Salem

News April 18, 2025

சேலத்தின் முக்கிய வட்டாட்சியர் எண்கள்!

image

▶️வட்டாட்சியர், சேலம்: 9445000547
▶️வட்டாட்சியர், ஏற்காடு:9445000548
▶️வட்டாட்சியர், மேட்டூர்:9445000552
▶️வட்டாட்சியர், ஓமலூர்:9445000553
▶️வட்டாட்சியர், சங்ககிரி:9445000554
▶️வட்டாட்சியர், எடப்பாடி:9445000556
▶️வட்டாட்சியர், ஆத்தூர்:9445000550
▶️வட்டாட்சியர், கெங்கவல்லி: 9445000551
▶️வட்டாட்சியர், வாழப்பாடி:9445000549
▶️வட்டாட்சியர், தலைவாசல்:9655539111

News April 18, 2025

சேலத்தில் ரூ.35,000 சம்பளத்தில் வேலை !

image

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் நேற்று(ஏப்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், திட்ட மேலாண்மை அலகில் பணிபுரிய அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech, M.B.A., M.Sc., படித்து முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தற்காலிக பணிக்காக மாதம் ரூ.35,000 மதிப்பூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதற்கு 25ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News April 17, 2025

சேலத்தில் ரூ. 17½ லட்சத்துடன் பிளஸ்-1 மாணவன் மீட்பு

image

சேலத்தில் நேற்று, 17 வயது சிறுவன் ஒருவன் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை அணுகி தனக்கு வேலை வாங்கித் தருமாறு கோரியுள்ளான். இதில் சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர், சிறுவனை சோதனையிட்டபோது பணம் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.போலீசார் விசாரனையில், பெற்றோருடன் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக வீட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு வந்தது தெரியவந்தது.

News April 17, 2025

ஏற்காடு, பூலாம்பட்டிக்கு ஜாக்பாட்! ₹20 கோடியில் புதிய வசதிகள்!

image

சுற்றுலாத் துறையின் மானியக் கோரிக்கையில், ஏற்காடு மற்றும் பூலாம்பட்டி ஆகிய முக்கிய சுற்றுலாத் தலங்களில் வாகன நிறுத்துமிடம், நடைபாதை, பூங்காக்கள், உணவகங்கள் மற்றும் தகவல் மையங்கள் அமைப்பதற்காக ரூபாய் 20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு,  பயணிகளை ஈர்க்கும் வகையிலும், அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலும் பயன்படுத்தப்படும்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கடிகார பழுதுநீக்கும் பயிற்சி

image

சேலம் அரசு ஐடிஐயில், கடிகார பழுதுநீக்கம் தொடர்பான 3 மாத குறுகிய கால இலவச பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கான சேர்க்கை நடக்கிறது. இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், நாளை ஏப்ரல் 18-ம் தேதிக்குள் சேலம் கோரிமேடு பகுதியில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தை அணுகி பயிற்சி பெற்று பயன்பெறலாம் என சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் !

image

சேலம்: தலைவாசல் அரிமா சங்கம், சேலம் அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் சேலம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து வருகிற ஏப்.27ஆம் தேதி காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை தலைவாசல் மும்முடி யூனியன் ஆபீஸ் எதிரில் உள்ள அரிமா அரங்கத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. பயனடைவோருக்கு SHARE பண்ணுங்க !

News April 17, 2025

சேலம்: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கவனத்திற்கு !

image

சேலத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித்தொகை பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையினைக் கொண்டு சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ (அ) <>www.tnvelaivaaippu.gov.in <<>>விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

சேலம் மாணவிக்கு கத்திக்குத்து!

image

சேலத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்த நபரை பிடித்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சேலம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமால் கல்லூரி மாணவியிடம் மற்றும் மாணவியை கொலை செய்ய முயற்சித்த மோகன பிரியன் ஆகிய இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

News April 16, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்!

image

சேலம் மாவட்டத்தில் இன்று (ஏப்ரல் 16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார் புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News April 16, 2025

அடுத்தடுத்து 3 கோயில்களில் பூட்டை உடைத்து திருட்டு

image

ஓமலூர் அருகே அடுத்தடுத்து 3 திருக்கோயில்களின் பூட்டை உடைத்து சுவாமிகளுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கத்தாலி, தங்க ஆபரணங்கள் மற்றும் உண்டியல் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருட்டு சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற தீவட்டிப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

error: Content is protected !!