Salem

News May 8, 2025

கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்!

image

சேலம் மாவட்டத்தில் கால்நடை மருத்துவ ஆலோசகர் பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை, மருத்துவ கவுன்சில் சான்றிதழ்களுடன் வரும் மே 22- ஆம் தேதி நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 8, 2025

ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 8, 2025

ஆறகளூர் அதிசயம்: கடன் பறந்தோடும்!

image

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே ஆறகளூரில் காமநாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வீற்றிருக்கும் கால பைரவர் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக பக்தர்களால் போற்றப்படுகிறார். அஷ்டமி திதியில் 11 தீபங்கள் ஏற்றி கால பைரவரை வழிபட்டு வந்தால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. கடன் பிரச்சனையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News May 7, 2025

சேலம் மாநகராட்சியில் ஒரே நாளில் ரூ.4.85 கோடி வரி வசூல்!

image

சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்து வரியினை ஏப்ரல் 30- ஆம் தேதி வரை செலுத்தினால் 5% ஊக்கத்தொகை (அ) ரூபாய் 5,000 வரை பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று ஒரே நாளில் ரூபாய் 4.85 கோடி வரி வசூலானதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சிக்கு சொந்தமான கடை வாடகை உள்ளிட்டவை ரூபாய் 52.05 லட்சம் வசூலாகியுள்ளது.

News May 7, 2025

சேலம்: இன்றைய இரவு ரோந்து போலிசார் விவரம்

image

சேலம் மாவட்டத்தில் இன்று (மே 1) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்கள் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News May 7, 2025

சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

image

இணைப்பு ரயில் வருகையின் தாமதம் காரணமாக, மதுரை-பெங்களூரு சிறப்பு ரயில் (06522) இன்று (மே 01) காலை 09.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய நிலையில், 03.50 மணி நேரம் தாமதமாக மதியம் 01.00 மணிக்கு புறப்படும். இதனால் சேலம் ரயில் நிலையத்திற்கு மதியம் 02.20 மணிக்கு வர வேண்டிய இந்த ரயில் மாலை 06.10 மணி வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 7, 2025

வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும் – இபிஎஸ் வாழ்த்து!

image

“வாழ்க்கை என்றொரு பயணத்திலே பலர் வருவார் போவார் பூமியிலே வானத்து நிலவாய் சிலரிருப்பார் அந்த வரிசையில் முதல்வன் தொழிலாளி” உழைப்பே உயர்வு தரும்; மனநிறைவு தரும்; ஒளிமயமான எதிர்காலத்திற்கு வழிவகுக்கும். அனைவருக்கும் எனது உளங்கனிந்த ‘மே’ தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். வியர்வை சிந்தும் கரங்கள் உயரட்டும்! உழைப்போம்! உயர்வோம்!” என அதிமுக பொதுச்செயலாளர் ஈபிஎஸ் வாழ்த்து.

News May 7, 2025

டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை இருமடங்கு உயர்வு

image

சேலம் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் தற்போது பீர் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது கோடை வெயிலின் தாக்கம் காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் பீர் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. தற்போது 4 ஆயிரம் பீர்பாட்டில் விற்பனை ஆகிறது.

News May 7, 2025

கைதிக்கு செல்போன் வழங்கிய போலீஸ் பணி நீக்கம்

image

சேலம் மத்திய சிறையில் வார்டனாக பணியாற்றியவர் சண்முககுமார் (35). இவர் தண்டனை கைதியிடம் பணம் பெற்று மொபைல் போன், கஞ்சா வழங்கியதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரித்து அறிக்கை அளித்த பின், கடந்த பிப்ரவரியில், சண்முககுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று சண்முககுமாரை பணி நீக்கம் செய்து சிறை எஸ்.பி. வினோத் உத்தரவிட்டார்.

News May 7, 2025

மாணவியை கத்தியால் குத்திய இளைஞர் சிறையில் அடைப்பு

image

மோகனப்பிரியன் (20) என்பவர் கடந்த 15-ஆம் தேதி சேலம் பழைய பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டிருந்த கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், குணமடைந்த மோகனப்பிரியனை போலீசார் நேற்று(ஏப்.29) கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

error: Content is protected !!