இன்று (ஏப்.30) முதல் மே 05- ஆம் தேதி வரை 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, ஓசூர், பெங்களூரு, கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட நகரங்களுக்கு சேலத்தில் இருந்தும் மேற்கண்ட நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

News May 7, 2025

சேலத்துக்கான பறவையை தேர்வு செய்யுங்கள் மக்களே!

image

சேலத்துக்கான பறவையை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு பொதுமக்கள் எப்படி வாக்களிப்பது என்பது பார்க்கலாம். முதலில் <>birdofsalem.tnfdsutrula.com<<>> என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். பின்னர் உங்களுடையை மொபைல் எண்ணை உள்ளீடுங்கள். பின்னர் பறவையின் வகை மற்றும் அவற்றின் சிறப்பு குறித்து தகவல் இருக்கும். அதில் உங்களுக்கு பிடித்த பறவை தேர்வு செய்யுங்கள். இதற்கான மற்றவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்

News April 30, 2025

ரூ.6,000 ஊக்கத்தொகையுடன் சேலத்தில் இலவச பயிற்சி

image

சேலம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு பயிற்சி கழகம் சார்பில் இலவச சாஃப்ட் ஸ்கில் (Soft skills) பயிற்சி வகுப்புகளை நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் மூலம், மாணவர்கள் 20 நாட்களில் நேர்காணல்களில் பங்கேற்பதற்கான திறன்களைப் பெற முடியும். மேலும், பயிற்சி முடிவில் ரூபாய் 6,000 ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 9500980430, 9443207802 என்ற எண்களை அழைக்கலாம்.

News April 30, 2025

இரண்டு வயது குழந்தை சாதனை பலரும் வாழ்த்து தெரிவித்து கொண்டாட்டம்

image

சேலம் மாவட்டம் குகை பகுதியை சேர்ந்தவர் சதீஷ் மோனிகா தம்பதியினர். இந்த தம்பதியின் 2 வயது குழந்தை தாரிக்க
‘இன்டர்நேஷனல் புக் ஆப் ரெக்கார்டில்’ இடம் பெற்றுள்ளார். பல்வேறு தலைப்புகளில் பேசி பல மொழிகளை கற்றுள்ளார். இவரின் இந்த செயல் இந்த பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு வயது குழந்தைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

News April 30, 2025

இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது

image

சேலம் அருகே எருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் சூர்யா(21). சீலநாயக்கன்பட்டியில் உள்ள பழைய இரும்பு கடையில் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கடந்த 27-ஆம் தேதி, ஏரிக்கரையில் 4 பேர் சூர்யாவுடன் தகராறில் ஈடுபட்டதுடன், பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக கிச்சிப்பாளையம் போலீசார் மதன், குரு, பிரசாத் உள்ளிட்ட 4 பேரை நேற்று கைது செய்தனர்.

News April 29, 2025

சேலத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை!

image

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா கூறினார். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருக்கிறதா? என உளவுப் பிரிவு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். சேலம் போலீஸ் சரகத்தில் பாகிஸ்தானியர்கள் யாரும் இல்லை. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுவிட்டது என சேலம் சரக டி.ஐ.ஜி. உமா தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

சிறுவர் கொலை வழக்கு: தாய் பரபரப்பு வாக்குமூலம்!

image

வாழப்பாடியை,துக்கியாம்பாளையத்தை சேர்ந்த விஜயகுமாரின் மனைவி இளவரசி. இவர்களது மகன்களான விக்னேஷ்(6), சதீஷ்குமார்(3) ஆகிய இருவரும் நேற்று தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டனர். இது குறித்து வாழப்பாடி போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தில் கணவர் கண்டித்ததால் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலைக்கு முயன்றதாக இளவரசி வாக்குமூலம் அளித்துள்ளார். இளவரசியை போலீசார் கைது செய்தனர்.

News April 29, 2025

கோவை-தன்பாத் ரெயில் இன்று தாமதமாக புறப்படுமென அறிவிப்பு

image

வாராந்திர கோவை-தன்பாத் சிறப்பு ரயில் (03680) இன்று (செவ்வாய்க்கிழமை) 8 மணி நேரம் 25 நிமிடம் தாமதமாக, கோவையில் இருந்து காலை 7.50 மணிக்கு பதிலாக மாலை 4.15 மணிக்கு புறப்படும் என்று சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது. இணைப்பு ரயில் தாமதம் காரணமாக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் வழியாக தன்பாத் செல்கிறது.

News April 29, 2025

Myv3இல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவரா நீங்கள்?

image

விளம்பரம் பார்த்தால் பணத்தை அள்ளலாம் என கூறி Myv3 ads நிறுவனத்தில் முதலீடு செய்து பணம் திரும்பக் கிடைக்காமல் ஏமாந்தவர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள பொருளாதர குற்றப்பிரிவு அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என கோவை மாநகர பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். பணம் முதலீடு செய்ததற்கான அசல் ஆவணங்களுடன் நேரில் வந்து புகார் அளிக்க வேண்டும். சேலத்தில் யாராவது ஏமாந்திருந்தால் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!