India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1) ஓ.என்.ஜி.சி நிறுவனத்தில் வேலை (ongcindia.com)
2) உளவுத்துறையில் வேலை (mha.gov.in)
3) ரயில் நிறுவனத்தில் வேலை ( irctc.com)
4)பெல் நிறுவனத்தில் வேலை (bel-india.in)
5) யூகே வங்கியில் வேலை (uco.bank.in)
6) இஸ்ரோவில் டெக்னீசியன் வேலை (sac.gov.in)
7) ராணுவத்தில் 1426 பேருக்கு வேலை (territorialarmy.in)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)

சேலம் அக்டோபர் 29 புதன்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்.1) அம்மாபேட்டை மண்டலம் தன சிவா திருமண மண்டபம் சன்னியாசி குண்டு 2)கருக்கல்வாடி ரங்கா ரத்தின வேல் பக்தர் திருமண மண்டபம் கே ஆர் தோப்பூர்3) சங்ககிரி சமுதாயக்கூடம் சந்தைப்பேட்டை
4)தெடாவூர் மேல வீதி சமுதாயக்கூடம் தெடாவூர் 5)காடையாம்பட்டி ஸ்ரீ சவுடேஸ்வரி தேவாங்க மகாஜன திருமண மண்டபம்6) ஏற்காடு ஊராட்சி மன்ற அலுவலகம் மஞ்சக்குட்டை

சேலம் மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளிக்க வந்த 51 வயது பெண் முத்துலட்சுமியிடம் கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது. கெங்கவல்லி அருகே மூலப்புதூர் பகுதியைச் சேர்ந்த இவர், அப்பகுதியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வருகிறார். போலீஸார் அவரை காவல்நிலையம் அழைத்துச் சென்று அவருக்கு எப்படி கஞ்சா கிடைத்தது என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் கன்னங்குறிச்சி மன்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் செல்லதுரை இவரது மனைவி ஜெயலட்சுமி இவர் கடந்த 2ஆம் தேதி அழகாபுரம் இந்தியன் ஏடிஎம் வங்கியில் 2000 எடுத்துள்ளார். அப்பொழுது அவருக்கு பின்னால் முகமூடி அணிந்த ஒருவர் அவரின் ரகசிய எண்ணை பார்த்து அவரின் ஏடிஎம் அட்டையும் நூதன முறையில் மாற்றி உள்ளார். இதனை அடுத்து அவரது அக்கவுண்டில் இருந்து 1.18 லட்சம் மாயமானது. இதுகுறித்து அழகாபுரம் போலீஸ் விசாரணை!

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொதுமக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

சேலம் மாவட்டத்திலிருந்து நாக்பூரில் நடைபெறும் தம்ம சக்கர பரிவர்த்தன திருவிழாவிற்கு பங்கேற்கச் செல்ல விருப்பமுள்ளவர்கள் பௌத்த சமயத்தினருக்கு www.bcmbcmz.tn.gov.in இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து நேரடியாக ரூ.5000 மானியம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். நவ.30க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் நாளை உங்களுடன் ஸ்டாலின் முகாம் (அக்.28) நடைபெறும் இடங்கள்;
1) பாப்பம்பாடி சுய உதவிக் குழு கட்டிடம் பாப்பம்பாடி.
2)ஆத்தூர் அண்ணா கலையரங்கம் ராணிப்பேட்டை.
3)தேவூர் பேரூராட்சி அலுவலகம் தேவூர்.
4) மேச்சேரி தனலட்சுமி மஹால் கந்தனூர்.
5)பெத்தநாயக்கன்பாளையம் லட்சுமி திருமண மஹால் கருமந்துறை.
6) தலைவாசல் மகாலட்சுமி திருமண மண்டபம் நாவலூர்.

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (அக்.27) “நாம் ஹெல்மெட் அணிவது நமக்காக மட்டும் அல்ல, நம்மை நேசிப்பவர்களுக்காகவும்.
கட்டாயம் ஹெல்மெட் அணிந்து, பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுங்கள்.” என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை காவல்துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்!

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், சேலம் மாநகர காவல் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் ஊழல் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று 27.10.2025 ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்தனர். பொது சேவையில் நேர்மை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என உறுதியெடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Sorry, no posts matched your criteria.