Salem

News October 29, 2025

தங்க செயின் ‘டூ’ கவரிங் – வழிப்பறியில் நடந்த ட்விஸ்ட்!

image

சேலம்: அம்மாபேட்டை, உடையாப்பட்டியை சேர்ந்தவர் கமலா (70). நேற்று முன்தினம் உடையாப்பட்டி அருகே நடந்து சென்ற போது 2 மர்ம நபர்கள், கமலா அணிந்திருந்த சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். போலீசார் விசாரித்ததில், மூதாட்டி அணிந்திருந்தது, ‘கவரிங்’ நகை என தெரிந்தது. ஆனால் மர்ம நபர்கள், தங்கம் என நினைத்து பறித்துச்சென்றதும் தெரிந்தது. இருப்பினும் போலீசார் விசாரிக்கின்றனர்.

News October 29, 2025

சேலம்: உங்கள் Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது https://www.sancharsaathi.gov.in/ என்ற இணையதளத்தில் செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 29, 2025

சேலத்தில் மாமியார் உள்பட 3 பேருக்கு கத்திக்குத்து!

image

சேலம் மின்னாம்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ஞானஅரசன் (33). இவர் கடந்த 2023 ஆண்டு மே.23 அன்று பிரிந்து சென்ற மனைவியைத் திரும்ப அனுப்பக் கோரி, மாமியார் மற்றும் மனைவியின் இரண்டு சகோதரிகளை கத்தியால் குத்தி கொல்ல முயன்றார். இது தொடர்பான வழக்கில், ஞான அரசனுக்கு சேலம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 900 ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.

News October 29, 2025

சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.

News October 28, 2025

பருவமழைக்கு மாநகராட்சியில் 60 கண்காணிப்பு குழுக்கள்!

image

தமிழக முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் சேலம் மாநகராட்சி பகுதிகளில் மழை பாதிப்புகளை கண்காணிக்கவும், பாதிக்கப்படும் நபர்களுக்கு உதவிடும் வகையில் ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பணிகளையும் கண்காணிக்க 60 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

News October 28, 2025

சேலம்: மாமன்ற இயல்பு கூட்டம் – ஆணையாளர் அறிவிப்பு!

image

சேலம் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்; வருகின்ற அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை பகல் 11 மணிக்கு சேலம் மாநகராட்சியின் மாதாந்திர இயல்பு கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று தங்களது கோட்டத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

சேலம்: விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் மாதம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறுவது வழக்கம். நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அக்.31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள் பங்கேற்று குறைகளை தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வலியுறுத்தியுள்ளார்.

News October 28, 2025

சேலம்: பயிர் காப்பீடு செய்ய ஆட்சியர் வலியுறுத்தல்!

image

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் உடனடியாக தங்களுடைய பயிருக்கு பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக ரபி 2025 பருவத்திற்கு தக்காளி, வெங்காயம், ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரையிலும், வெண்டைக்காய் பிப்ரவரி-15ஆம் தேதி வரையிலும், பயிர் காப்பீடு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

News October 28, 2025

சேலம்: விவசாயிகள் கவனத்திற்கு – ஆட்சியர் அறிவிப்பு!

image

சேலம் மாவட்டத்தில் விவசாய தனித்துவ எண் பெறாமல் 26,542 பயனாளிகள் உள்ளனர். இவர்கள் பிரதம மந்திரியின் கௌரவ நிதி 21வது தவணை பெற வேண்டுமெனில் உடனடியாக விண்ணப்பங்களை சமர்ப்பித்து தனித்துவ எண் பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார். தனித்துவ எண் பெற்றால் மட்டுமே அனைத்து நல உதவிகளையும் விவசாயிகள் பெற முடியும் என்றும் எச்சரித்துள்ளார்.

News October 28, 2025

சேலம்: POST OFFICE-ல் வேலை ரெடி – நாளை கடைசி நாள்!

image

இந்திய அஞ்சல் வங்கியில் வேலை!
மொத்த பணியிடங்கள்: 348
கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதும்.
சம்பளம்: ரூ.30,000 வழங்கப்படும்.
விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்: 29.10.2025.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>கிளிக் <<>>செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க மக்களே ஒருவருக்காவது உதவும்!

error: Content is protected !!