India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சேலம்: அம்மாபேட்டையில் இருந்து சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ளது குமரகிரி மலையில் அமைந்திருக்கும் தண்டாயுடபாணி கோயில். இங்கு மாம்பழம் தந்து வழிபட்டால் தொழிற் வளர்ச்சி மேம்படும், கடன் பிரச்சனை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஞானப் பழத்திற்காக நடந்த சண்டையில் வெளியேறிய முருகன் இளைப்பாறிய இடம் இது என்பது இத் தலத்தின் வரலாறு. கடன் பிரச்சனையில் தவிக்கும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படாத நிலையில் 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ரூபாய் 43.50 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சேலத்தில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 1,870.50 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாதந்தோறும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழக பொது சுகாதாரத்துறை சில வழிகாட்டுதல்கள் வெளியிட்டுள்ளது. அதில், வெளியில் வேலை செய்பவர்கள், பகல் 12 முதல் 3 மணி வரை வேலை செய்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வேலை செய்ய வேண்டுமெனில் நிழலான இடத்தில் அடிக்கடி ஓய்வெடுத்து கொள்வதும், 20 நிமிடங்களுக்கு ஒருமுறை தண்ணீர் குடிப்பதும் அவசியம் என கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. SHARE IT!
படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழங்ககளில் இயக்கப்படும் அரசு பஸ்களில் தானியங்கி கதவு அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் கோட்டத்தில் இதுவரை 1,777 பஸ்களுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மீதியுள்ள 891 பஸ்களுக்கு தானியங்களி கதவு பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதிகாரிகள் கூறினர்.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் இன்று ஏப்.,2ஆம் தேதிக்குள், <
ஏப்.02,08,10,20,22 ஆகிய தேதிகளில் எர்ணாகுளம்-டாடாநகர் எக்ஸ்பிரஸ் ரயில் (18190), ஏப்.12,13,14,15,17,18,19,20,21 ஆகிய தேதிகளில் ஆழபுலா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352), எர்ணாகுளம்- பெங்களூரு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் (12678) ஆகிய சேலம் வழியாக செல்லும் ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்படுவதால் கோவை ரயில் நிலையத்திற்கு செல்லாது; மாறாக போத்தனூர் ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும்.
சேலம் மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளது. 2024 2025 ஆம் நிதி ஆண்டில் கடந்த 31ஆம் தேதி வரை, சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட பல்வேறு வரிகள் மூலம் ரூ.165 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் 48 சதவீதம் சொத்து வரி வசூல் ஆகியுள்ளது. இதனால் வரி வசூலில் சேலம் மாநகராட்சி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். SHARE IT!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருக்கும் காயநிர்மலேஸ்வரர் கோயில் ஒரு அக்னி தலமாகும். இக்கோயிலில் உள்ள காயநிர்மலேஸ்வரரையும், அகிலாண்டேஸ்வரியையும் வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்குமாம். திருமணம் ஆனவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ஆத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தூரத்தில் கோட்டை எனும் பகுதியில் இக்கோயில் உள்ளது.
சேலம்- சென்னை விமானம் புறப்படும் நேர மாற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. நாள்தோறும் சென்னையில் இருந்து மதியம் 03.50 மணிக்கு புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், மாலை 05.00 மணிக்கு சேலம் வந்து மீண்டும் மாலை 05.20 மணிக்கு புறப்பட்டு மாலை 06.30 மணிக்கு சென்னையில் தரையிறங்கும். சேலம் விமான நிலையத்தில் மார்ச் 30- ஆம் தேதி முதல் கோடைக்கால அட்டவணை அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12.00 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால் சேலத்தில் இருந்து டெல்லி செல்லும் ஒரு லாரிக்கு ரூபாய் 800 முதல் ரூபாய் 1,000 வரை கூடுதல் செலவு ஏற்படுகிறது என்று லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். சுங்கக்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் லாரி உரிமையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.