India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
“6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணாக்கர்களுக்கு தபால் தலை சேகரிப்பு வினாடி-வினா போட்டி நடக்கவுள்ளது. வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.6,000 பரிசு பெறலாம். விண்ணப்பப் படிவத்தை https://tamilnadupost.cept.gov.in/ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். விவரங்களுக்கு 0427-2253050, 2266370 எண்களை அழைக்கலாம். இப்போட்டி செப்.20-ல் நடக்க உள்ளது” என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர் தகவல்!
சேலம் மக்களே கரண்ட் பில் அதிகமா வருதா? கவலையை விடுங்க இதுபோன்ற பிரச்னைகளுக்கு நீங்கள் EB அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்று அவசியல் இல்லை. உரிய ஆவணங்களுடன் தமிழ்நாடு அரசின் TANGEDCO என்ற செயலியில் புகார் அளிக்கலாம்.அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
சேலம் ஆகஸ்ட் 17 இன்றைய முக்கிய நிகழ்வுகள் காலை 9:30 மணி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு நிகழ்ச்சிகள் நேரு கலையரங்கம்
காலை 10:30 மணி இந்திய தொழிற்சங்க மையத்தின் ஆர்ப்பாட்டம் துப்புரவு தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யகோரி ஆட்ப்பாட்டம் (கோட்டை மைதானம்)
காலை 11:30 மணி திண்டுக்கல் இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் கோட்டை மைதானம்
அரசு பொதுத்துறை வங்கியான BOM வங்கியில் காலியாக உள்ள 500 பொது அதிகாரி (Generalist Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.93,960 வரை வழங்கப்படும். ஆக.30ம் தேதிக்குள், இந்த லிங்கை<
சேலம் மாவட்டத்தில் கடந்த 5 மாதத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 25,747 விவசாயிகளுக்கு ரூபாய் 244 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை அணுகி உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயிர்க்கடன் மற்றும் கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட அனைத்து விதமான கடன்களையும் பெற்று பயனடையலாம் என வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். clip.tn.gov.in என்ற இணையதளத்தில் நிலத்தின் சர்வே நம்பர் கொடுத்து உங்களுக்கு தேவையான தரவுகளை தெரிந்து கொள்ளலாம். இந்த தகவலை உங்களுடைய நண்பர்களுக்கும் SHARE செய்யுங்கள்.
சேலம் வழியாக இயக்கப்படும் தாம்பரம்- மங்களூரு சென்ட்ரல் (16159), பாட்னா-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (22644), திப்ரூகர்-கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (22504), ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் (13352), எர்ணாகுளம்-கேஎஸ்ஆர் பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12678) ஆகிய ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுவதால் நாளை (ஆக.17) கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது. எனினும் போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
சேலம் மாவட்ட காவல்துறை சார்பில் வங்கி தொடர்பான மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாருக்கும் OTP, PIN எண், CVV மற்றும் கார்டு எண்ணை எந்தச் சூழலிலும் பகிர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கிகள் இத்தகவல்களை ஒருபோதும் கேட்காது. வலுவான கடவுச்சொற்களை பயன்படுத்துங்கள். ஆன்லைன் நிதி மோசடிகள் தொடர்பான புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .
“சேலத்தில் சிறைத் தியாகிகள் நினைவாக ஒரு மணிமண்டபம் விரைவில் அமைக்கப்படும்; முத்தரசன் வைத்த கோரிக்கையைத் தட்டிக் கழிக்க முடியுமா?” என சேலம் மாநகர், நேரு கலையரங்கத்தில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சேலத்தில் 2-வது நாளாக இன்று நடைபெற்று வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26- வது மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “கொள்கை உறவு ஆழத்தை தலைமுறைகள் கடந்தும் சொல்ல வேண்டும். திராவிட இயக்கத்துக்கும், பொதுவுடமை இயக்கத்துக்கும் கொள்கை நட்பு உள்ளது. அண்ணன் முத்தரசன் கேட்டு நான் எதையும் தட்டி கழித்தது கிடையாது” என்றார்.
Sorry, no posts matched your criteria.